சத்தியமார்க்கம்.காம்

எனில் நானும் தீவிரவாதி தான் - வி.ஆர். கிருஷ்ணா அய்யர்! print Email
வாசகர் பகுதி - வாசகர் மடல்
வியாழன், 05 ஆகஸ்டு 2010 13:17

கேரள மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு, முஹம்மது நபி(ஸல்) அவர்களை கீழ்த்தரமாக சித்தரிக்கும் வகையில் கல்லூரி வினாத்தாள் ஒன்றில் கேள்வி வெளியாகியிருந்தது. இதனால் கோபம் கொண்டச் சிலர் விஷமத்தனமாகக் கேள்விகளைத் தயாரித்த ஆசிரியர் ஜோஸஃப் என்பவரின் கை மணிக்கட்டை, துண்டித்தனர். இதனைத் தொடர்ந்து, முதல்கட்ட விசாரணையில் சிலரைக் கைது செய்த காவல்துறையினர், அவர்கள் "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா" என்ற அமைப்பின் உறுப்பினர்கள் என்று அறிவித்தனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களும் அரசு இயந்திரங்களும் அரசியல் கட்சிகளும் நடத்திய "தீவிரவாத" அச்சுறுத்தல் நாடகங்கள் ஆச்சரியமானவை. ஒரு ஆசிரியரின் கையை வெட்டியது மிகவும் அநாகரீகமான, வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய செயல் என்பதில் எவருக்குமே மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அச் சம்பவத்தினைப் போன்றே, கேரள மாநிலத்தில் சமீப காலங்களாக நடந்து வரும் இஸ்லாமோஃபோபியாவினால் எழுந்த இஸ்லாமிய விரோத கருத்துருவாக்கத் தாக்குதல்கள் ஏராளம். இதனை ஃபாஸிஸ அமைப்புகளுடன் இணைந்து கம்யூனிஸ, காங்கிரஸ் வட்டங்களும் செய்து வருகின்றன என்பதே அதிர்ச்சியில் உறைய வைக்கும் தகவல்.

இப் பிரச்சனைக்காகக் காத்திருந்தது போல், ஆசிரியரின் கை வெட்டப்பட்டச் சம்பவமும் அதில் சிலரும் கைது செய்யப்பட்ட உடனேயே, கேரளா முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகங்கள், தலைவர்களின் வீடுகள் உள்துறை அமைச்சர் கோடியேரி பாலகிருஷ்ணனின் கீழ் இருக்கும் காவல்துறையால் சோதனையிடப்பட்டு ஆயுதங்கள், தீவிரவாத புத்தகங்கள், சிடிக்கள் கைக்கப்பற்றப்பட்டு விட்டதாக அவசரமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நடத்தவிருக்கும் ஆகஸ்ட் சுதந்திர தின பேரணி அணிவகுப்புக்குப் பல மாவட்டங்களில் தடை போடப்பட்டது. இதற்கும் ஒரு படிமேலாக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைத் தடை செய்ய நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.

ஒருவரின் கை வெட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பரவலாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கட்சியின் அலுவலகங்கள் சோதனையிடப்படுவதும் அக்கட்சியைத் தடை செய்ய வழக்குத் தொடுக்கப்படுவதும் ஆச்சரியகரமானது என்றால், பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பெயர் போன கம்யூனிஸ்டுகளின் ஆட்சியின் கீழ் இச்சம்பவம் நடந்தது என்பது அதை விட ஆச்சரியம்!

கேரள மாநிலத்தில், குறிப்பாக கண்ணூர் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட், ஆர்.எஸ்.எஸ் இடையிலான தாக்குதல்களில் எண்ணற்றோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மூட்டை மூட்டையாக வெடிகுண்டுகளும் ஆயுதங்களும் இரு தரப்பினரிடமிருந்தும் கைப்பற்றப்பட்டுள்ளன. இருப்பினும் இன்றுவரை, ஆர்.எஸ்.எஸ், கம்யூனிஸ்டுகளின் அலுவலகங்கள் சோதனையிடப்படவோ வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதற்காகவும் படுகொலைகள் புரிந்ததற்காகவும் அவற்றைத் தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடுக்கப்படவோ இல்லை. இவ்வளவுக்கும், இந்தக் கை வெட்டப்பட்ட வழக்கு இன்னும் விசாரணை நிலையிலேயே உள்ளது. இதுவரை அவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், கம்யூனிஸ்டுகளுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் எதிராக தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகள் எத்தனையோ இருந்தும் இதுவரை அவற்றை அடிப்படையாக வைத்து அவைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இத்தகைய பயங்கரவாதச் செயல்களால் தண்டனை பெற்று கேரள மாநில சிறைச்சாலைகளில் கிடக்கும் ஆர்.எஸ்.எஸ், கம்யூனிஸ்ட் உறுப்பினர்களோ எண்ணற்றோர்! ஆனால், பயங்கரவாதச் செயலுக்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு எதிரான தீர்ப்பு எதுவும் இதுவரையில் சொல்லப்பட்டதில்லை.

கை வெட்டப்பட்ட சம்பவம் நடந்த இந்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை முடக்கும் வேலைகளில் கம்யூனிஸ அரசு உடன் செயல்படத் துவங்கியுள்ளது. கேரள முதலமைச்சர் அச்சுதானந்தனும் முஸ்லிம்களுக்கு எதிராக இவ்விஷயத்தில் தற்போது தன் திருவாய் மலர்ந்துள்ளார். உள்துறை அமைச்சர் கோடியேரி பாலகிருஷ்ணன், "மனித உரிமைகள் அமைப்புகள் கண்காணிக்கப்பட வேண்டும்" எனவும் "அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தேவை" என்றும் மற்றொரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

இதற்கிடையில், எதிரும் புதிருமான கேரள முஜாஹித் மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் அமைப்புகளும் முஸ்லிம் லீக்கும் இணைந்து இச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்ற பெயரில், "ஜமாஅத்தே இஸ்லாமி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா" ஆகிய இரு அமைப்புகளையும் விலக்கி வைத்து கூட்டமொன்றை நடத்தி, அதில் இந்த இரு அமைப்புகளும் தீவிரவாத அமைப்புகள் என்றும் இவற்றைத் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அறிக்கையை வெளியிட்டுள்ளன.

ஃபாஸிஸத்தின் சதிக்குக் கம்யூனிஸ, காங்கிரஸ் கட்சிகள் தான் பலியாகி விட்டன என்றால், பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும் பலியாக நாங்களும் தயார் என முந்திக்கொண்டு அறிவிப்பது நகைப்புக்கு உரியதாக உள்ளது. தங்கள் அமைப்பைப் பார்த்து யாரும் தீவிரவாத முத்திரை குத்தி விடக்கூடாதே என்று பதைபதைக்கும் இக்கட்சிகள், ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் போதே அது தொடர்பாக இரு பெரும் அமைப்புகளைப் பலியிடுவது எவ்வகையில் சரி என்று சற்றுச் சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும்.

இங்கே இன்னொரு விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். ஜமாஅத்தே இஸ்லாமி, இந்தியா முழுவதும் செயல்படும் ஒரு மூத்த இஸ்லாமிய அமைப்பு. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவோ சமீபத்தில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள மூன்று அமைப்புகளை ஒன்றிணைத்து ஆரம்பிக்கப்பட்டதோடு, இந்தியா முழுவதிலும் உள்ள மற்ற மாநிலங்களில் செயல்படும் ஒத்தக்கருத்துள்ள அமைப்புகளை ஒன்றிணைத்து முழுவீச்சில் தேசிய அரசியலில் கால் பதிக்கும் முகமாக, சோஷியல் டெமோக்ரட்டிக் பார்ட்டி என்ற பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்து, அதன் ஆரம்ப விழாவிலேயே லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி, முஸ்லிம் ஓட்டுகளைக் காலம் காலமாக ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கும் முஸ்லிம் லீக் அடக்கமுள்ள மற்ற அரசியல் கட்சிகளுக்குக் கிலியை ஏற்படுத்தி முழுவீச்சில் செயல்பாட்டில் இருக்கும் அமைப்பாகும்.

 

எனவே, இதன் உறுப்பினர்களின் செயல்வேகம், அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னர் ஃபாஸிஸவாதிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது எனில், அரசியல் கட்சி ஆரம்பித்தப் பிறகு மற்ற அரசியல் கட்சிகளுக்கும் வயிற்றில் புளியைக் கரைப்பதில் ஆச்சரியமில்லை.

ஒருவரின் கை வெட்டப்பட்டச் சம்பவத்துக்குக் கட்சி அலுவலகங்கள் சோதனை, கட்சி செயல்பாடுகளுக்குத் தடை, கட்சி மீதான வழக்குகள் என அல்லோல கல்லோலப்படும் இவ்வேளையில், இந்நாட்டின் மகாத்மா எனப் போற்றப்படும் காந்தியடிகளையே படுகொலை செய்த ஃபாஸிஸ ஆர்.எஸ்.எஸ் இந்நாட்டில் சுந்திரமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதும் மாலேகான் முதல் தென்காசி வரை நாட்டில் முஸ்லிம்களின் மீது பழிசுமத்தி நடத்தப்பட்ட அநேக குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இருப்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் பயங்கரவாதக் கைகள் தான் என்பது இன்று தெளிவாகிக் கொண்டே வரும் நிலையில் அதன் அலுவலகங்கள் சோதனையிடப்படவோ, அதன் செயல்பாடுகளுக்குத் தடையிடப்படவோ அல்லது அதனைத் தடை செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படவோ இல்லை என்பதும் அதற்காக இந்த முஸ்லிம் லீக், முஜாஹித், சுன்னத் வல் ஜமாஅத் முதலான இயக்கங்கள் உடனடியாக முஸ்லிம் அமைப்புகளை ஒன்று கூட்டித் தீர்மானங்களும் போராட்டங்களும் வழக்குகளும் தொடுக்க முன்வரவில்லை என்பதும் அதிர்ச்சியிலும் அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயமாகும்.

இந்நிலையில், அனைத்து மனித உரிமை அமைப்புகளின் மீதும் புழுதி வாரி தூற்றியுள்ள கேரள உள்துறை அமைச்சர் கோடியேரி பாலகிருஷ்ணனுக்கும், தொட்டதற்கெல்லாம் தீவிரவாதம் என்ற சொற்பிரயோகத்தின் பின்னணியில் தம்மைத் தம் அயோக்கியத்தனங்களை மறைந்து கொள்ளும் உண்மையான எதிரிகளுக்கும் எதிராக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதியரசரும் பிரபல மனித உரிமை போராளியுமான வி.ஆர். கிருஷ்ணய்யர்(http://en.wikipedia.org/wiki/V._R._Krishna_Iyer), உண்மையான தீவிரவாதிகள் யார்? என்பதை இங்கு தெளிவுபடுத்துகிறார்.

னித உரிமை கழகங்கள் மற்றும் பொது சமூக அமைப்புகள் மீது கவனத்துடன் குற்றச்சாட்டுகளை வீசவும் கட்டுப்படுத்த முயற்சிக்கவும் வேண்டும். அனைத்தையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறினால், ஆங்கிலேயர்களின் கீழான அடிமை ஆட்சியிலும் அது தான் நடந்தது.

ஏற்கெனவே இந்நாட்டில், மாவோயிஸ்டுகளையும் நக்ஸலைட்டுகளையும் சந்தேகிக்கின்றோம். முதலாளித்துவ நாடுகள் மார்க்சிஸவாதிகளைச் சந்தேகிக்கின்றனர். மார்க்சிஸ்டுகளைச் சந்தேகிப்பது சரி என்பதா? சரியல்ல! இப்படி சந்தேகிக்க ஆரம்பித்தால், பொதுவாக எல்லா கட்சி, அமைப்புகளையும் சந்தேகிக்க வேண்டிய நிலைக்கு இட்டுச் செல்லும்.

மனித உரிமை அமைப்புகளை ஒருபோதும் சந்தேகப்படக்கூடாது என்பது தான் என் கருத்து. அவ்வாறெனில் என்னையும் சந்தேகப்பட வேண்டும். காரணம், நானும் மனித உரிமைகளுக்காகப் பேசுகிறேன். கடவுளே! உச்ச நீதிமன்றத்தைச் சந்தேகிக்க வேண்டும். காரணம், மனித உரிமைகளுக்காக மிக அதிகம் செயல்படுவது உச்ச நீதிமன்றமாகும்.

மனித உரிமைகள் மீறும் அரசாங்கத்தைக் கட்டுப்பாட்டில் நிறுத்துவது உச்ச நீதிமன்றம் தான். அவ்வாறிருக்கும் போது உச்ச நீதிமன்றம் ஒரு மனித உரிமை அமைப்பு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அரசியலமைப்புச் சட்டத்தையே சந்தேகிக்க வேண்டும்! ஏனெனில், மனித உரிமைகளின் அடிப்படையே அரசியலமைப்புச் சட்டமல்லவா? அரசியலமைப்புச் சட்டத்தைச் சந்தேகப்பட்டால், நீதிமன்றங்களைச் சந்தேகிக்க வேண்டும். அமைச்சர்களையும் சந்தேகப்பட வேண்டும். ஆகவே, இப்படி மொத்தமாக மனித உரிமை அமைப்புகளைக் குறித்து கூறுவது சரியல்ல.

தீவிரவாதம், தீவிரவாதம் என்று கூறுகிறார்களல்லவா! மனிதன் எப்படி தீவிரவாதியாகிறான்? எதுவுமே செய்யாமல் ஹாயாக ஒரு மனிதர் பால், பாயசம் சாப்பிட்டுச் சுகம் அனுபவித்துக் கொண்டிருக்க, மற்றொரு மனிதர் பசி, பட்டினியில் வாடுகின்றார். அந்நேரம் உணவு கிடைக்காமல் துன்பப்படும் அவன், ஹாயாக உட்கார்ந்து சுகம் அனுபவித்துக் கொண்டிருப்பவனின் கண்ணில் தீவிரவாதியாகிறான். இது சரியல்ல!

இந்நாட்டில் மனித உரிமைகள் மறுக்கப்பட்டவர்களிலிருந்து தான் தீவிரவாதிகளும் நக்ஸலைட்டுகளும் மாவோயிஸ்டுகளும் உருவாகின்றனர். மனித உரிமைகள் மறுக்கப்படுவதன் மூலம் இவர்கள் உருவாக்கப்படுகின்றனர். இந்நாட்டில் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் குசேலர்கள் தான் தீவிரவாதிகளாகவும் நக்ஸலைட்டுகளாகவும் மாறுகின்றனர். இது துப்பாக்கியின் மூலமாகவோ அரசின் கட்டுப்பாடுகளின் மூலமாகவோ நிற்கப்போவதில்லை! மீண்டும் மீண்டும் தீவிரவாதி என்ற சொற்பிரயோகம் கொண்டு பிரசங்கங்கள் நடத்துவது மூலம் எதுவும் நடக்கப்போவதில்லை!

உண்மையில் தேவையானது நீதி நடப்பாக்குதலாகும். மனித உரிமை என்று கூறினால், மனிதனுக்கு வாழ்வதற்கான உரிமை என்று அர்த்தம். அதாவது, கவுரவமாக வாழ்வதற்கான உரிமை! கவுரவமாக வாழவேண்டுமெனில், முதலில் உணவு கிடைக்கவேண்டும். நல்ல நிலையில் சுவாசிப்பதற்கான காற்று கூட இந்நாட்டில் இல்லை. காற்று அசுத்தமாகி கிடக்கிறது. தண்ணீர் அசுத்தமடைந்து கிடக்கிறது. உணவு அசுத்தமடைந்துள்ளது. இந்நாட்டில் கிடைக்கும் அநேக அத்தியாவசிய பொருட்கள் அசுத்தமானவைகளே!

இவ்வாறு அத்தியாவசியப் பொருட்களை அசுத்தமடையச் செய்யும் நபர்களைத் தான் நாம் பயப்படவேண்டும்; கவனமாக கண்காணிக்க வேண்டும்! அதல்லாமல், எல்லோரும் தீவிரவாதிகள், கவனமாக இருக்க வேண்டும், கட்டுப்படுத்த வேண்டும் என்றெல்லாம் கூறுவது சரியல்ல! முக்கியமாக மார்க்சிஸ்ட் கட்சியிலுள்ள ஒரு தலைவர் அவ்வாறு கூறக்கூடாது!

இயேசு தேவன் கூறியது, "பக்கத்து வீட்டுக்காரனை நேசியுங்கள்" என்று கூறினாரென்றால், "பக்கத்து வீட்டுக்காரனைப் பயப்பட வேண்டும்; கவனமாக இருக்க வேண்டும்; தீவிரவாதியாக இருக்கலாம்" என்று அரசியல் தலைவர்கள் இப்போது (மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவரும் கேரள உள்துறை அமைச்சருமான கோடியேரி பாலகிருஷ்ணன்) கூறுகின்றனர். இதொன்றும் சரியல்ல!

ஆசிரியரின் கையை வெட்டியது போன்ற சம்பவங்கள் ஒருபோதும் நடக்கக் கூடாததாகும். அச்சம்பவத்தில் அரசை விடவும் அமைச்சர்களை விடவும் கடுமையாக நான் அதனை எதிர்த்திருந்தேன். நம்நாட்டில் பண்பாடு மிருகத்தனமாகும் விதத்தில் செத்துப் போய்க்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் நம் நாட்டின் அரசியலாகும். அதனால் தான், மார்க்சிஸ அரசியலைக் காங்கிரஸ்காரர்கள் எதிர்க்கின்றனர். காங்கிரஸ் அரசியலை மார்க்சிஸ்டுகள் எதிர்க்கின்றனர். இந்த இரண்டு அரசியலையும் பாஜகவினர் எதிர்க்கின்றனர். இந்நாட்டிற்குத் துரோகம் அத்தனையும் இழைப்பது அரசியலாகும்(இதனை உள்துறை அமைச்சர் கோடியேரி பாலகிருஷ்ணன் ஏற்றுக்கொள்வாரா?).

இந்த ஆசிரியரின் கையை வெட்டியச் சம்பவத்திற்கான காரணத்தைஉண்மையாக விசாரித்தால், அதன் பின்னணியில் அரசியல் தான் காரணமாக அமைந்துள்ளதைக் கண்டுகொள்ளலாம். ஆனால், தீவிரவாதத்தின் பெயரில் அம்மனிதர் கையும் காலும் வெட்டுப்பட்டு மருத்துவமனையில் கிடக்கின்றார். எப்படியாவது அவரைக் காப்பாற்ற வேண்டும் என மருத்துவமனைக்கு அழைத்துக் கூறினேன்.

ஜமாஅத்தே இஸ்லாமி தீவிரவாதம் எனில் முஸ்லிம் லீக்கும் தீவிரவாதம் தான். ஜவஹர்லால் நேரு லீகை ஒருமுறை செத்துப்போன குதிரை என்று அழைத்தார். முஸ்லிம் லீக் தீவிரவாதம் என்று பலரும் கூறுவர். முஸ்லிம் லீக், ஹிந்துத்துவ அமைப்புகளைப் பற்றி தீவிரவாதிகள் என்று கூறும்.

ஜமாஅத்தே இஸ்லாமி தலைமை வகிக்கும் எஃப்.டி.சி.ஐ, நான் அங்கத்துவம் வகிக்கும் அமைப்பாகும். நான் அறிந்தவரை எஃப்.டி.சி.ஐ மக்களிடையே இணக்கமும் பரஸ்பர அன்னியோன்னியமும் உண்டாக்கவே முயற்சி செய்கிறது. மதங்களுக்கு இடையில் பகைமைக்குப் பதிலாக, சகிப்புத்தன்மையும் இணக்கத்தையும் உண்டாக்கவே முயல்கின்றது. ஆகையால் அது போன்ற அமைப்புகள் இந்நாட்டிற்குத் தேவையாதே. அது ஆரோக்கியமாக மக்களிடையே செயல்படும் அமைப்பாகும்.

வெறுமனே குற்றம் சுமத்தி ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வது அல்ல நமக்குத் தேவை. தீவிரவாத குற்றச்சாட்டுகள் கொண்டு ஒரு நன்மையும் ஆகப்போவதில்லை. அதற்கு மாறாக, நான் கூறவருவது எஃப்.டி.சி.ஐயுடனும் மற்ற அமைப்புகளுடனும் நல்லமுறையிலான அணுகுமுறை வேண்டும் என்பதே! இது போன்ற சொற்பிரயோகமல்ல நமக்குத் தேவை! நல்லது நடப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதே நமக்குத் தேவை!

விலையேற்றத்தை உருவாக்குபவர்களே தீவிரவாதிகள்! மக்களின் இரத்தத்தை உறிந்துக் குடிக்கும் விதத்தில் விலை ஏறுகிறது. அதனைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை ஏதும் எடுப்பதில்லை. விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த எதனால் அவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துவதில்லை? ஆங்கிலேயர்கள் கூட, முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் காலகட்டங்களில் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர். (அவ்வளவு எமர்ஜென்சியான காலக்கட்டத்திலேயே விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும் எனில், வளர்ச்சியடைந்த இக்காலக்கட்டத்தில் அதற்கு இந்த அரசாங்கங்களால் ஏன் முடியவில்லை?). இவர்களோ, விலையேற்றத்துக்கு எதிராக அசைந்து கொடுக்கமாட்டேன்கிறார்கள். 2000 ரூபாய்க்கான மருந்து 20000 ரூபாய்க்கு விற்கும் போது, நம் அமைச்சர்கள் தீவிரவாதம், தீவிரவாதம் என்று கூறித் தப்பமுயற்சிக்கின்றனர். அதொன்றும் வெற்றிபெறப்போவதில்லை! மக்கள் இக்கபட நாடகத்தைக் கண்டுகொள்வர். இது போன்ற சொற்களைக் கவனமாக பிரயோகிக்கவேண்டும்!

கட்சி அரசியல் தான் இந்நாட்டின் சாபக்கேடு! கட்சி அரசியல் கொண்டு எல்லோரையும் தீவிரவாதிகளாக்குகின்றனர். மக்கள் இப்போது அதிருப்தியில் உள்ளனர். எது பேசினாலும் எதைப் பார்த்தாலும் அதில் அரசியலைக் கொண்டு வருகின்றனர். தண்ணீர் இல்லை என்று கூறினால், அது அரசியலாகும். கோக்கோ கோலா அரசியலானது. குளமும் மணலும் எல்லாமே அரசியலால் அசுத்தமாகி விட்டது. உணவுக்காக எலுமிச்சையோ தேனீர் பொடியோ கூட வாங்கமுடியவில்லை. எல்லாமே அசுத்தமாகியிருக்கின்றது. ஆரோக்கியமான வகையில் எல்லோரையும் ஒன்றிணைத்துக் கொண்டு சில பொது வேலைகள் செய்ய வேண்டியதுண்டு. என்றால் மட்டுமே வாழ்வதற்கான உரிமை யதார்த்தமாகும்!

(நன்றி: முஹ்ஸின் பராரி, ப்ரபோதனம் - 7.8.2010)


ஆக்கம் : அபூ சுமையா

Trackback(0)
கருத்துக்கள் (13)add comment
0
hameed majeed:
arumaiyana katturai
1

August 10, 2010 09:06
0
அபூயாஸிர் (முபாரக்அலி-மலேசியா):
அதிகார போதை தலைக்கேறி விட்ட கம்யூனிஸ்ட்கள், அதை தக்க வைத்துக் கொள்வதற்காக எந்த நிலைக்கும் தாழ்ந்து விடுவார்கள் என்பதை கேரளா அரசியல் காட்சிகள் தெளிவாகத் தெரிவிக்கின்றது. ஓட்டு அரசியலுக்காக ஹிந்துத்துவா ஃபாஸிஸ்ட'களுடன் கை கோர்க்கவும் கம்யூனிஸ்ட்கள் தயங்க மாட்டார்கள் என்பதையும் அவர்களின் ஒருதலைப் பட்சமான நடவடிக்கைகள் உணர்த்துகின்றது. இஸ்லாமிய அமைப்பினர் இனியும் தனித்தனி அரசியல் நடத்தவதை நிறுத்திவிட்டு ஒன்று பட்டு ஒரே குடையில் நின்று செயல்பட வேண்டும். இதை உணர்ந்து செயலாற்றினாலே இந்திய அரசியலில் தாக்குப் பிடித்து நிற்க முடியும் . தமிழ்நாட்டிலுள்ள இஸ்லாமிய இயக்கங்களும் இதைப் பாடமாக எடுத்து செயல் பட்டால் மக்களுக்கு நன்மை. அடித்துக் கொண்டால் எல்லோருக்கும் தீமை.
2

August 10, 2010 09:33
0
அபூ சுமையா:
ஒரு சில தினங்களுக்கு முன்னர், ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி ஒருவனால் பாலியல் சேட்டைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு பெண்ணின் சகோதரன் அதனைத் தட்டிக்கேட்டதற்காக 8க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி அந்த நபரின் முழங்கையை வெட்டி எடுத்துள்ளனர். இந்தத் தாக்குதலில் அந்த நபரின் தாய், சகோதரி உள்ளிட்டவர்களும் பலத்தக் காயமடைந்துள்ளனர்.

கைமணிக்கட்டு வெட்டி எடுக்கப்பட்டச்சம்பவத்தில் நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலங்களைச் சோதனையிடவும் அதனைத் தடை செய்யவும் முயற்சிகள் செய்து கொண்டிருக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசு, ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்தப் பயங்கரவாதச் செயலுக்காக எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இதனை ஒரு சாதாரண தனிப்பட்ட தகராறு வழக்காக மூன்று பேர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்து விஷயத்தை மூடி விட்டது.

துரதிஷ்டவசமாக கேரள ஊடகத்துறையும் இவ்விஷயத்தை விவாதமாக்காமல் அமைதிகாத்து விட்டது. இது தான் தற்போதைய கம்யூனிஸத்தின் இழிவுநிலை! ஹிந்துத்துவத்தில் கரைந்து கொண்டிருக்கும் கம்யூனிஸம் இதே இரட்டை நிலைபாட்டைத் தொடருமெனில், ரஷ்யாவிலிருந்து துடைத்து எறியப்பட்டது போல், இந்தியாவிலிருந்தும் விரைவில் வேரோடுத் துடைத்து எறியப்படும்.

- அபூ சுமையா
3

August 10, 2010 10:46
0
புர்ஹான்.:
//இதற்கிடையில், எதிரும் புதிருமான கேரள முஜாஹித் மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் அமைப்புகளும் முஸ்லிம் லீக்கும் இணைந்து இச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்ற பெயரில், "ஜமாஅத்தே இஸ்லாமி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா" ஆகிய இரு அமைப்புகளையும் விலக்கி வைத்து கூட்டமொன்றை நடத்தி, அதில் இந்த இரு அமைப்புகளும் தீவிரவாத அமைப்புகள் என்றும் இவற்றைத் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அறிக்கையை வெளியிட்டுள்ளன.//

சுயநலம், விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லாதது - இவை முஸ்லிம்களிடம் மிகுதியாகி விட்டதனால் தான் இத்தகைய செயல்பாடுகள். முஸ்லிம்களிடையே அகீதா அடிப்படையிலான வேறுபாடுகள் பல இருந்தாலும் குறைந்தபட்சம் முஸ்லிம்கள் அனைவரையுமே கருவறுக்க துடித்துக் கொண்டிருக்கும் பாஸிச சக்திகளுக்கெதிராகவாவது சுயநலன்கள் அனைத்தையும் தவிர்த்து நமது சமுதாயம் ஒன்றுபடாதா?

கட்டுரை ஆசிரியரின் வேதனையான பதிவு. திருந்துமா நம் சமுதாயம்?
4

August 10, 2010 12:41
0
ANWAR SADATH:
அதிகார போதை தலைக்கேறி விட்ட கம்யூனிஸ்ட்கள், அதை தக்க வைத்துக் கொள்வதற்காக எந்த நிலைக்கும் தாழ்ந்து விடுவார்கள் என்பதை கேரளா அரசியல் காட்சிகள் தெளிவாகத் தெரிவிக்கின்றது. ஓட்டு அரசியலுக்காக ஹிந்துத்துவா ஃபாஸிஸ்ட'களுடன் கை கோர்க்கவும் கம்யூனிஸ்ட்கள் தயங்க மாட்டார்கள் என்பதையும் அவர்களின் ஒருதலைப் பட்சமான நடவடிக்கைகள் உணர்த்துகின்றது. இஸ்லாமிய அமைப்பினர் இனியும் தனித்தனி அரசியல் நடத்தவதை நிறுத்திவிட்டு ஒன்று பட்டு ஒரே குடையில் நின்று செயல்பட வேண்டும். இதை உணர்ந்து செயலாற்றினாலே இந்திய அரசியலில் தாக்குப் பிடித்து நிற்க முடியும் . தமிழ்நாட்டிலுள்ள இஸ்லாமிய இயக்கங்களும் இதைப் பாடமாக எடுத்து செயல் பட்டால் மக்களுக்கு நன்மை. அடித்துக் கொண்டால் எல்லோருக்கும் தீமை.


5

August 10, 2010 15:08
0
Lareena Abdul Haq:
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்களின் வேடத்தைக் கலைக்கும் விதமாக 'நச்'சென்று அமைந்திருந்தது, அபூசுமையாவின் ஆக்கம். மாஷா அல்லாஹ்! அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

அடுத்தவன் அடிக்கும்போது அரவணைத்து ஆறுதலளிக்க வேண்டிய சகோதர முஸ்லிம் அமைப்புக்கள் தூரநோக்கோ, ஆழ்ந்த ஆய்வுகளோ இன்றி சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்டிருப்பது வேதனை தருகின்றது. இனிவரும் காலத்திலாவது நம்மவர்கள் சிந்தித்து நடப்பார்களா?

முஸ்லிம்கள் அதிகமாய் உள்ள கேரள மாநிலத்தில் முஸ்லிம்கள் சார்பில் மட்டுமின்றி நியாயத்தின் சார்பில் உரத்துக் குரலெழுப்பக்கூடிய சக்திவாய்ந்த ஊடகமொன்றைக் கட்டியெழுப்ப வேண்டியது காலத்தின் தேவையாகும்.

அநீதியாளர்களை எதிர்கொள்ளத்தக்க வலிமையை, மனோதிடத்தை அல்லாஹ் நமக்கு அருள்வானாக! ரமழானில் அதன்பொருட்டு அதிகமதிகம் துஆக்களும் இறைஞ்சுவோம்; உரிய செயற்பாடுகளிலும் முனைப்போடு ஈடுபட்டு நம் சமுதாயத்தைக் காத்திரமானதாகக் கட்டியெழுப்புவோம்.

அன்புடன்,
இஸ்லாமிய சகோதரி,
லறீனா அப்துல் ஹக்
(இலங்கை)
6

August 10, 2010 20:56
0
முஹம்மத்:
காற்பரேட்டுகளிடம் சரணடைந்த கம்யுனிசம் இப்போது ஹிந்துத்வாவிடம் சரணடைந்துள்ளது...
கிருஷ்ணய்யர் போன்ற நியயவாங்களும் இங்கே இருப்பது கொஞ்சம் ஆறுதல்...
7

August 11, 2010 00:52
0
suppan:
whoever is unhappy in India,
Request you to go to pakistan or Bangladesh. You will find happiness there.
Indian
8

August 11, 2010 14:50
0
சதாம் ஹுசைன் :
சிலர் தங்களை இஸ்லாமியர்களின் தோழர்கள் என்றும்.மற்றும் சிலர் தங்களை இஸ்லாமியரின் நண்ண்பர்கள் என்றும்.வெளிப்படையாக வெள்ளை உடையானிந்து
உள்ளத்தில் காவி சிந்தனைகொண்டவர்களாகவே இருக்கிறார்கள் என்பதற்கு இந்த அபு சுமையாவின்
ஆக்கம்....அருமையாக உணர்த்துகிறது....அதில் நம் சமூதாயத்தை சேர்த்தவர்களே நம் சகோதரர்களை
தீவிரவாதிகள் ...? என்று தீர்பளித்தது வருந்ததக்கது..நம் சகோதர்களின் இந்த போக்கு நம்மை அழிக்க துடிக்கும் பாசிச சக்திகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைத்துள்ளது....ஒருபுறம்
அறியாமை ஒருபுறம்! அழியாமை!! அல்லாஹ்தான் இவர்களுக்கு நேர்வழிகாட்டி ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்த வேண்டும்....உங்களில் ஓர் இஸ்லாமிய சகோதரன் சதாம் ஹுசைன் குவைத்
9

August 11, 2010 15:22
0
Mumbaikar (Indain ):

// whoever is unhappy in India,
Request you to go to pakistan or Bangladesh. You will find happiness there.
Indian//

Mr SUPPAN first let me remind you India is not your...... private property
Secondly .... I am sure you will not justify the so called statements of Thakre & co that Mumbai is for Maharashtrians and all SUPPANS and KUPPANS ,... should go to south India and .... BHIYAA's ...North Indians should go to North India Mumbai is for Mumbaikar......etc.

Dont forget brother evil thoughts and deeds should never be justified but should be condemned, hatred will bring nothing but hatred and punishment from Almighty God oneday or another.

Leave this bias approach for the sake... if not for God at least for the sake of humanity and good sense to prevail..
10

August 11, 2010 20:37
0
haji:
it,s super
11

August 13, 2010 11:44
0
அலி இப்னு ஜமால் :
அஸ்ஸலாமு அலைக்கும்

சகோ அபு ஹம்ஸா எழுதில் நிறைய நிறை இருந்தாலும நமது இஸலாமிய இயக்கங்களை சுட்டிகாட்டி எழுதியது தவறான கருத்து ஏன் என்றால் இன்றுள்ள சூழ்நிலையில் ஒட்டுமொத்த இஸ்லாமிய இயக்கங்களையும் நசுக்கவேண்டும் என்று தான் பாசிச சக்திகள் திட்டம் தீட்டிகொண்டுள்ளன அவைகள் தீவரவாத இயக்கமா அல்லது மிதவாத இயக்கமா என்பது அவர்களின் நோக்கமல்லா எனவே அறிவுடைய எவரும் கையை வெட்டியதை சரிஎன்று சொல்லமாட்டார்கள் ஆனால் அதை பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா சகோதரர்கள் செய்தல் அதுதவறான செயல் தான் அதை அவர்கள் திருத்திகொள்ள வேண்டும் இன்னும் அறிவுப் புர்வமாகவும் நிதானமாகவும் இந்த பாசிச சக்திகளை எதிர்கொள்ள வேண்டும் இதை pfi சகோதரர்கள் தெரிந்து கொள்ளவேண்டும் இப்படிசொன்னால கோளைகள் என்று சொல்வார்கள் உன்மையில் இவர்களின் செய்ல்பாடுகள் தேசியகொடியை ஏற்றினார்கள் சல்யுட் அடித்தார்கள் அரசை சோப்போடுவதற்க்கு என்ன செய்யவேண்டுமோ அதை செய்தரர்கள் (இஸ்லாம் அதை அனுமதிக்கவில்லை) ஆனாலும் இவர்களும் இன்று தீரவாத இயக்கம் இது தான்இந்தியா இதை புரிந்து ந்டந்து மார்க்க அடிப்படையில் பிரளாமல் நடந்தால் நமக்கே வெற்றி இனஷா அல்லாஹ்

அலி இப்னு ஜமால் (கடையநல்லுர்)
12

August 13, 2010 18:29
0
Mohamed Faisel:
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நல்ல அருமையான கட்டுரை. பாசிச இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு நாங்கள் எள்ளளவும் சளைத்தவர்களில்லை என கம்யூனிஸ்டுகள் சுய பிரகடனம் செய்யும் நிலையைத்தான் இந்த விஷயத்தில் கேரளத்தில் நாம் கண்டது.

கையை வெட்டியதில் நியாயத்தையும் அநியாயத்தையும் காரணம் காட்டுபவர்கள் ஒரு பேராசியர் என்ற நிலையில் ஒரு நபரின் பொறுப்பு என்பது ஒரு வருங்கால சமூகத்தை கட்டமைப்பதில் இருக்கிறது என்ற நிலையை மறந்து அவர் செய்த இழிநிலையை மறைக்க பார்க்கின்றனர். மேலும், ஒரு கல்லூரி நிர்வாகம் அந்த கேள்வித்தாளை வெளியிட்டதும் சாதரணமாக நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாதது.

ஆனால், இன்று அவை அனைத்தும் மறைக்கப்பட்டு விட்டன. கையை வெட்டியது மட்டுமே அதுவும் ஒரு இஸ்லாமிய அமைப்பின் பெயரில் குற்றச்சாட்டு வந்தவுடன் அனைவரும் ஏகோபித்த குரலில் அதை எதிர்க்க தயாராகிவிட்டனர். ஒரு கையை வெட்டியதற்காக ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும், ஒரு இயக்கமும் தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு தடைசெய்யப்பட ஏற்பாடுகள் நடைபெறுவது என்பது நகைப்பிற்கிடமானது. அரசியல் கட்சிகளும், அரசு இயந்தியரங்களும் இவர்களின் வளர்ச்சியை கண்டு பயப்படுவதையே காட்டுகிறது.

கட்டுரையாசிரியர் சொன்னது போல, முஸ்லிம் அமைப்புகள் ஒன்று கூடி சக முஸ்லிம் அமைப்புகளை எதிர்த்து கூட்டம் போடுவதும், தடை செய்ய ஆதரவளிப்பதும் சமூகத்தின் அவலநிலையையே காட்டுகிறது. இன்னும் ஒருபடி மேலே போய் தமிழகத்தில் கூட கேரளாவில் பிரசுரித்ததை கவர்ஸ்டோரி போட்ட இஸ்லாமிய இதழ்களும் இருக்கத்தான் செய்கின்றன. எங்கே தங்கள் பெயரும் அடிபட்டு விடுமோ என அஞ்சிய ஒரு பிரபல தமிழ் முஸ்லிம் வார இதழ்கூட இதை கண்டித்து கட்டுரை எழுதியது வெட்கக்கேடானது. செய்தவர்கள் முஸ்லிம்கள் தானா? பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா சகோதரர்கள் தானா என்ற ஒரு அறிவும் இல்லாமல் கேரளா போலீஸ் சொன்னதையும், அங்குள்ள பத்திரிகைகள் பிரசுரித்ததையும் வாந்தி எடுத்தது போல (ஸாரி இந்த வார்த்தையை உபயோகித்ததற்கு...) தான் இருக்கிறது.

மொத்தத்தில் முஸ்லிம்களையும், அவர்களின் வளர்ச்சியையும் தடை செய்ய ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது. அவர்களுக்கு பலிகடாவாக சில சமுதாய இயக்கங்களும், அதன் தலைவர்களும் இருப்பதுதான் கேவலத்திலும் கேவலம்.

சகோ. அலி இப்னு ஜமால், உங்கள் பிள்ளை படிக்கும் பள்ளிக்கூடத்தில் தேசிய கொடி ஏற்றும் போது சல்யூட் அடிக்கிறானா எனப் பாருங்கள். நமக்கு மார்க்கம் தான் முக்கியம் என்று சொல்லி தயவு செய்து அவனது படிப்பை நிறுத்தி விடாதீர்கள். நீங்கள் படிக்கும் போது சல்யூட் அடிக்கும் நேரம் தேசியக் கொடியை அல்லாஹ்வுடைய அந்தஸ்தில் வைத்துதான் சல்யூட் அடித்தீர்களா? நான் அப்படி அடிக்கவில்லை என்பதற்காகவே இதை கூறுகிறேன்.

முஹம்மது பைசல்
சவுதி அரேபியா



13

August 15, 2010 13:00

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:45 மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள். எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கு அன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு தொகுப்பு வாசகர் பகுதி வாசகர் மடல் எனில் நானும் தீவிரவாதி தான் - வி.ஆர். கிருஷ்ணா அய்யர்!
Twitter
RSS
YouTube
English