சத்தியமார்க்கம்.காம்

சாதனை படைத்த சமுதாயச் செல்வி ஜாஸ்மின் print Email
ஏடு-இட்டோர்-இயல் - தலையங்கம்
வெள்ளி, 04 ஜூன் 2010 03:08

"அறிவு தேடுவது முஸ்லிமான ஒவ்வொருவர் மீதும் கட்டாயக் கடமை" என்ற நபிமொழியை, நமது சத்தியமார்க்கம்.காம் தள வாசகர் சஃபி என்பார் நமது சென்றமாத ஆக்கமான "கண்களால் செவியுறுவேன்; கல்வியில் சாதிப்பேன்" பின்னூட்டத்தில் எடுத்தெழுதி இருந்தார்.

பிறவியிலேயே பேச்சுத் திறனையும் செவிப்புலனையும் இழந்திருந்தபோதிலும் கல்வி கற்க வேண்டும் என்ற விடாப்பிடியான முயற்சியில், சகோதரி ஃபாத்திமா பானு +2 தேர்வு எழுதி, தமிழில் 177, பொருளாதாரத்தில் 196, வணிகவியலில் 198, கணக்குப்பதிவியலில் 189, பிசினஸ் மேக்ஸில் 193 மதிப்பெண்களும் பெற்று மொத்தம் 953/1000 மதிப்பெண்களோடு பள்ளியிலேயே முதல் மாணவியாக வென்றிருந்தார்.

சகோதரி ஃபாத்திமா பானுவின் சாதனையைப் பற்றிய நமது ஆக்கத்தோடு அவரது புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அது தவறானது என்ற எண்ணத்தில், "பெண்களின் புகைப்படத்தை வெளியிடுவது கூடாது" என்று நமது வாசகர் ஷாஹுல் ஹமீது பின்னூட்டம் இட்டிருந்தார். ரபிக் எனும் வாசகர் இன்னும் ஒருபடி மேலேபோய், "பெண்களைக் கல்வி கற்கப் பள்ளிகளுக்கு அனுப்பக் கூடாது" என்ற மிகத் தவறான கருத்தை எடுத்து வைத்திருந்தார். பெண்கள் தங்கள் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாத்தில் சட்டமேதும் இல்லை. "பெண்களின் கூடுதல் ஆடையான முன்றானை என்பது மார்பை மறைத்துக் கொள்வதற்கு உரியதாகும்" என்று அல்குர்ஆன் (24:31) கூறுகிறது. ஸஹீஹுல் புகாரீயின் 4759ஆவது நபிமொழிப் பதிவும் அந்த வசனத்துக்கு விளக்கமாக அமைந்துள்ளது. ஆனால், இறைமறையும் நபிவழியும் கூறும் அறிவுரைகள், சட்ட-திட்டங்கள் பற்றிய தெளிவான பார்வையில்லாத பலரும், "முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடிக் கொள்வது கடமை" என்பது  போன்ற தவறான சிந்தனையைக் கொண்டுள்ளனர். "தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி, பெண்கள் முகமலர் திரையிட்டு மறைத்து வைத்தல் என்ற பாரதியின் பாடல் வரிகள் நமக்கு வேதவரிகள் போலாகிவிட்டன" என்பதாக சகோதரி ஜஸீலா நமது கட்டுரைப் போட்டியில் பங்குபெற்று எழுதிய "எது பெண்ணுரிமை?" எனும் ஆக்கத்தில் வருந்தியது இங்குக் குறிப்பிடத் தக்கது. அறிவுத் தேடல் என்பது ஆண்-பெண் இருபாலருக்கும் பொதுவானது என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு.

"அறிந்தவர்களும் அறியாதோரும் சரிசமமா?" (39:9) என்று அல்லாஹ் கேட்கிறான்

-o-

அறிவு தேடும் கல்விப் போட்டியில் கடந்த மாதம் வெளியான எஸ்.எஸ்.எல்.ஸி தேர்வில் தமிழக முஸ்லிம் மாணவ-மாணவியர் வரலாற்றில் சாதனை படைத்து, மாநிலத்தின் முதலிடத்தைப் பிடித்துள்ளார் நெல்லைச் செல்வி யாஸ்மின்.

கடந்த 26.05.2010 அன்று வெளியான எஸ்.எஸ்.எல்.ஸி தேர்வை, தமிழகத்தைச் சேர்ந்த 4,34,223 மாணவியரும் 4,22,523 மாணவர்களும் எழுதியிருந்தனர். மொத்தம் 8,56,745 (எட்டு லட்சத்து, ஐம்பத்தாறாயிரத்து, எழுநூற்று நாற்பத்தைந்து) மாணவ-மாணவியரைப் பின்னுக்குத் தள்ளி 495/500 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதலிடம் பெற்றிருக்கும் ஜாஸ்மின் பயில்வது நெல்லை மாநகராட்சியின் கல்லணை பெண்கள் மேநிலைப் பள்ளியில்!

செல்வி ஜாஸ்மின் பெற்ற மதிப்பெண்கள்

தமிழ்

98/100

ஆங்கிலம்

99/100

கணிதம்

100/100

அறிவியல்

100/100

சமூக அறிவியல்

98/100

மொத்தம்

495/500

பள்ளிக்கு மட்டும் மாதம் ஒன்றுக்கு ஆயிரங்களை அள்ளிக் கொடுத்து, அதற்குமேல் சீருடைமுதல் சிறப்புப் பயிற்சிவரை பெருங்காசு செலவு செய்து கான்வெண்டில் படிக்க வைக்கும் பல மாணவ-மாணவியர், அவர்தம் பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய முடியாமல், படிப்பில் 'சுமாராக'வே திகழ்வதைப் பார்க்கிறோம். விதிவிலக்காகக் கல்வியில் ஒளிர்பவர்களும் இருக்கின்றனர். இந்நிலையில், ஒரு மாநகராட்சிப் பள்ளியில் பயின்று மாநிலத்தில் முதலிடம் பிடித்திருக்கும் செல்வி ஜாஸ்மின், கல்வியில் வெல்லும் சில பொதுஉத்திகளைக் கடைப்பிடித்திருக்கிறார். அவை நம் அனைவரின் மீள்சிந்தனைக்கும் உரியவை:

  • கல்வியில் கூடுதல் ஆர்வம் காட்டுவது,
  • விடாமுயற்சி
  • ஒவ்வொரு வகுப்பிலும் கல்வியில் முதலாவதாக வருவதற்கு முனைப்பு,
  • பள்ளியில் நடக்கும் பாடங்களை ஒத்திப் போடாமல் அன்றே வீட்டிலும் படித்துக் கொள்வது,
  • வெளியில் சென்று ட்யூஷன் படித்து நேரத்தை வீணாக்காதது,
  • தொலைக்காட்சி பார்க்காமல் தவிர்த்தது

கடந்த ஆண்டுகளில் நடந்தேறிய எஸ்.எஸ்.எல்.ஸி, +2 தேர்வுகளில் தேர்ச்சி பெற்று முன்னிலை வகித்த மாணவ-மாணவியர், தாம் வெற்றிபெற்றதற்குக் கூறிய தலையாய காரணமாகக் குறிப்பிட்டது "நிஜ வாழ்க்கையைத் தொலைக்கத் தூண்டும் தொலைக்காட்சிகளை பார்க்காமல்" தொலைத்துக் கட்டியதைத்தான் என்பது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

அது, வெறும் தகவல் மட்டுமன்று; மற்றெவரைக் காட்டிலும் கல்வியில் மிகப் பின்தங்கிவிட்டவர்களான முஸ்லிம் சமுதாய மாணவ-மாணவியரும் அவர்தம் பெற்றோரும் கட்டாயம் நினைவில் கொள்ளத் தக்க அறிவுரையாகும்.

மிகச்சிறு வியாபாரியாகவே 17 ஆண்டுகள் ஜவுளி வியாபாரம் செய்துவரும் தந்தை ஷேக்தாவூதுக்கு மகளாக, நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, இந்த ஆண்டின் எஸ்.எஸ்.எல்.ஸி தேர்வில் மாநிலத்தின் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்ற செல்வி ஜாஸ்மினை சத்தியமார்க்கம்.காம் உளம் நிறைந்து வாழ்த்துகிறது!

கல்லணை மகளிர் மேநிலைப் பள்ளியின் ஆசிரியர்களைப்போல் தங்கள் பள்ளி மாணவர்களின் வெற்றிக்குக் கடுமையாகப் பாடுபடும் ஆசிரியர்கள் எல்லாப் பள்ளிகளும் நிறைய வேண்டும்.

செல்வி ஜாஸ்மினைப்போல், ஷா ஃபைஸலைப்போல் பல்லாயிரம்பேர் நம் சமுதாயத்தில் உருவாக வேண்டும்; கல்வியில் முஸ்லிம் சமுதாயம் மிக்குயர்ந்து நிற்க வேண்டும்!

அல்லாஹ், தன் பேரருளைப் பொழிய வேண்டும்!

கருத்துக்கள் (20)add comment
0
அப்துல்லாஹ் M:
அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹுக்கே.

முறையாக விடாமுயற்சி செய்தால் சாதனைகள் படைப்பது சாத்தியமான ஒன்றே எனபதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு இம்மாணவியின் சாதனை.

செல்வ நிலை, செல்வாக்கான கல்விக் கூடம் போன்றது எதுமில்லாவிட்டாலும் சாதனைகள் படைப்பது இயலுமான ஒன்றே எனபதற்கு நிதர்சமான சான்று.

// கல்வியில் கூடுதல் ஆர்வம் காட்டுவது,
விடாமுயற்சி
ஒவ்வொரு வகுப்பிலும் கல்வியில் முதலாவதாக வருவதற்கு முனைப்பு,
பள்ளியில் நடக்கும் பாடங்களை ஒத்திப் போடாமல் அன்றே வீட்டிலும் படித்துக் கொள்வது,
வெளியில் சென்று ட்யூஷன் படித்து நேரத்தை வீணாக்காதது,
தொலைக்காட்சி பார்க்காமல் தவிர்த்தது //

மாணவிக்கு பாராட்டுக்கள் உரித்தாகுக, மேலும் நல்வாழத்துக்கள் மற்றும் துவாக்கள். மாணவிக்கு இந்த சூழலை ஏற்படுத்தி உதவிய பெற்றோர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

அதே போல் இது ஒரு செய்தியாக் வாசித்து விட்டு பேசிவிட்டு புகழ்ந்து விடடு உதவிகள் வழங்கி விட்டு இதர பணிகளை வழக்கம் போல் தொடராமல் இதன் மூலம் படிப்பினை பெற்று, ஊக்கம் பெற்று, தன்னம்பிக்கை அதிகறிக்கப்பட்டு, இது போன்று சாதனைகள் படைத்திடும் நோக்கத்தில், மாணவ மாணவிகளும், பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை உருவாக்கிட முறையாக முனைய வேண்டும், அதுவே இது போன்ற சாதனைகள் படைத்திடவும் வழி வகுக்கும், அல்லது மிகச் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறவேனும் வழி வகுக்கும்.

அதற்கும் அல்லாஹ் அருள் புரிந்திட பிராத்திப்போமாக...
1

June 05, 2010 23:12
0
சாகுல் ஹமீது:
304. ‘ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, ‘பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது’ என்று கூறினார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! ஏன்’ என்று அப்பெண்கள் கேட்டதற்கு, ‘நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன’ என்று பெண்கள் கேட்டனர். ‘ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, ‘ஆம்’ என அப்பெண்கள் பதில் கூறினர். ‘அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது; ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கும் ‘ஆம்!’ எனப் பெண்கள் பதில் கூறினர். ‘அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்” என்று நபி(ஸல்) கூறினார்கள்” என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.

புகாரி Volume:1 Book:6

நபிகள்நாயகம் (ஸல்) அவர்களே பெண்களுக்கு மூளையும் குறைவு, மார்க்க பற்றும் குறைவு என்று நிரூபித்துவிட்டு சென்றிருக்கிறார்கள். ஆகையால் அவர்களுக்கு எது நல்லது என்று ஆண்களுக்குத்தான் தெரியும்

இப்படி இருக்கையில் பெண்களை வெளியில் சென்று படிக்கவும், தனியாக திரியவும் அனுமதிப்பது மார்க்கத்துக்கு ஒவ்வாதது.
அவ்வளவுதான் கூறமுடியும்
2

June 10, 2010 05:46
0
யஹ்யா:
ஐயா சாலமீது..


மேற்சொன்ன ஹதீதின் சாரம் பெண்கள் பலவீனமானவர்கள். அதனால் அவர்களுக்கு கூடுதல் அறிவும் கல்வியும் அவசியமாகிறது என்று பொருள்.

உம்மைப்போன்ற காட்டுமிராண்டிகள் ஹதீதிற்க்கு விளக்கம் சொன்னால் இப்படித்தான் ஆகும்.
3

June 10, 2010 08:53
0
சஃபி:
//‘ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, ‘ஆம்’ என அப்பெண்கள் பதில் கூறினர். ‘அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது; ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கும் ‘ஆம்!’ எனப் பெண்கள் பதில் கூறினர். ‘அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்” என்று நபி(ஸல்) கூறினார்கள்//

அண்ணே சாகுல் ஹமீது,
சாட்சியாக வருவது, நோன்பையும் தொழுகையும் விடுவது ஆகிய இரண்டை மட்டுமே பெண்களின் குறையாக 'அதுதான்', 'அதுதான்' என்று இரண்டு தடவை ரசூலுல்லா குறிப்பிட்டிருப்பதாக நீங்க எடுத்துப்போட்ட ஹதீஸ் தெளிவாகத்தானேங்க இருக்குது.

நீங்க ஏனுங்க "பொம்பளைங்க ஒன்னுக்கும் ஒதவதவங்க"ன்னு ரசூலுல்லா சொன்ன மாதிரி தலைகீழ விளக்கம் கொடுக்கிறீங்க?
4

June 10, 2010 12:02
0
சாகுல் ஹமீது:
சகோதரர் யஹ்யா,

பெண்கள் பலவீனமானவர்கள். அதனால் அவர்களுக்கு கூடுதல் அறிவும் கல்வியும் அவசியமாகிறது என்று பொருள் என்றால், உங்களை விட நன்றாக படித்த பெண்ணின் சாட்சியத்தை அல்லது செல்வி ஜாஸ்மினின் சாட்சியத்தை இரண்டு ஆண்களுக்கு சமானமாக எடுத்துக்கொள்வீர்களா?


சகோதரர் சஃபி,

ஒருவர் அறிவு குன்றியவர் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், அதற்கு ஒரு உதாரணத்தை சொன்னால், அந்த ஒரு உதாரணம் மட்டுமே அவரிடம் உள்ள குறை என்று நினைப்பீர்களா?

-
இந்த கட்டுரையை எழுதியவருக்கு...
"தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி, பெண்கள் முகமலர் திரையிட்டு மறைத்து வைத்தல் என்ற பாரதியின் பாடல் வரிகள் நமக்கு வேதவரிகள் போலாகிவிட்டன" என்பதாக சகோதரி ஜஸீலா கூற்யதை ஒப்புக்கொண்டு மேற்கோள் காட்டுகிறீர்கள்.
இது தில்லித்துருக்கர் வழக்கமென்றால், ஏன் நபிகள் நாயகம்(ஸல் ) அவர்கள் காலத்திலேயே இது இருந்தது என்று விளக்க முடியுமா?

http://tamililquran.com/bukharisearch.php

சஹி புகாரியில் “முகத்திரை” என்று போட்டு தேடிப்பாருங்களேன். அதில் எத்தனை ஹதீஸ்கள் வருகின்றன என்று தெரியும்.

5

June 11, 2010 03:56
0
யஹ்யா :
ஐயா சாலமீது..

பெண்களுக்குத் தனி சிறப்புரிமைகள் பல விஷயங்களில் கொடுக்கப்பட்டுள்ளது போல, ஆண்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி ஏற்கனவே பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார்கள். இன்னும் எழுதி விளக்க முடியும். ஆனால் உம்மைப்போன்ற சுவர் முட்டிகளுக்கு அது வீண்வேலை.

எப்போது ஹதீஸில், பெண்களுக்கு மூளை குறைவு என்று கண்டுபிடித்தீரோ அப்போதே உமது இருப்பிடம் எது என்று தெரிந்துவிட்டது. இன்னும் நிறைய இப்படியே கேளும். உம்மைப் போன்றவர்களை புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
6

June 11, 2010 12:22
0
சாகுல் ஹமீது:
அய்யா யஹ்யா,
பெண்களுக்கு தனிச்சிறப்புகள் இருக்கின்றன என்பதை நான் மறுக்கிறேனா? என்னவோ நான் அவற்றையெல்லாம் மறுப்பது மாதிரி ஏன் இப்படி பேச்சு. அதனை பற்றி நான் ஒன்றுமே சொல்லவில்லையே? அதற்குள் சுவர் முட்டி, சாலமீது என்றெல்லாம் அவதூறு பொழிய ஆரம்பித்துவிட்டீர்களே..

பெண்களுக்கு அறிவு குறைவு என்று நான் கண்டுபிடிக்கவில்லை. அது ஹதீஸில் நான் பிறப்பதற்கு முன்னரே இருந்து வருகிறது.

இல்லாத பொய்களை எழுதவேண்டியது. பிறகு ஹதீஸில் இப்படி இருக்கிறதே என்று கேட்டால் அவதூறு பொழிய வேண்டியது.. இதன் மூலம் என்ன சாதிக்க நினைக்கிறீர்கள்?

இப்படி அவதூறாக எழுதுவதற்கு பதிலாக, நான் குறிப்பிட்டுள்ளவற்றை ஆதாரப்பூர்வமாக மறுக்கலாமே?
7

June 12, 2010 04:00
0
யஹ்யா:
ஐயா சாலமீது...

உமக்கு விண்வெளியின் கூறுகள் பற்றி எதுவும் தெரியாது. அதை நீர் படிக்கவில்லை. அந்த அறிவு உமக்கு இல்லை. ஆனால், இப்படி குதர்க்கம் பேசுகிறீர். அந்த அறிவு உமக்கு இருக்கிறது. முதல் சொன்ன விஷயத்தில் அறிவில்லை என்பதற்க்காக சாலமீதுக்கு மூளை இல்லை என்று சொல்வது எப்படி அபத்தமாகுமோ அதுபோல் தான் இதுவும்.

மார்க்கக் கடமையில் குறைவு என்பது, அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவது பெண்ணிற்க்கு கடமை. அதனால் மார்க்கக் கல்வியில் குறைவாக செய்கிறார்கள்.

உமது வியக்கியானம், "நபிகள்நாயகம் (ஸல்) அவர்களே பெண்களுக்கு மூளையும் குறைவு, மார்க்க பற்றும் குறைவு என்று நிரூபித்துவிட்டு (!!) சென்றிருக்கிறார்கள்" .

இதனால் தான் நீர் சுவர்முட்டி என்று சரியாகச் சொன்னேன்.


8

June 12, 2010 12:38
0
யஹ்யா:
ஐயா சாலமீது..

ஐயோ சுவர்முட்டி என்பது அவதூறல்ல. எங்கள் பகுதியில் மாலை வேளையில் சிலர் கட்டைச்சுவர் மீது முட்டிக்கொண்டி அந்தப்பக்கம் போக யத்தனிப்பார்கள். அவர்களுக்கு நேர் பின்னால் திறந்த விசாலமான வெளி யிருக்கும். யாராவது போய் திருப்பி விடவேண்டும்.

அதைப்போல் தான் உமது குழப்பமும்.

ஹதீசில் இருப்பது:" பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் "

உமது தெளிவு (குழப்பம்): "மூளையும் குறைவு, மார்க்க பற்றும் குறைவு"

இரண்டிற்க்கும் மலை அளவு வித்தியாசம் இருக்கிறது உமக்குத் தெரியவில்லை. அதனால் தான் ஹி..ஹி..ஹி..
9

June 12, 2010 13:43
0
G u l a m :
அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக ! , அன்பின் சாகுல் ஹமீது., தங்கள் மேற்கோள் காட்டிய ஹதீஸில் பெரும்பான்மையான பெண்கள் நரகத்திற்கு செல்வதற்கு காரணமாக அமையும் செயல்கள் குறித்தே நபிகள் (ஸல்) அவர்கள் எச்ச்சரிக்கிறார்கள். நாயகம்(ஸல்) அவர்கள் ஒரு செயல் பற்றி குறிப்பிடும் போது அது தீய செயலாக இருப்பின் அதை முற்றிலும் தவிர்ப்பதும் ., நற்செயலாக இருப்பின் அதை முடிந்தவரை தொடர்வதும் ஹதிஸ்கள் குறித்த பொதுவான விதி, அதனடிப்படையில் இது பெண்களுக்கான அவர்கள் தவிர்க்கவேண்டிய செயல்கள் குறித்து சொல்லப்பட்ட அறிவுரை என்றே பொருள் கொள்க, ஏனெனில் ., தாங்கள் கூறுவது போல் நாயகம் (ஸல்)அவர்கள் பெண்களை குறைமதியாளர்கள் என்ற கண்ணோட்டத்தில் அணுகியிருந்தால் நமதன்னை ஆயிஷா(ரலி) அவர்களை தங்களின் ஹதிஸ்களை அறிவிப்பு செய்வதற்கு தங்களது வாழ்நாளிலேயே தடுத்திருப்பார்கள் இதன்முலமாக மட்டுமில்லாமல் ஏனைய ஆண் சஹாபாக்கள் அபூஹிரைரா(ரலி),அனஸ்(ரலி),அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) போன்றோர்களுக்கு இணையாக ஹதிஸ்களை அறிவித்ததன் முலம் அவர்கள் கூர்மதியாளர்களாகவும்,மனன சக்திமிக்கவர்களாகவும் இருந்தார்கள் என்பதையும் அறியலாம் .
மேலும், அல்லாஹ் தன் திருமறையில்., "எவர் தீமை செய்கிறாரோ, அவர் அதைப் போன்றதையே கூலியாகக் கொடுக்கப்படுவார்; எவர் ஒருவர், ஆணோ அல்லது பெண்ணோ முஃமினான நிலையில் ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறாரோ அவர்கள் சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்; அதில் கணக்கில்லாது அவர்கள் உணவளிக்கப்படுவார்கள்.(40:40)
என்று கூறுவதின் மூலம் மேற்கண்ட ஹதிஸை ஒப்பு நோக்கினால் இறுதி நாள் வரை வரக்கூடிய பெண்களுக்காக பெருமானார் பகன்ற ஓர் அறிவுரை என்பதையும் அறியலாம்
தாங்கள் சமூக பெண்களின் மீது கொண்ட அக்கறை காரணமாக இவ்வாறு வேண்டுமானால் கூறலாம்., கல்விப் பயிலும் காலங்களில் நட்பு எனும் பெயரில் ஆண்களும் பெண்களும் இரண்டற கலந்து பழகுவதும்,நாகரிகம் எனக்கூறி கலாச்சார சீரழிவுக்கு வழி காணாமலும் இருப்பது அவசியம் சுருங்கக்கூறின்,அக்காலங்களில் மாற்றாருடன் ஏற்படகூடிய தொடர்பு மார்க்கத்திற்கு முரணான காரியத்தின் பால் செல்ல வழிவகுத்து விடகூடாது, -என்பதே மார்க்கம் பேணும் நடுநிலைமையாளர்களின் சிந்தனையாக இருக்க முடியும்! (அல்லாஹ் நன்கறிந்தவன்)
எனது கருத்தில் ஏதேனும் தவறிருப்பின் தெரியபடுத்தவும்.இறை நாடினால் தாங்கள் பதிவுக்காக காத்திருக்கும்

-ஓர் இறை அடிமை
10

June 13, 2010 07:15
0
சாகுல் ஹமீது:
சகோதரர் யஹ்யா,
என்னை அவதூறு செய்வதை விட்டுவிட்டு கீழே எழுதியுள்ளதற்கு பதில் கூற பாருங்கள்.

பெண்கள் பலவீனமானவர்கள். அதனால் அவர்களுக்கு கூடுதல் அறிவும் கல்வியும் அவசியமாகிறது என்று பொருள் என்றால், உங்களை விட நன்றாக படித்த பெண்ணின் சாட்சியத்தை அல்லது செல்வி ஜாஸ்மினின் சாட்சியத்தை இரண்டு ஆண்களுக்கு சமானமாக எடுத்துக்கொள்வீர்களா?
அல்லது படிக்காத இரண்டு ஆண்களின் சாட்சியத்துக்கு ஈடாக ஒரு பெண்ணின் சாட்சியத்தை எடுத்துகொள்ளலாமா?

சொல்லுங்கள் கேட்க ஆவலாக இருக்கிறேன்.
-

-
இந்த கட்டுரையை எழுதியவருக்கு...
"தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி, பெண்கள் முகமலர் திரையிட்டு மறைத்து வைத்தல் என்ற பாரதியின் பாடல் வரிகள் நமக்கு வேதவரிகள் போலாகிவிட்டன" என்பதாக சகோதரி ஜஸீலா கூற்யதை ஒப்புக்கொண்டு மேற்கோள் காட்டுகிறீர்கள்.
இது தில்லித்துருக்கர் வழக்கமென்றால், ஏன் நபிகள் நாயகம்(ஸல் ) அவர்கள் காலத்திலேயே இது இருந்தது என்று விளக்க முடியுமா?

http://tamililquran.com/bukharisearch.php

சஹி புகாரியில் “முகத்திரை” என்று போட்டு தேடிப்பாருங்களேன். அதில் எத்தனை ஹதீஸ்கள் வருகின்றன என்று தெரியும்.

ஒவ்வொரு ஹதீஸையும் எடுத்து விளக்க முடியும்.
11

June 13, 2010 18:24
0
சத்தியமார்க்கம்.காம்:
அன்பான வாசகர் ஷாஹுல் ஹமீது அவர்களுக்கு,

"பெண்கள் தங்கள் முகங்களை மறைத்துக் கொள்வது கட்டாயம்" என்று கட்டளையிடும் குர்ஆன் - ஹதீஸ் ஆதாரங்களை நீங்கள் தயவு செய்து இங்கு வையுங்கள். அவற்றைப் பரிசீலித்து அவற்றின் அடிப்படையில் இந்த ஆக்கத்தில் திருத்தங்கள் செய்வதில் எங்களுக்குத் தயக்கம் இருக்காது.

நன்றி!
12

June 13, 2010 21:29
0
சத்தியமார்க்கம்.காம்:
அன்பான வாசகர் யஹ்யா அவர்களுக்கு,

கலந்துரையாடலில் வரம்பு மீறுதல் நமது பண்பாட்டுக்கு அழகன்று. அழகிய முறையில் கலந்துரையாடலாமே!

நன்றி!
13

June 13, 2010 21:31
0
அமீன்:
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் யஹ்யா அவர்கள் தங்களின் கருத்தில் மென்மையை கடைபிடிக்க வேண்டும் நாம் புரியாதவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். சகோ சாகுல் அந்த ஹதீஸை தவராக புரிந்து விட்டார்கள். நாம்புரிய வைக்கவேண்டும் அது நமது கடமை. இஸ்லாத்தில் கல்வி ஆண்,பெண் இருவருக்கும் கட்டாய கடமை ஒரு பெண் கல்வி கற்றால் அந்த குடும்பமே கல்வி உடயதாக ஆகி விடும். நாம் ஆண்கள் சம்பாதிக்க வெளியே சென்று விடுகிறோம். பிள்ளைகளுக்கு யார் கற்று கொடுப்பது.? ஆனால் சாகுல் பாய் பயப்படுவதுபோல முதலில் மாக்க கல்வி பெண்களுக்கு மிக அவசியம் அப்போதுதான் நவீன பெண்களாக மாறாமல் ஒழுக்கமாக இருப்ார்கள். இல்லை என்றாால் தஸ்லீமாதான். ஒழுக்கத்துடன் பாதுகாப்பாக முடியும் என்றால் தாலாரமாக படிக்கலாம் படிக்க வேண்டும்
14

June 15, 2010 21:23
0
சாகுல் ஹமீது:
அன்புள்ள சத்தியமார்க்கம்,காமுக்கு

http://tamililquran.com/bukharisearch.php

சஹி புகாரியில் “முகத்திரை” என்று போட்டு தேடிப்பாருங்களேன். அதில் எத்தனை ஹதீஸ்கள் வருகின்றன என்று தெரியும்.

ஒவ்வொரு ஹதீஸையும் எடுத்து நீங்களே எப்படி ஹதீஸ்கள் தவறு என்று விளக்குங்கள்.

மேலும் விளக்கத்துக்கு இந்த இணைப்பை பாருங்கள்.

http://www.seekingilm.com/seekingilms-research/niqab

இங்கே வாதிட விரும்பவில்லை. உங்களுக்கு ஏதோ உள்நோக்கம் இருப்பது போல தெரிகிறது.
15

June 16, 2010 02:45
0
U F O:
அன்புள்ள அப்துல் ஹமீது(சாகுல் ஹமீது),
அஸ்ஸலாமு அலைக்கும்.

ஹதீஸ்களை பொருத்தவரை இரு தரப்பும் அவரவர்க்கு சாதகமான ஹதீஸ்களை -நிறையை இருப்பதால்- எடுத்து வைப்பார்கள். அதில், சஹி/லயிப்/முர்தத்/அறிவிப்பாளர் வரிசை தொடர்/ நம்பகமற்றவர்/மறதியாளர்... என்று ஆயிரம் சிக்கல்கள் இருப்பதால், நாம் குரானுக்கு வருவோம். இந்த விஷயத்தில், 24:31 & 33:59 ஆகிய இரு ஆயத்துகளை எடுத்துக்கொள்வோம்.

24:31-இல், 'ஜூயுபிஹின்ன' என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் தெரிந்துவிட்டால் மேட்டர் குளோஸ்.

33:59-இல், 'ஜலாபிபிஹின்ன' என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் தெரிந்துவிட்டால் மேட்டர் குளோஸ்.

http://www.islamawakened.com/quran/24/31/default.htm
http://www.islamawakened.com/quran/33/59/default.htm

இவற்றில் சென்று பார்த்தால்...ஏனோ தெரியவில்லை, ஒவ்வொரு தர்ஜுமாவிலும் இவ்விரு வார்த்தைகளுக்கும் ஒரேமாதிரியாக அர்த்தங்கள் சொல்லப்படவில்லை.... தமிழிலும் அப்படியே... பிராகட் வியாக்கியானங்கள்...

'ஹஜ்/உம்ரா செய்யும்போது பெண்கள் முகத்தை மறைக்க தடுக்கப்பட்டிருக்கின்றனர்' என்பதை ஹதீஸிகளிலிருந்து விளங்குகிறோம். எனவே, அக்கால சஹாபி பெண்கள் முகத்தை மறைப்பதை வழக்கமாய் கொண்டிருந்து இருக்கிறார்கள் எனபது விளங்குகிறது. ஆனால், அது மார்க்க கட்டாயமானதாக இருந்ததா என்ற கேள்வி எழுகின்றது. ஏனென்றால், அதே ஹஜ்/உம்ரா சமயம் ஆண்கள் தலையை மறைக்கக்கூடாது என்பதும் அதே ஹதீஸ்களில் தானே தெரிந்து கொள்கிறோம்? எனில், ஆண்கள் தலை மறைத்தல் கட்டாயமானதாக இருந்ததா? இல்லையே! எனவே, பல ஹதீஸ்களில் முகம் மறைத்த பெண்கள் பற்றி வருவதேன்னவோ உண்மைதான். அது மார்க்க அளவில் கட்டாயமானதாக இருந்ததா அல்லது அவரவர் விருப்பத்தின் அளவில் இருந்ததா என்பதை விளங்க நான் குறிப்பிட்ட அந்த இரு வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் தேவைப்படுகிறது.
யாராவது விளக்கம் தர வேண்டுகிறேன்.

பின்குறிப்பு: சாகுல் ஹமீது என்றால் என்ன அர்த்தம் என்று தெரிந்தே இப்பெயரை வைத்திருக்கிறீர்களா?
16

June 17, 2010 02:27
0
M Muhammad:
அஸ்ஸலாமு அலைக்கும்

முகத்தை மறைத்தல் உருவப்படங்கள் போன்ற விஷயங்களில் அறிஞர்கள் மத்தியில் இரு வேறு எதிர் கருத்துகள் நிலவுகின்றது. அதே நேரம் தவிர்க்க இயலாத விஷயங்களில் இவற்றிற்கு த்டையில்லை என்பதும் ஒரு மூன்றாவது கருத்தாக உள்ளது.

நடைமுறை வாழ்க்கையில், முகத்தை மறைப்பது அவசியமா இல்லையா என்பதைவிட உருவப்படம் அவசியமா இல்லையா என்பதை விட இங்கு கருப்பொருள் மீடியா அல்லது இணைய செய்திகளுக்கும் இது அவசியமானதா அல்லது தவிர்க்க இயலுமா என்று பார்த்து மேலும் சந்தேகமானவற்றிலிருந்து விலகியிருப்பது சிறந்ததும் தடுக்கப்பட்டதில் வீழ்ந்து பாவங்களில் ஈடுபடுவதை தவிர்திட வழி வகுக்கும் எனும் கதீஸின் அடிப்படையில் இது போன்ற cஎய்திகளில் அதிலும் குறிப்பாக பெண்கள் சம்பந்தமானவற்றிலாவது ப்டங்களை குளோஸப்பை தவிர்த்து cஎய்தி வெளியிட்டால் cஎய்தியின் ப்லனும் நோக்கமும் உணரப்படாமல் இவ்வாறு வாதங்களில் நேரம் கழிவதை தவிர்க்கலாமே சத்தியமார்க்கம்.காம் சகோதரர்கள் இதை கடைபிடித்து முன்மாதிரியாக திகழ்வீர்களக. அல்லாஹ் மிக அறிந்தவன் அல்லாஹ் போதுமானவன்.
17

June 18, 2010 10:37
0
anbar:

2421. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
அப்து இப்னு ஸம்ஆ(ரலி) அவர்களும் ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களும் ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனின் விஷயத்தில் (தமக்குள் ஏற்பட்ட தகராறைத் தீர்த்துக் கொள்ள) நபி(ஸல்) அவர்களிடம் வழக்கொன்றைக் கொண்டு வந்தனர். ஸஅத்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரர், 'நீ (மக்காவுக்குத் திரும்பிச்) சென்றால், ஸம்ஆவுடைய அடிமைப் பெண்ணின் மகனைக் கண்டு (அழைத்து வந்து) பராமரி. ஏனென்றால், அவன் என்னுடைய மகன்' என்று என்னிடம் (மரணப் படுக்கையில் தன் இறுதி விருப்பமாகக்) கூறியிருந்தார்" என்றார்கள். அப்து இப்னு ஸம்ஆ(ரலி), 'அவர் என் சகோதரர்; என் தந்தையின் அடிமைப் பெண்ணின் மகன்; என் தந்தையின் ஆதிக்கத்தில் அவன் இருந்தபோது பிறந்தவர்" என்று கூறினார். அந்த அடிமைப் பெண்ணின் மகனிடம் (ஸஅதுடைய சகோதரர்) உத்பாவின் சாயலைத் தெளிவாகக் கண்ட நபி(ஸல்) அவர்கள், 'அப்து இப்னு ஸம்ஆவே! அவன் (சட்டப்படி) உனக்கு உரியவனே. (ஏனெனில், ஒரு பெண், யாருடைய ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே அவள் பெற்றெடுத்த குழந்தை சொந்தமாகும். விபச்சாரம் செய்வதவருக்கு இழப்புதான் உரியது" என்று (தீர்ப்புக்) கூறினார்கள். பிறகு ,தம் மனைவி சவ்தா(ரலி) அவர்களை நோக்கி, 'சவ்தாவே! இந்த இளைஞனிடம் நீ ஹிஜாபைப் பேணிக் கொள். (உன்னை நீ திரையிட்டு மறைத்துக் கொள்.)" என்று கூறினார்கள்.

Volume:2 Book:44

--
அன்னிய ஆடவர் யாராகிருந்தாலும் முகத்திரை போடவேண்டுமென்பதுதான் நியதி.
18

June 19, 2010 02:43
0
சத்தியமார்க்கம்.காம்:
anbar,

ஹிஜாப் என்பது உடை மட்டும் சம்பந்தப் பட்டதல்ல. அதனால்தான் நீங்கள் குறிப்பிட்டுள்ள ஹதீஸின் இறுதியில் (உன்னை நீ திரையிட்டு மறைத்துக் கொள்.)" என்று மொழியாக்கியோரின் கருத்தை ப்ராக்கெட்டுக்குள் போட்டிருக்கிறார்கள்.

ஹிஜாப் என்ற சொல்லுக்கான கூடுதல் விளக்கங்களை http://islamicdress.blogspot.com/2005/08/dr.html என்ற சுட்டியில் படித்து விட்டு மீண்டும் இங்கு வந்து உங்கள் கருத்தை எழுதுங்கள்.

இப்னு ஸம் ஆவை நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுக் கூறியதன் காரணத்தையும் அன்னை ஸவ்தா அவர்களுக்கும் இப்னு ஸம்ஆவுக்கும் என்ன உறவு என்பதைப் பற்றியும் நீங்கள் படித்திருக்கவில்லையா?
19

June 19, 2010 10:56
0
Rafiq:
சத்தியமார்க்கம்.காம்,

திரையிட்டு மறைத்துகொள் என்பது தமிழிலிஸ்லாம்.காமின் சொந்த கருத்தா?

ttp://www.seekingilm.com/seekingilms-research/niqab
இந்த பக்கத்தை படித்துவிட்டீர்களா?

ஜாகிர்நாயக் சொல்லுவதெல்லாம் சரியா? அவர் பொய்கள் சொல்லுகிறார் என்று அவர் மீது எத்தனை பத்வாக்கள் இருக்கின்றன என்று தெரியுமா? முகத்தை காட்டலாம் என்பதற்கு என்ன ஆதாரத்தை காட்டுகிறார்?

“It is not narrated that the Prophet (sallallahu ‘alayhi wa ‘alaa Aalihi wa sallam) forbade the woman in ihraam to cover her face; rather he forbade the niqaab only because it is worn on the face (i.e. Niqāb is the part that is separate from the garment and tied to the face, unlike that of covering the face with Jilbāb, as it it is part of the garment). He differentiated between the niqāb and covering the face. Based on this, if a woman in ihrām covers her face, we say there is nothing wrong with that, but it is better for her to uncover it so long as there are no non-mahram men around her, in which case she should cover her face from them.” [Al-Sharh al-Mumti’, 7/153]

--
وعن عائشة : ” …… وكان صفوان بن المعطل السلمي ثم الذكواني من وراء الجيش فأصبح عند
منزلي فرأى سواد إنسان نائم فعرفني حين رآني وكان رآني قبل الحجاب فاستيقظت
باسترجاعه حين عرفني فخمرت وجهي بجلبابي ” .
رواه البخاري ( 3910 ) ومسلم ( 2770 ) .

It was narrated from ‘Aa’ishah that Safwaan ibn al-Mu’attal al-Sulami al Dhakwaani was lagging behind the army. She said, “He came to where I had stopped and saw the black shape of a person sleeping. He recognized me when he saw me, because he had seen me before Hijāb was enjoined. I woke up when I heard him saying ‘Inna Lillaahi wa inna ilayhi raaji’oon (verily to Allaah we belong and unto Him is our return),’ and I covered my face with my Jilbāb.” (Narrated by al-Bukhāri, kitāb al maghazi – bābu Hadīth ul ifk, 4141; Muslim, 2770)
Proof 4: The Hadīth of Hafsah bint Sireen.


وعن عاصم الأحول قال : كنا ندخل على حفصة بنت سيرين وقد جعلت الجلباب هكذا : وتنقبت
به ، فنقول لها : رَحِمَكِ الله قال الله تعالى : ( وَالْقَوَاعِدُ مِنَ النِّسَاءِ
اللاَّتِي لاَ يَرْجُونَ نِكَاحاً فَلَيْسَ عَلَيْهِنَّ جُنَاحٌ أَن يَضَعْنَ
ثِيَابَهُنَّ غَيْرَ مُتَبَرِّجَاتٍ بِزِينَةٍ ) ، قال : فتقول لنا : أي شئ بعد ذلك
؟ فنقول : ( وَأَن يَسْتَعْفِفْنَ خَيْرٌ لَهُنَّ ) فتقول : هو إثبات الجلباب. رواه
البيهقي ( 7 / 93 (

It was narrated that ‘Aasim al-Ahwal said: We used to enter upon Hafsah bint Sirīn who had put her Jilbāb thus and covered her face with it, and we would say to her: May Allah have mercy on you. Allaah says (interpretation of the meaning): “And as for women past childbearing who do not expect wedlock, it is no sin on them if they discard their (outer) clothing in such a way as not to show their adornment” [al-Noor 24:60]. And she would say to us: What comes after that (of the āyah)? We would say: “But to refrain (i.e. not to discard their outer clothing) is better for them”. And so she said: [Referring to, 'But to refrain is better for them'], “It is to keep the Jilbāb.” [Narrated by al-Bayhaqi, 7/93. It is Authentic]
--

رواه ابن أبي خيثمة ، من طريق إسماعيل بن أبي خالد ، عن أمه قالت : « كنا ندخل على
أم المؤمنين يوم التروية ، فقلت لها : يا أم المؤمنين ، هنا امرأة تأبى أن تغطيَ
وجهها وهي محرمة ، فرفعت عائشة خمارها من صدرها فغطَّت به وجهها »

Ibn Abi Khaythamah reports from the way of Ismaa’eel ibn Abi Khaalid from his mother that she said,

“We entered upon Umm Al-Mu’minīn on Yawm At-Tarwayah and we said to her, ‘Oh Mother of the Believers! Here is a woman who refuses to cover her face and she is a Muhrimah (in ihrām). So ‘Aa’ishah lifted her Khimār from her chest, and covered the woman’s face with it.”



20

June 20, 2010 19:10

கருத்து எழுதுக :
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

Random Quran Verses

2:42 நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.

English News

புதிய கருத்துக்கள்

சஃபி : அன்பான ஷாலினி, உங்களுக்கு அண்மையிலு...


Bharat : இந்தியாவை துண்டாட, காஷ்மீரத்தை பிரிக...


அ.அப்துல் ஹமீத் : வெற்றீ பெற்ற்வர்களுக்கு வாழ்த்துக்...


Satyamargam.com : Dear Shalini, Thanks for visiting and your valuable comment. May Almighty in His Infinite Mercy and...


Shalini : Hai, I am Shalini. I am hindu. But i know all the details about allah. I want to convert muslim. in ...


vijay : kudia sekaramaa varuvainga.......... ..................by your friend ..........................vija...


ANEES FATHIMA : அஸ்ஸலாமு அலைக்கும் எல்லா பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய நல்ல குறிப்புக்கள்


sarfdin : அருள் முருகன் சகோதரா முஸ்லிம்களில் ப...


Naseema : அறிவுப்போட்டிகளை பல தளங்கள் வெளியிட...


ummu afsy : salaamz,ALLHA has given eough freedom for woman,so may all muslims and non-muslim must support all m...


MOHAMED RAFI : RAFI, THIS VERY INFROMATIVE


A.JAHIR HUSSAIN.Sharjah UAE { ATHALAIYUR } : அஸ்ஸலாமு அலைக்கும்... புனித மிகு ரமலா...



You are here  : முகப்பு தலையங்கம் சாதனை படைத்த சமுதாயச் செல்வி ஜாஸ்மின்