| உலக மகளிர் தினமும் மகளிருக்கான ஒதுக்கீட்டில் இந்திய முஸ்லிம்கள் புறக்கணிப்பும்! |
|
|
| வாசகர் பகுதி - முனைவர் முஹம்மத் அலி IPS பக்கம் | |||
| திங்கள், 08 மார்ச் 2010 23:38 | |||
|
ஆனால் அந்த உரிமை, கலப்பின இஸ்லாமிய வம்சாவழியில் வந்த பராக் உபாமா ஜனாதிபதியான பின்புதான் 2009ஆம் ஆண்டு ஜனவரியில் முதன் முதலாக ஆண்களுக்கு சமமான ஊதியம் பெண்களுக்கும் வழங்கப்பட்டது. 1400 ஆண்டுகளுக்கு முன்பு ரஸூலுல்லாஹ்வின் மூலம் இஸ்லாமியப் பெண்கள் சம உரிமை பெற்று, ஆண்களுக்குப் பெண்கள் ஆடையாகவும், பெண்கள் ஆண்களுக்கு ஆடையாகவும் வாழ்க்கையில் திகழ வேண்டிய நெறி முறைகளை அல்லாஹ் குர்ஆனிலே ஆணித்தரமாக எடுத்துச் சொல்லிவிட்டான். 1996ஆம் ஆண்டு முதன்முதலில் தேவகௌடா பிரதமராக இருந்தபோது பெண்களுக்கான ஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் கொண்டு வந்து, மசோதாவில் முஸ்லிம்கள் மற்றுமுள்ள பிற்பட்டோருக்கு ஒதுக்கீடு இல்லாததால் நிறைவேற்ற முடியவில்லை. அதன் பின்பு 1998, 1999, 2002, 2003, 2008 ஆகிய ஆண்டுகளிலும் அதே மசோதா கொண்டு வரப்பட்டு அதே காரணத்திற்காக நிறைவேற்றப்படவில்லை. கடந்த நாடாளுமற்றத் தேர்தலில், யு.பி.ஏ மத்தியில் அதிக பலத்துடன் ஆட்சிக்கு வந்ததால் ப.ஜ.க துணையோடு எப்படியாவது மசோதாவை நிறைவேற்றி விடலாம் என்று இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
மேற்கூறியவை சில அறிவுரைதாம். அனுபவத்தில் தெரிந்து கொள்ளவேண்டியது ஏராளமாக உள்ளது. அவற்றை அனுபவங்கள் மூலமாகத் தெரிந்து கொள்வதற்கு நமது சமுதாயப் பெண்கள் அரசியலில் பங்காற்றத் துணிய வேண்டும். அதன் மூலம் முஸ்லிம் பெண்கள் நாட்டின் கண்களாக மட்டுமல்லாது, சமூதாயத்தினை நிலை நிறுத்தும் தூண்களாகவும் மாறமுடியும் என் சொந்தங்களே!
- முனைவர் A.P. முஹம்மது அலீ, M.A, Ph.D, IPS(R)
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (4)
![]()
மகளிர்க்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லிம் பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்ற உரிமைக்குரலை மிகவும் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது இக்கட்டுரை.
பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட - மற்றும் சிறுபான்மை பெண்களுக்கும் உள் ஒதுக்கீட்டிற்கு வழிவகை வேண்டும் என்ற மூன்று யாதவ்களின் (லல்லு பிரசாத், முலாயம் சிங், & சரத் யாதவ்) நியாயமான கோரிக்கைகளை செவிமடுக்காமல் - அவர்களை இந்திய பெண்குலத்தின் எதிரிகளாக உயர்சாதி கட்டுப்பாட்டிலுள்ள பத்திரிக்கை-ஊடகங்கள் சித்தரிக்கின்றனர். ஆந்திர மாநிலத்தினைச்சார்ந்த மஜ்லிஸ் கட்சி எம்.பி ஒவாசி மசோதாவை எதிர்க்கிறார். முஸ்லிம்களுக்கு தனி ஒதுக்கீடு வேண்டும் என குரல் கொடுக்கிறார். ஆனால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இரண்டு எம்.பிக்களும், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி எம்.பியும் மௌனம் சாதிப்பது ஆச்சரியமாக உள்ளதல்லவா? இதில் ஆச்சரியப்பட அவசியமேயில்லை. சமகால முஸ்லிம்களின் சமூக பொருளாதர பிரச்சினைகள் பற்றிய தெளிவான புரிதல் அற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் அல்லது தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியும் ‘மௌனம்’ சாதிப்பதை தவிர வேறு வழியில்லை. தமிழக முஸ்லிம் அமைப்புக்களில் ‘முஸ்லிம் சமூகத்தின் ஆண்களே இன்னும் நாடாளுமன்றம், சட்டசபையை எட்டிப் பார்க்க முடியாத சூழ்நிலையில் - மகளிர் இட ஒதுக்கீடு தேவையா? என்று வினவி ‘ த.மு.மு.க அமைப்பு மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவையே எதிர்க்கிறது தமிழகத்திலுள்ள பிற முஸ்லிம் அமைப்புக்களுக்கும் இந்த விஷயத்தில் தெளிவான நிலைபாடு இருப்பதாக தெரியவில்லை. நிறைவாக, சட்ட மன்றத்திலும் - பாராளுமன்றத்திலும் நம் சமுதாய பெண்கள் இடம்பெற்று நம்மவர்களின் வாழ்வுரிமைக்காக குரலெழுப்ப வேண்டும் என்ற நமது கனவு நியாயமனதுதான்..ஆனால் அத்தகைய ஒரு வாய்ப்பு கிடைத்தால், முஸ்லிம் பெண்கள் எந்த அளவிற்கு சிறப்பாக செயலாற்ற முடியும் என்பதை சற்று சிந்தித்து பார்க்கவேண்டும். அரசியல் பொறுப்புக்களை - பதவிகளை திறமையாக நிர்வகிக்கத் தேவையான அடிப்படை தலைமைத்துவ பண்புகளை ஆளுமைத்திறனை தமிழக முஸ்லிம் சமுதாயமும் _ மற்றும் சமுதாய அமைப்புகளும் ’அறிந்தோ - அறியாமலோ’ பெண்களிடம் வளர்க்க தவறிவிட்டன. நமது சமுதாயம், முஸ்லிம் பெண்கள் பொதுவாழ்வில் ஈடுபடுவதை வரவேற்பதில் தயக்கம் காட்டியே வருகிறது. இந்நிலை மாறவேண்டும். நம் சகோதரிகளை சட்டமன்ற - பாராளுமன்றத்தில் குரலெழுப்ப அனுப்புவதற்கு முன்பாக, முஸ்லிம்களின் அடிப்படை அமைப்பான ‘ஊர் ஜமாத் நிர்வாகத்தில் - பெண்களை பிரதிநிதியாக - அங்கமாக - பொறுப்பாளர்களாக அனுமதித்து அவர்களுக்கு பொது வாழ்வில் பங்கேற்கும் பயிற்சியை வாய்ப்பை அளிக்க முன்வர வேண்டும், இத்தகைய அடிப்படை தகுதிகளை நம் பெண்களிடம் வளர்த்தால் அவர்கள் இன்ஷா அல்லாஹ், நாட்டின் கண்களாகவும் சமூதாயத்தினை நிலை நிறுத்தும் தூண்களாக மாறுவது உறுதி.. 1
March 09, 2010 16:17
முஹம்மத் அலி அவர்களின் சமுதாய அக்கறையும்;ஆதங்கமும் பார்த்தால், நிச்ச்யமாக அவர்களை நமது சமுதாயத்தின் பிரதிநிதியாக சட்டமன்றத்துக்கோ அல்லது நாடாளுமன்றத்துக்கோ அனுப்பி வைக்கலாம்..!
"கவியன்பன்" கலாம் அதிராம்பட்டினம் 2
March 12, 2010 10:34
டாக்டர் முஹம்மட்த் அலி மிக சிரப்பான கட்டுரை தந்து இருக்கின்ரார் பாரட்டுக்கல்
3
March 14, 2010 07:03
தங்களுக்கு ஆண்கள் தினம் கொண்டாடாத ஆண்கள் பெண்களுக்கு மட்டும் மகளிர் தினம் கொண்டாடுவதே ஆண்களின் ஆதிக்கத்திற்கும்,பெண்ணடிமைத்தனத்திற்கும் ஓர் எடுத்துக்காட்டு என்று சொல்லலாம்.தங்களின் தெய்வங்கள் முன் பலியிடும் ஆடுகளை குளிப்பாட்டி பூவிட்டு,ஜோடித்து அழைத்து வருவார்கள் இந்து மக்கள்.அதே போல் தான் இந்த மகளிர் தினமும் உருவாகி விட்டது.
ஒரு நாள் மகிழ்ச்சி வாழ்நாள் முழுவதும் மரணம் என்று உள்ளதை பெண்களும் உணராமல் இந்த மார்ச் 8ல் மகளிர் தினத்தை கொண்டாடி மகிழ்கின்றனர்.பெண்களின் தியாகம் பெரிது.பல வகையிலும் ஒரு பெண்ணின் தியாகத்தை அடுக்கிக்கொண்டே போகலாம்.அந்த பெண்களின் தியாகத்தை மதிக்க வேண்டுமென்றால் தினமும் மகளிர் தினம் கொண்டாட வேண்டும்.அதற்காக தினமும் அரங்க கூட்டம்,துண்டு பிரசுரங்கள் என்று செய்ய தேவையில்லை.அவர்களுக்குறிய உரிமைகளை சலுகைகளை கொடுத்து வந்தாலே போதுமானது.எனவே இஸ்லாத்தின் அடிப்படையில் எல்லா நாட்களும் மகளிர் தினம் தான். மனித இன உற்பத்தி மிஷின் தான் பெண் என்ற மாயை ஒழியணும்.அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கேட்கும் காலம் மாறணும்.மகளாக இருக்கும் போது ஒரு தந்தையும்,மனைவியாக இருக்கும் போது ஒரு கணவனும்,தாயாக இருக்கும் போது ஒரு மகனும் சொர்க்கம் செல்வதற்கு காரணமாக இருப்பது ஒரு பெண்தான் என்று இஸ்லாம் ஒரு பெண்ணுக்கு கொடுக்கும் மரியாதை பேணப்படணும் மதிக்கப்படணும்.அப்போது தான் பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்கும்.வருஷம் முழுவதும் மகளிர் தினமாக மாறும். kadhija 4
March 25, 2010 12:35
கருத்து எழுதுக :
|