சத்தியமார்க்கம்.காம்

ரமளான் கண்ட களம் print Email
தொடர்கள் - இஸ்லாமிய தொடர்கள்
சனி, 19 செப்டம்பர் 2009 23:37

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 29

எப்பொழுதும் போல் இதோ இம்முறையும் ஒரு ரமளான் வந்த சுவடு தெரியாமல் அதிவேகத்தில் முஸ்லிம்களைக் கடந்து செல்கிறது. இன்று இருப்பவர்கள் இதனைப் போன்ற இன்னொரு ரமளானைச் சந்திப்பரா? என்பதை அறியார். உள்ளமும் சூழலும் எத்தனை உபதேசங்களைத் தந்திருந்தாலும் அதனைச் சட்டை செய்யாமல் திரிந்தவர்களைக்கூட ரமளான் என்ற இப்புனித மாதம், ஒரு மாதம் முழுமையும் கட்டிப்போட்டு ஆன்மீகப் பயிற்சியளித்திருக்கின்றது.

 

மரணத்தை எந்நேரமும் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியவர்களான புத்திசாலிகள், இப்பெறற்கரிய பயிற்சியின் மூலம் கிடைத்த மனக்கட்டுப்பாட்டை எஞ்சியுள்ள  தமது வாழ்நாளிலும் முழுமையாகப் பேணுவர்.

ஒவ்வொரு ரமளானின் வருகையிலும் அதன் விடைபெறலுக்கு முன்னரும் எண்ணற்ற அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் பெற்று, இந்தப் புனித மாதம் முழுமையாக ஷைத்தானைக் கட்டிப்போடுவதில் மும்முரம் காட்டும் முஸ்லிம்களில் அநேகர், ரமளானின் விடைபெறலோடு தாம் பேணிய கட்டுப்பாடுகளுக்கும் விடை கூறி விடுகின்றனர்; தாம் பெற்றப் பயிற்சியைக் காற்றில் பறக்கவிட்டு விடுகின்றனர்.


மற்றும் சிலர், இயற்கையான வாழ்க்கைக்கு ஒன்றிய வழிமுறைகளைத் தரும் இஸ்லாம் தந்த இப்புனித மாதத்தினை வெறும் சடங்காகப் பேணி, அது விட்டுச் செல்லும் யதார்த்த நினைவுகளையும் பாடங்களையும் உயிரோட்டமில்லாத ஆன்மீக வழிபாடுகளில் தொலைத்து விடுகின்றனர்.


விடைபெறும் ஒவ்வொரு ரமளானும் ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை, இரு அதிமுக்கியச் செய்திகளை விட்டுச் செல்கின்றது.


1

இவ்வுலக மாந்தர் சுபிட்சம் பெறுவதற்குப் படைப்பாளனால் வகுத்தளிக்கப்பட்ட அமைதி மார்க்கமான இஸ்லாத்தின் பாடபுத்தகமாம் இறைவனின் வார்த்தைகள், - அல்குர்ஆன் - பட்டுத்துணியால் போர்த்தி, பாதுகாப்பாகப் பரணில் அடுக்கி வைத்திருந்ததைத் தூசி தட்டி, மாதம் முழுதும் வெளிச்சம் காண வைத்துள்ளது. இவ்வுலக மாந்தருக்கான அருட்கொடையாக இறைவனால் இறக்கியருளப்பட்ட இந்த அமானிதத்தை, இதுவரை சென்று சேராதவர்களுக்குச் சேர்த்து வைப்பது, ஒவ்வொரு முஸ்லிமின் தலையாய கடமையாகும். அதனை நினைவுறுத்தும் முகமாக, தூசி தட்டி வெளியே எடுக்கப்பட்டதைப் படித்து விளங்கி, தூதர் வழிகாட்டுதல்படி எட்டாதவர்களுக்குச் சேர்த்து வைத்தல்.



2

இறை அளித்த வழிகாட்டுதல் - அல்குர்ஆன்படி வாழ்வை அமைத்துக் கொண்டால் எத்தகைய பராக்கிரம சக்தியையும் இறை உதவியுடன் தகர்த்தெறிய முடியும் என்ற பத்ரின் அறிவிப்பு.


எந்த ரமளானில் வெற்றிக்கான வழிகாட்டியாக அல்குர்ஆனை அல்லாஹ் இறக்கி வைத்தானோ அதே ரமளானில் அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களுக்கு எண்ணிப்பார்க்க இயலா வெற்றியையும் இறைவன் பரிசாக அளித்து, அதன் பக்கம் நம்பிக்கையுடன் விரைந்து வர அறிவிப்புச் செய்கின்றான்.


இதனைத் தத்துவார்த்தரீதியில்கூட உணர்ந்து கொள்ளாத முஸ்லிம்கள், ரமளான் வந்தது; அமல்கள் போட்டி போட்டு செய்தோம். ரமளான் சென்றது; மற்றொரு ரமளானுக்காகக் காத்துள்ளோம் என, உறுதிகூற இயலா எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்து, கிடைக்க வேண்டிய வெற்றிகளைக் குழிதோண்டி புதைக்க ஆரம்பித்து விடுகின்றனர்.


எனவேதான் ஆண்டுக்கு ஒருமுறை தவறாமல் ரமளான் வந்து விடுகிறது. ஆனால், அதன் பலனான பத்ர் மட்டும் முஸ்லிம்களுக்கு கிட்டுவதே இல்லை.


புத்திசாலி, பட்டதை வைத்து சுதாரித்துக் கொள்வான். இதுவரை பட்டதை வைத்து முஸ்லிம்களும் சுதாரித்துக் கொள்ள வேண்டும்.


சுதாரித்துக் கொண்ட முஸ்லிம்களுக்கு இந்த ஆண்டின் ரமளான், இன்ஷா அல்லாஹ் பத்ரின் வெற்றியைப் பரிசளிக்கட்டும். அதற்கான முன்னேற்பாடுகளில் - திருமறை போதிக்கும் வழியில், தூதர் தம் வழியில் கவனம் செலுத்த இதோ கைவிட்டும் செல்லும் ரமளானாவது முஸ்லிம்களுக்குத் தூண்டுதல் அளிக்கட்டும்!


சுபிட்சமான, அமைதியான வாழ்வு என்பது திருமறையின் போதனைப்படி வாழ்வதில் மட்டுமே அமைந்துள்ளது.


அது ஆன்மீக வணக்கங்கள் புரிவதாக இருந்தாலும் சரி; அக்கிரமங்களுக்கு எதிராக தியாகம் புரியவேண்டிய  போராட்ட வாழ்வாக இருந்தாலும் சரி!


இறைமறை இறக்கம் மற்றும் பத்ரின் வெற்றி நினைவுகளை அசை போட்டு, உற்சாகத்துடன் கொண்டாடும் இப்புனித ஈகைப் பெருநாளில், உலக மக்கள் அனைவரின் வாழ்விலும் சுபிட்சமும் அமைதியும் நிலவ இறைவன் அருள் புரியட்டும்!

பிறை 1பிறை 2பிறை 3பிறை 4பிறை 5பிறை 6பிறை 7பிறை 8 | பிறை 9 | பிறை 10 | பிறை 11 | பிறை 12 | பிறை 13 | பிறை 14 பிறை 15 பிறை 16 பிறை 17 பிறை 18 பிறை 19 பிறை 20 | பிறை 21 பிறை 22 பிறை 23 | பிறை 24 பிறை 25 பிறை 26 | பிறை 27 | பிறை 28

Trackback(0)
கருத்துக்கள் (1)add comment
0
kavianban KALAM, Adirampattinam:
ஈந்து மகிழும் திருநா ளிகமதில் ஈத்பெருநாள்
நீந்திய பாவம் கடக்க புரிந்த நெடுந்தவத்தை
ஏந்திய நோன்பால் விளைந்த சிறப்பி னெழில்மிகுநாள்
சாந்திச் சுவனம் பரிசென நம்மிடம் சேர்ந்திடுமே



புண்ணியம் செய்தவ ரென்றும் மகிழ்ந்திடப் பள்ளிகளில்
எண்ணிலா நன்மைப் பொழிந்திடச் செய்யும் இறையருளால்
மண்ணி லிறங்கி சலாமுடன் வாழ்த்தும் மலக்குகளால்
கண்ணியம் செய்வதை யென்றும் நினைத்துக் களிப்புறவே



இற்றைத் திருநாள் நமக்குப் பிறையாய் இறங்கியது
பெற்ற கொடையை விடாமல் நுகர்வோம் பெருமிதமாய்
கற்ற பயிற்சிகள் நிற்க மனதிற் கவனமுடன்
சற்றும் தயங்கா முயற்சி எடுப்பது சூளுரைத்தே



ஈத் = இன்பம்
சலாம் = ”இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக” என்ற வாழ்த்து
மலக்கு = வானவர்கள்



யாப்பிலக்கணம்: கட்டளைக் கலித்துறை( 4 சீர் வெண்டளை + 5-ம் சீர் விளங்காய்)
--

”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)

எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com/

மின்னஞ்சல் முகவரி: எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் '> எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும்
எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் '> எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும்
எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் '> எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும்


அலை பேசி: 00971-50-8351499
1

August 31, 2011 15:50

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:155 நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!

புதிய கருத்துகள்

M.S.K : SISTER KHATIJA PLS SEE THE LINK BELOW AS REQUIRED http://www.satyamargam.com/1324


Peer Mohamed : Alaikkum wassalam, Jazakhallah Khair. InshaAllah each article posted will have a reference its so...


martin : சரியான் ஆட்டுக்கூட்டம்!


imran kareem : அல்லாஹ்வின் திருபெயரால்,, இக்கட்டுரை...


akbar : '' வந்தது வசந்தம்'''' ரபீவுல் அவ்வல் மாத...


Kathija : இதனுடைய அடுத்த பகுதி இன்னும் வரவில்லையா? வந்திருந்தால் அதற்கான லிங்க் கொடுக்கவும்


abdul : good to all


mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.



You are here  : முகப்பு தொகுப்பு தொடர்கள் இஸ்லாம் ரமளான் கண்ட களம்
Twitter
RSS
YouTube
English