| நோன்புப் பெருநாள் - ஈகைத் திருநாள்! |
|
|
| தொடர்கள் - இஸ்லாமிய தொடர்கள் | |||
| செவ்வாய், 15 செப்டம்பர் 2009 21:53 | |||
|
நோன்பு பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலுக்கு புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர் புரைதா (ரலி) நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ.
நபி(ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைகளை (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்கு சென்று தொழுவார்கள். அறிவிப்பாளர் அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.
பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும், திரைமறைவில் உள்ள பெண்களையும் கன்னிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) மக்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு மக்களுடன் சேர்ந்து தக்பீர் கூறுவார்கள். அறிவிப்பாளர் உம்மு அத்தியா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம். புஆஸ் (எனும் போர்) பற்றி அன்ஸாரிகள் இயற்றிய கவிதைகளை இரண்டு சிறுமிகள் பாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த அபூபக்கர்(ரலி) அவர்கள், "இறைத்தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா..." என்று கேட்டார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், "அபூபக்கரே! அந்தச் சிறுமிகளை விட்டுவிடுங்கள். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நமக்குரிய பெருநாளாகும்" என்றார்கள் இது பெருநாள் தினத்தில் நடந்தது. அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி. பிறை 1 | பிறை 2 | பிறை 3 | பிறை 4 | பிறை 5 | பிறை 6 | பிறை 7 | பிறை 8 | பிறை 9 | பிறை 10 | பிறை 11 | பிறை 12 | பிறை 13 | பிறை 14 | பிறை 15 | பிறை 16 | பிறை 17 | பிறை 18 | பிறை 19 | பிறை 20 | பிறை 21 | பிறை 22 | பிறை 23 | பிறை 24 | பிறை 25
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (6)
![]()
அஸ்ஸலாமு அலைக்கும்,
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நெஞ்சம் நிறைந்த ஈத் முபாரக்!! வ ஸலாம் 2
September 10, 2010 06:14
EID MUBAARAK.........for the Admin and other members of this site
. May ALLAAH have mercy puon all muslim ummath and grant his rahmath ....... 3
September 10, 2010 07:52
நோன்பென்னும் தேர்வெழுதி நோகாமல் காத்திருக்க
மாண்புடன் அல்லாஹ்வும் “மன்னிப்பை” பரிசாக வாகையுடன் தரும்நாள்; வாஞ்சையுடன் அருளும்நாள்; ஈகைத் திருநாள்; “ஈத்” பெருநாள் நல்லாடை உடுத்தி நறுமணம் பூசி அல்லாஹ்வைத் தொழுதிட அணிதிரள் வோரை வானவர்கள் தரையிறங்கி வாழ்த்திட வருகின்றனர்; ஆனதினால் தொழுகைக்கு ஆர்வமுடன் வருகவே பயிற்சிகள் பெற்றோம்; பாடங்கள் கற்றோம் முயற்சிகள் மறுமைக்கு முழுதாய் இருக்கட்டும் மீண்டும் “ரமளான்” நம்மிடம் வரவேண்டும் மீண்டிடுவோம் பாவங்கள் மீண்டும் வாராமலே வணங்கிடுவோம் அல்லாஹ் ஒருவனை மட்டும் இணங்கி வாழ்வோம்; இன்பமே கிட்டும் இன்பத் திருநாள் இன்றைய தினத்திலே அன்புடன் வாழ்த்தும் கவியன்பன் மனத்திலே.!! “கவியன்பன்” கலாம். அதிராம்பட்டினம் (பிறப்பிடம்) அபுதபி (இருப்பிடம்) 4
September 10, 2010 10:59
கருத்து எழுதுக :
|