| இரவுத் தொழுகையின் ரக்அத்கள் |
|
|
| தொடர்கள் - இஸ்லாமிய தொடர்கள் | |||
| சனி, 12 செப்டம்பர் 2009 19:28 | |||
|
நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டிய முதல் ஹதீஸின்படி தராவீஹ் அல்லது தஹஜ்ஜுத் தொழுகையின் ரக்அத்துகள் எட்டு மற்றும் வித்ரு மூன்று ரக்அத்கள் என்பது தெளிவாகிறது. வேறு சில ஹதீஸ்களில் இதைவிட அதிக எண்ணிக்கையும் மற்றும் சில ஹதீஸ்களில் இதைவிடக் குறைந்த எண்ணிக்கையும் கூறப்படுகின்றது. அந்த ஹதீஸ்களிலேயே அதற்கான விளக்கமும் கிடைக்கின்றது. ஆனால் நபி(ஸல்) அவர்கள் 20 ரக்அத்துகள் தொழுதார்கள் என்பதற்கோ மற்றவர்களை 20 ரகத்துகள் தொழ ஏவினார்கள் என்பதற்கோ எந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸும் இல்லவே இல்லை. வித்ரு ஒரு ரக்அத் தொழும்போது எட்டு ரக்அத்துகளைப் பத்து ரக்அத்களாகவும் நபி(ஸல்) அவர்கள் தொழுதிருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் இரவில் பத்து ரக்அத்கள் தொழுவார்கள். ஒரு ரக்அத் வித்ரு தொழுவார்கள். பஜ்ரு உடைய சுன்னத் இரு ரக்அத்கள் தொழுவார்கள். ஆக மொத்தம் பதிமூன்று ரக்அத்களாகும் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. நபி(ஸல்) அவர்கள் வித்ரு தொழுகையை ஒன்பது ரக்அத்கள் தொழுதால் அத்துடன் போதுமாக்கிக் கொள்வார்கள். தனியாக எட்டு ரக்அத்கள் தொழுவதில்லை. நபி(ஸல்) அவர்கள் ஒன்பது ரக்அத்கள் தொழுவார்கள். அப்போது எட்டு ரக்அத்கள் தவிர அதற்கு முந்தைய ரக்அத்தில் உட்கார மாட்டார்கள். அதன்பின் ஒன்பதாம் ரக்அத்தில் ஸலாம் கொடுத்துவிட்டு உட்கார்ந்த நிலையில் இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள். ஆக மொத்தம் பதினொன்று ரக்அத்துக்களாகும். நபி(ஸல்) அவர்கள் வயோதிகம் அடைந்தபிறகு ஏழு ரக்அத்துகள் தொழுதுவிட்டு பிறகு உட்கார்ந்து இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள். ஆக மொத்தம் ஒன்பது ரக்அத்துகள் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கும் இன்னொரு ஹதீஸ் நஸயீயில் இடம் பெற்றுள்ளது. வேறொரு விதமாகவும் அவர்கள் இதே எண்ணிக்கையை தொழுதுள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் எட்டு ரக்அத்துகள் தொழுவார்கள். பின்னர் ஒரு ரக்அத் வித்ரு தொழுவார்கள். முதுமை அடைந்தபோது ஒரு ரக்அத் வித்ரு தொழுவார்கள். பின்னர் உட்கார்ந்து இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் நஸயீயில் இடம் பெற்றுள்ளது. மிக அதிகமாக அவர்கள் பன்னிரண்டு ரக்அத்களும் தொழுதிருக்கிறார்கள். அதன் பிறகு வித்ரு தொழுதிருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள், பின் வித்ரு தொழுவார்கள் (சுருக்கித்தரப்பட்டுள்ளது) என்று இப்னுஅப்பாஸ் (ரலி) அறிவிக்கக்கூடிய ஹதீஸ் நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது. மற்றோர் அறிவிப்பில் மொத்தம் பதின்மூன்று ரக்அத்கள் (ஃபஜ்ர் சுன்னத் நீங்கலாக) தொழுததாக உள்ளது. இதன் மூலம் பனிரெண்டு ரக்அத்கள் இரவுத் தொழுகை தொழும்போது வித்ரு ஒரு ரக்அத் தொழுதிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. பனிரெண்டு ரக்அத்களை அவர்கள் தொழுத விபரம் விரிவாகவும் இன்னொரு ஹதீஸில் கூறப்படுகிறது. முதலில் இரண்டு ரக்அத்களை சிறிய அளவில் தொழுவார்கள். பின்னர் நீண்ட, மிக நீண்ட அளவில் இன்னும் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். அதை விடவும் சிறியதாக இன்னும் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். பின்பு இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு ஒரு ரக்அத் வித்ரு தொழுவார்கள் என்று ஸைத் இப்னு காலித் அல் ஜுஹனீ(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் நஸயீயில் இடம் பெற்றுள்ளது. வித்ரையும் சேர்த்து நபி(ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்களுக்கு மேல் தொழுததில்லை. குறைந்த பட்சம் வித்ரையும் சேர்த்து ஒன்பது ரக்அத்களுக்கும் குறைவாக இரவில் தொழுததில்லை. இந்த எண்ணிக்கையை விடக் குறைப்பதும், இதைவிடக் கூட்டுவதும் நபி வழிக்கு மாற்றமானதாகும். 20 ரக்அத்களும், வித்ரு மூன்று ரக்அத்களும் என்று வாதிடுவோர்களுக்கு நபி வழியில் ஒரு ஆதாரமும் இல்லாத போது, உமர்(ரலி) அவர்களின் பெயரைப் பயன்படுத்தி அவர்கள் 20+3 ரக் அத்கள் தொழுததாக, அல்லது தொழ வைத்ததாக - தொழும்படி ஏவியதாக கதை புனைந்துள்ளனர். உமர்(ரலி) அவர்கள் இருபது ரக்அத்கள் தொழுதார்கள் என்பதற்கோ, தொழ வைத்தார்கள் என்பதற்கோ ஒரு ஆதாரமும் இல்லை. உபை இப்னு கஃபு(ரலி), தமீமுத்தாரி (ரலி) ஆகிய இரு நபித் தோழர்களையும் பதினோரு ரக்அத் தொழ வைக்குமாறு உமர்(ரலி) அவர்கள் உத்தரவிட்டதாகத்தான் சான்று உள்ளது. (முஅத்தா) இப்படி உமர்(ரலி) அவர்கள் 11 ரக்அத்கள் தொழ வைக்கக் கட்டளையிட்ட செய்தி தெளிவாக இருக்கும் போது, நபி வழிக்கும் இதுவே பொருத்தமாக அமைந்திருக்கும் போது இதை ஏற்பதே அறிவுடைமையாகும். உமர்(ரலி) காலத்தில் மக்கள் 20 ரக்அத்கள் தொழுதார்கள் என்ற கருத்தில் வருகின்ற செய்திகள் யாவும் குறைபாடுடைய செய்திகளாகும். ஆதாரப்பூர்வமான செய்தி என்பதை ஏற்றுக் கொண்டால் கூட அவர்களின் தெளிவான கட்டளை 11 ரக்அத்கள் என்பதைப் பறை சாற்றும் போது அவர்களின் காலத்தில் நடந்ததாகக் கூறப்படுவதை எப்படி ஏற்க இயலும்? அவர்களின் மேற்கண்ட கட்டளை இல்லாவிட்டால் வேண்டுமானால் அவர்களின் காலத்தில் நடந்ததை அவர்கள் நடத்தியதாக நம்ப இடமிருக்கும். அவர்களின் கட்டளை, அவர்களின் காலத்தில் நடந்ததாகக் கூறப்படுவதற்கு மாற்றமாக இருக்கும்போது எப்படி உமர்(ரலி) அவர்களுடன் இதை சம்பந்தப் படுத்த முடியும்? - தொடரும், இன்ஷா அல்லாஹ். ஆக்கம்: உம்மு ஸாலிஹா.
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (56)
![]()
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ரமலானில் அதிகப்படியான வணக்கங்கள் செய்வதால் அளவுக்கு அதிகமான நன்மைகள் கிடைக்கின்றன. புனித இரண்டு ஹரம் ஷரீபுகளிலும் உலகில் பல பாகத்திலும் 20 ரக்ஆத்துக்கள் தொழவைக்கப்பட்டு வருகின்றன. நன்மையை நாடுபவர்களாக நின்று வணங்குவதற்கு ரமலான் மாதம் ஒரு சிறந்தமாதமாகும். வல்லஅல்லாஹ் நமக்கு புனித ரமலானை கண்ணியப்படுத்தி அதிக அமல்கள் செய்து நன்மைகளை அடைந்துகொள்ள உதவி செய்வானாக. ஆமீன் 1
September 13, 2009 16:58
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர்களே ரமலானில் அதிகப்படியான வணக்கங்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கின்றன என்று நபி ஸல் அவர்கள் நமக்கு கற்றுத் தந்தனர் ஆனால், அவர்கள் அதிகமான எண்ணிக்கையில் நன்மை என்று கூறவோ காட்டித் தரவோ இல்லை என்பதை கவனிக்கவும். நபி ஸல் அதிக நீளமாக அதிக நேரமாக தொழுதுள்ளனர் என்று அறிய முடிகிறது ஆனால் அதிக எண்ணிக்கைக்கு ஆதாரம் கிடைக்க வில்லை. QUALITY IS BETTER THAN QUANTITY எனும் அடிப்படையில் முழு இறையச்சத்துடன் பொறுமையாக நிதானமாக தொழும் தொழுகையே சிறந்தது என்பதையும் பல நபி மொழிகள் விளக்குகின்றன. மேலும் இரண்டு புனித ஹரம் ஷரீப்பிலும் உலகின் பல பகுதியில் நடைபெறுவது மார்க்க ஆதாரமாக அமையாது, என்பதுடன் புனித ஹரமில் தொழ வைக்கும் முறையை பார்க்கும் போது ஒரு இமாம் முதல் 10 ரக் அத்துக்கள் தொழ வைக்கிறார் அடுத்த இமாம் 10 ரக் அத்துகள் மற்றும் வித்ரு தொழ வைக்கிறார். ஒரு விதத்தில் இதுவும் அவரவர் தமது நேர வசதிக்கு ஏற்ப குறிப்பிட்ட எண்ணிக்கையில் அதாவது 8 அல்லது 10 ரக் அத்துக்கள் மற்றும் 3 ரக் அத்துக்கள் வித்ரு தொழ ஒரு வாய்ப்பாகவும் இது உள்ளது, என்றும் ஒரு கருத்து நிலவுகிறது... கைர் எது எப்படியென்றாலும் ஒரு இரவில் 7 முதல் 13 வரை தொழுவதே ஹதீஸ்களின் அடிப்படையில் முறையான நபி வழி என்பதில் சந்தேகமில்லை. அல்லாஹு அஃலம். 2
September 26, 2009 00:35
கஃபதுல்லாவில் ஒரு இமாம் 10 ரக் அத் தொழவைத்து விட்டு உடனே பின்னால் போய் நின்று கொள்கிறார்.பாக்கியுள்ள 10ஐ தொழுது முடிக்கிறார்.அதேப்போன்று அடுத்து வரக்கூடிய இன்னொரு இமாம் ஆரம்ப 10ரக் அத்களை பின்னால் நின்று தொழுதுவிட்டுத்தான் பக்கியுள்ள 10ஐ தொழ வைக்க வருகிறார்.அதுமட்டுமல்ல கடைசி பத்து நாட்களில் தொழப்படக்கூடிய கியாமுல்லைல் தொழுகையையும் சேர்த்தால் 20+11=31ரக் அத்கள் தொழப்படுகிறது.தவறாக இருக்கும் பட்சத்தில் அப்புனிதமிக்க இடத்தில் இவ்வாறு தொழ வைக்க வாய்ப்பே இல்லை.
3
September 26, 2009 14:14
அஸ்ஸலாமு அலைக்கும்
இஸ்லாத்தின் அனைத்து மார்க்க அமல்களுக்கும் முன் மாதிரி நபி ( ஸல் ) அவர்களிடம் இருக்க வேண்டும்.... அதற்கு ஆதாரங்கள் ஹதீஸ்களில் இருந்து நிறுவப்பட வேண்டும் என்பது முக்கியமான அடிப்படையாகும். அதற்கு மாற்றமாக கஃபதுல்லாவில் 23 அல்லது 31 ரக் அத்துக்கள் தொழவைக்கப்படுகிறது என்பதும், அதே போல் குர் ஆன் கத்தம் என்று 29 அன்று (நபி வழி ஆதாரமற்ற) குர் ஆனை முடித்ததற்கு ஒரு விசேஷ கூட்டு துவா சுமார் 30 நிமிடங்கள் உரக்க கேட்கப் பட்டு அதற்கு ஆமீன் எனும் முழக்கங்களுடன் நடைபெறுகிறது, இதற்கு அதிகமான கூட்டம். கூட்டத்தினை கட்டுப்படுத்த தனி போலீஸ் ஏற்பாடு எனும் அளவில் இது நடைபெறுகிறது. நபி (ஸல் ) அவர்கள் இவ்வாறு 31 ரக் அத்துகள் தொழுதார்கள் என்றும் கூட்டு துவா என்றும் நமக்கு காட்டித்தராத ஒரு அமல் இது. 31 ரக் அத்களையும் கூட்டு துவாவையும் நியாயப் படுத்துவதற்காக ஒரே ஒரு ஹதீஸையாவது ஆதாரமாக காட்டுவது கஃபதுல்லாஹ்வை ஆதாரமாக காட்டுவதை விட முக்கியமானதும் முறையானதும் என்பதை நினைவில் வைக்க வேண்டும். மேலும் இது நன்மையானது என்றால் அதை நபி ஸல் அவர்கள் நமக்கு காட்டித் தர மறந்து விட்டார்களா அல்லது மறைத்து விட்டார்களா? (நவூதுபில்லாஹ்) அல்லது அவர்கள் வழிகாட்டுதலுக்கு மாற்றமாக இப்படி செய்யலாம் என்றால் அவரை பின்பற்றுங்கள் என்று அல்லாஹ் கூறியுள்ளதன் அவசியம் என்ன? மீறினால் அதன் நிலை என்ன? சிந்திக்கவும். "எவர் எம்மால் ஏவப் படாத அமலை செய்கிறாரோ அது அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படாது" போன்ற நபி மொழிகளுக்கும் மாற்றமாக உள்ளது. இப்படி நபி வழியில் ஹதீஸ்களுக்கு மாற்றமாக உள்ள இந்த அமல்கள் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்படுமா அல்லது நபி வழிக்கு மாற்ற்மாக பித் அத்தாக கருதப்படுமா என்பது அல்லாஹுக்கே வெளிச்சம். இது போன்ற ஆதாரமற்ற சந்தேகமான அமல்களை விட்டு விலகி இருப்பதே சிறந்தது. அல்லாஹ் மிக அறிந்தவன் 4
September 26, 2009 22:12
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
புனித இரண்டு ஹரம் ஷரீப்களிலும் நடைபெறும் தராவிஹ் தொழுகையின் 20 ரக்அத்துகள் ஹதீஸ்களின் ஆதாரமில்லாமல் தொழவைக்க மாட்டார்கள். நம்மைபோல் சவுதி்அரேபியாவின் உலமாக்கள் ஹதீஸ்களை அதிகம் அறிந்தவர்களாகவே இருப்பார்கள். ஹதீஸ்களை ஆராயாமல் அவர்கள் செயல்படமாட்டர்கள். பொதுவாக பித்அத்களை தவிர்ந்து இருப்பதில் சவுதிஅரேபியாவின் உலமாக்கள் அதிகம் பேணுதல் உடையவர்கள். அப்படியிருக்க 20 ரக்அத்துகள் தொழுவதை ஹதீஸ்களின் ஆதாரமில்லாமல் ஏற்படுத்தியிருக்க மாட்டார்கள் என்பதே கருத்தாகும். அல்லாஹ் நம்முடைய அனைத்துச் செயல்களையும் மிகவும் அறிந்தவனாக இருக்கின்றான். 20 ரக்அத்துகள் மார்க்கம் அனுமதிக்காத செயலாக இருந்தால் அதனை புனிதஹரம் ஷரீப்களில் அவர்கள் அனுமதித்திருப்பார்களா?? மேலும் புனித ரமலானில் ஒவ்வொரு நாளும் பல இலட்சக்கணக்கான மக்கள் இத் தொழுகையில் கலந்து கொள்கிறார்கள். 30 நாட்களையும் கணக்குப் பார்த்தால் கோடியைக் கூட எட்டிவிடும். இவ்வளவு மக்களுடைய தொழுகையை வல்ல அல்லாஹ் ஏற்றுக்கொள்ளவே செய்வான். வல்ல அல்லாஹ் மென்மெலும் புனிதகாலங்களில் நமக்கு அதிகமாக நல்அமல்செய்ய அருள்புரிவானாக.ஆமீன் 5
September 27, 2009 22:02
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் கனி அவர்களே... // புனித இரண்டு ஹரம் ஷரீப்களிலும் நடைபெறும் தராவிஹ் தொழுகையின் 20 ரக்அத்துகள் ஹதீஸ்களின் ஆதாரமில்லாமல் தொழவைக்க மாட்டார்கள். நம்மைபோல் சவுதி்அரேபியாவின் உலமாக்கள் ஹதீஸ்களை அதிகம் அறிந்தவர்களாகவே இருப்பார்கள். ஹதீஸ்களை ஆராயாமல் அவர்கள் செயல்படமாட்டர்கள். பொதுவாக பித்அத்களை தவிர்ந்து இருப்பதில் சவுதிஅரேபியாவின் உலமாக்கள் அதிகம் பேணுதல் உடையவர்கள். அப்படியிருக்க 20 ரக்அத்துகள் தொழுவதை ஹதீஸ்களின் ஆதாரமில்லாமல் ஏற்படுத்தியிருக்க மாட்டார்கள் என்பதே கருத்தாகும் // தாங்கள் நம்பும் அந்த ஆதாரத்தை கேட்டு அறியத் தந்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வும் தெளிவும் ஏற்படும். அதை விடுத்து நபி வழிக்கு மாற்றமாக வெறும் அனுமானங்களில் செயல்பட்டு நமது அமல்கள் பாழாகிவிடும் என்று குர் ஆன் எச்சரிக்கிறது பார்க்கவும் ( அல் குர் ஆன் 47 : 33 ) 6
September 27, 2009 23:43
அப்துல்லாஹ் அவர்களிடம் சில கேள்விகள்,
நூற்றாண்டுகளுக்கு பிறகு தொகுக்கப்பட்ட 'சஹீஹான' ஹதீஸ்கள் அனைத்தும் நபி அவர்களின் வாழ்க்கை முழுவதையும் தருகிறது என எண்ணுவது பித்'அத்தா ? அதாவது, புதிய கண்டுபிடிப்பு ஆகுமா ? அப்படி முழுமையாகத் தருகிறது என்றால், புகாரியில் இல்லாத ஹதீஸ்கள், முஸ்லீம் மற்றும் ஏனைய நூல்களின் இருப்பதன் அடிப்படையில், இவைகள் அனைத்திலும் இல்லாமல் விடப்பட்ட நபி அவர்களின் வாழ்க்கைப் பகுதி உண்டு என கொள்ளலாமா ? 'சஹீஹான'ஆன ஹதீஸ்கள் எனப்படுபவை சில ரூல்ஸ்களைப் பாஸ் செய்த ஹதீஸ்கள்தான் என்பதால், 'சஹீஹான' எனும் வார்த்தையினை உண்மையிலேயே "ஆதாரப்பூர்வமான" எனப் பொருள்கொள்வது பித்'அத் ஆகுமா ? அவ்வாறு ஹதீஸ்களில் விடப்பட்ட நபிவாழ்க்கை உண்டு எனக் கொண்டால், முழுமையற்ற ஹதீஸ் புத்தகங்களில் இல்லை எண்பதற்காக, அதிகப்படியான வணக்கத்தினையும், கூட்டுத்துவாவினையும் தவறு என கூறுவது பித்'அத் ஆகுமா ? கூட்டுத் தொழுகையினை ஹதீஸ்களில் வலியுறுத்தப்படுவதால், 'கூட்டாக நபி அவர்கள் தராவீஹ்' என்ற ஹதீஸ் இல்லாவிட்டாலும், கூட்டுத் தராவீஹ் தொழுகையினை நீங்களோ அல்லது மற்ற "8 ரக்'அத்" சகோதரர்களோ நியாயப்படுத்துகிறீர்கள் (இப்பதிவிலோ அல்லது மற்ற பதிவுகளிலோ). சூரா ஃபாத்திஹா எனும் கூட்டுத்துவாவினை நபி அவர்கள் வழி நடத்திக் கேட்டார்கள் என்ற அடிப்படையில் கூட்டுத்துவாவினை வலியுறுத்தாதது ஏனோ ? சரி, வலியுறுத்த வேண்டாமென்றால், கூட்டுத்துவாவினைக் கண்டிப்பது பித்'அத் ஆகுமா ? 7
September 28, 2009 07:34
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இந்த இணைய தளத்தின் வாசகரான என்னைவிட தங்களைப் போன்ற மார்க்க அறிவுள்ளவர்களும், இதுபோல் இஸ்லாமிய இணையதளம் வைத்திருப்பவர்களும் இதன் சம்பந்தமான விளக்கத்தை சவுதி அரசாங்கத்திடமே கேட்கலாமே. ஏனெனில் இது சம்பந்தமான சரியான விளக்கத்தை எப்படி பெறலாம் என்பது இந்த துறையில் உள்ள தங்களைப் போன்றவர்களுக்கு நன்றாக தெரிய வாய்ப்புள்ளது. எனவே, உண்மையில் இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவேண்டும் என்றால், தங்களைப்போன்றவர்களும் முயற்சி செய்தால் இன்ஷாஅல்லாஹ் தீர்வு கிடைக்கும். எந்த அடிப்படையில் புனித ஹரம் ஷரரீபில் 20 ரக்அத்துக்கள் தொழவைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக இன்ஷாஅல்லாஹ் என்னுடைய பங்காக தமிழகத்தின் தாய் மதரஸாவான பாக்கியத்துஸ் ஸாலிஹாத் மதரஸாவிற்கு எழுதி கேட்கின்றேன். அவர்கள் கூறும் பதிலை இன்ஷாஅல்லாஹ் இந்த இணையதளத்திற்கும் அனுப்புகின்றேன். ஆனால் உங்களைப் போன்றவர்கள் அதனை ஏற்றுக்கொள்வீர்களா என்பதை அல்லாஹ் தான் அறிவான். 8
September 28, 2009 21:18
அன்புள்ள கனி!
அஸ்ஸலாமு அலைக்கும். நான் சவுதியில் இருக்கிறேன். அந்த இரு புனித மஸ்ஜிதுகள் மட்டும் நேரடி ஒளிபரப்பில் உங்களை வந்து அடைகிறது. எனவே, //// புனித இரண்டு ஹரம் ஷரீப்களிலும் நடைபெறும் தராவிஹ் தொழுகையின் 20 ரக்அத்துகள் ஹதீஸ்களின் ஆதாரமில்லாமல் தொழவைக்க மாட்டார்கள். நம்மைபோல் சவுதி்அரேபியாவின் உலமாக்கள் ஹதீஸ்களை அதிகம் அறிந்தவர்களாகவே இருப்பார்கள். ஹதீஸ்களை ஆராயாமல் அவர்கள் செயல்படமாட்டர்கள். பொதுவாக பித்அத்களை தவிர்ந்து இருப்பதில் சவுதிஅரேபியாவின் உலமாக்கள் அதிகம் பேணுதல் உடையவர்கள். அப்படியிருக்க 20 ரக்அத்துகள் தொழுவதை ஹதீஸ்களின் ஆதாரமில்லாமல் ஏற்படுத்தியிருக்க மாட்டார்கள் என்பதே கருத்தாகும். அல்லாஹ் நம்முடைய அனைத்துச் செயல்களையும் மிகவும் அறிந்தவனாக இருக்கின்றான். 20 ரக்அத்துகள் மார்க்கம் அனுமதிக்காத செயலாக இருந்தால் அதனை புனிதஹரம் ஷரீப்களில் அவர்கள் அனுமதித்திருப்பார்களா?? ///// ----> என்று கேட்கிறிர்கள். உங்களுக்கு ஒரு அதிர்ச்சிமிக்க ஆனால் ஒரு உண்மையான செய்தியினை தெரிவிக்கிறேன். இதே சவுதியில் ஒவ்வொவொரு தெரு சந்திப்புக்கு ஒரு பள்ளி வாசலாக பல ஆயிரக்கணக்கான பள்ளிவாசல்களிலும் ரமலானில் நடைபெறும் - உங்களால் தராவிஹ் எனப்படும் - த்ஹஜ்ஜத் தொழுகையை இஷாவுக்குப்பின், பின் சுன்னத்துக்கு 10 நிமிடம் ஒதுக்கியபின் இரண்டிரண்டாய் 8 ரக்கயதுகளும்,(இடையில் எந்த கூட்டு துவாவும், சத்தமாய் கோரஸ் திக்குருகளும், கலிபாக்களுக்கு தொழுகையை பஹஸ் பண்ணுதலும் இல்லாமல்)- பின் (ஒரே அத்தஹியாத் அமர்வில்) 3 ரக்கயதுகள் ( சில நாள் 2 + 1 எனவும்) வித்ருமாய் - ரமலான்-20 வரையும், பின்னர் அடுத்த பத்து இரவுகள், இது-(உங்களால் தராவிஹ் எனப்படும் - த்ஹஜ்ஜத் தொழுகையை இஷாவுக்குப்பின் பின் சுன்னத்துக்கு 10 நிமிடம் ஒதுக்கியபின்)- இரண்டிரண்டாய் நான்கு ரக்கயத்துகள் மட்டுமும், பின்னர் வீடு சென்று திரும்பி வந்து ஸஹருக்கு 3 மணி நேரத்துக்குமுன் மிச்ச நான்கு ரக்கயத்துகலும் வித்ரும் ஜமாத்தாக தொழ வைக்கப்படுகிறது. அன்புள்ள கனி! இப்போது நான் உங்களை இப்படி கேட்கட்டுமா? " " சவுதியில் ஒவ்வொவொரு தெரு சந்திப்புக்கு ஒரு பள்ளி வாசலாக பல ஆயிரக்கணக்கான பள்ளிவாசல்களிலும் ரமலானில் நடைபெறும் - உங்களால் தராவிஹ் எனப்படும் - த்ஹஜ்ஜத் தொழுகை ஹதீஸ்களின் ஆதாரமில்லாமல் தொழவைக்க மாட்டார்கள். நம்மைபோல் சவுதி்அரேபியாவின் உலமாக்கள் ஹதீஸ்களை அதிகம் அறிந்தவர்களாகவே இருப்பார்கள். ஹதீஸ்களை ஆராயாமல் அவர்கள் செயல்படமாட்டர்கள். பொதுவாக பித்அத்களை தவிர்ந்து இருப்பதில் சவுதிஅரேபியாவின் உலமாக்கள் அதிகம் பேணுதல் உடையவர்கள். அப்படியிருக்க 8 ரக்அத்துகள் தொழுவதை ஹதீஸ்களின் ஆதாரமில்லாமல் ஏற்படுத்தியிருக்க மாட்டார்கள் என்பதே கருத்தாகும். அல்லாஹ் நம்முடைய அனைத்துச் செயல்களையும் மிகவும் அறிந்தவனாக இருக்கின்றான். 8 ரக்அத்துகள் மார்க்கம் அனுமதிக்காத செயலாக இருந்தால், அதனை, தங்கள் நாடு முழுதும், தன் குடிமக்களுக்கு அவர்கள் அனுமதித்திருப்பார்களா?? மேலும் புனித ரமலானில் ஒவ்வொரு நாளும் பல இலட்சக்கணக்கான மக்கள் இத்தொழுகையில் கலந்து கொள்கிறார்கள். 30 நாட்களையும் கணக்குப் பார்த்தால் கோடியைக் கூட எட்டிவிடும். இவ்வளவு மக்களுடைய தொழுகையை வல்ல அல்லாஹ் ஏற்றுக்கொள்ளவே செய்வான். வல்ல அல்லாஹ் மென்மெலும் புனிதகாலங்களில் நமக்கு அதிகமாக நல்அமல்செய்ய அருள்புரிவானாக.ஆமீன்" " ///தமிழகத்தின் தாய் மதரஸாவான பாக்கியத்துஸ் ஸாலிஹாத் மதரஸாவிற்கு எழுதி கேட்கின்றேன்./// --- என்றெல்லாம் காலம் கடத்தி தப்பிக்காமல் பதில் கூறுங்கள். ('பிறகு ஏன் இரு ஹரம் ஷரிபுகளிலும் அப்படி' -என்று கேட்டால், அதற்கு, உலகில் பெருவாரியான மக்கள் பித்அத் ஆக தொழும்போது அவர்கள் இங்கு உம்ரா விசாவில் வந்து பார்த்தால் "என்ன இவர்கள் இப்படி காபிர்கலாய் போய் தப்பாய் தொழுகிறார்களே" என்று வெகுண்டெழுந்து மக்கள் இனி யாரும் சவூதி செல்லக்குடாது என்று அந்தந்த நாட்டு உலமாக்களும் முல்லாக்களும் பத்வா கொடுத்துவிட்டால் பல முஸ்லிம்களுக்கு பெரிய இழப்பாகிவிடுமெ என்ற நல்லெண்ணம் தான் காரணமோ.?) அல்லாஹ்வே அறிந்தவன். 9
September 29, 2009 17:11
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
//('பிறகு ஏன் இரு ஹரம் ஷரிபுகளிலும் அப்படி' -என்று கேட்டால், அதற்கு, உலகில் பெருவாரியான மக்கள் பித்அத் ஆக தொழும்போது அவர்கள் இங்கு உம்ரா விசாவில் வந்து பார்த்தால் "என்ன இவர்கள் இப்படி காபிர்கலாய் போய் தப்பாய் தொழுகிறார்களே" என்று வெகுண்டெழுந்து மக்கள் இனி யாரும் சவூதி செல்லக்குடாது என்று அந்தந்த நாட்டு உலமாக்களும் முல்லாக்களும் பத்வா கொடுத்துவிட்டால் பல முஸ்லிம்களுக்கு பெரிய இழப்பாகிவிடுமெ என்ற நல்லெண்ணம் தான் காரணமோ// தங்களுடைய இந்த கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல. பொதுமக்களுக்கு பயந்து மார்க்கத்தை விட்டு கொடுப்பது என்பது உங்களுடைய முழு கற்பனையாக இருக்கும். வல்ல அல்லாஹ் இது போன்று எழுதுவதை விட்டும் நம்மை காப்பாற்றுவானாக.ஆமீன் எதையாவது எழுதிவிட்டு கடைசியில் உங்களைப் போன்றவர்கள் அல்லாஹ் அறிவான்.அல்லாஹ் அறிவான் என்று கூறி முடிப்பதும் அவ்வளவு விரும்பத்தக்கது அல்ல. எழுதுவது நீங்கள் பாரத்தைப் போடுவது அல்லாஹ்வின் மீது. நம்முடைய எண்ணங்களை அறியக்கூடியவன் வல்லஅல்லாஹ் தான். நாம் பாவங்கள் செய்தாலும் அதனையும் அறியக்கூடியவன் அவன்தான். அந்த அல்லாஹ்தான் நம்மை படைத்து பரிபாளிக்கக்கூடியவன் என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம். புனித ஹரம் ஷரீபுகளில் 20 ரக்ஆத்துகள் தொழ வைப்பதையும் அறியக்கூடியவன் வல்ல அல்லாஹ்வே. நானும் சவுதியில் தான் வேலை செய்கின்றேன். பல தடவைகள் புனித ஹரமில் 20 ரக்அத்துக்கள் தொழுதுஉள்ளேன். கியாமுல் லைலில் கலந்து கொண்டுள்ளேன். தாங்கள் கூறுவது போல பல பள்ளிகளில் 8+3 மாகவும் தொழுதுஉள்ளேன் பிரச்சனை புனிதஹரம் ஷரீப்களில் தொழவைக்கப்படும் 20 ரக்அத்துகளும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் தான் தொழவைப்பார்கள் என்பது தான். இதற்காகத்தான் என்னைவிட அதிகம் அறிந்த தங்களைப் போன்றவர்களும் சவுதி உலமாக்களின் சபைகளை தொடர்பு கொண்டு இதற்கு தீர்வு காணப்பட்டால் மிகவும் ந்ல்லது. உங்களைப் போன்றவர்களுக்கும் இதில் முக்கிய பொறுப்பு உண்டு. நமக்குள் விவாதங்கள் செய்வதைவிட உண்மையில் இதற்கு தீர்வு காணப்படவேண்டும் என்ற உயர் நேக்கத்தில் தங்களைப் போன்றவர்கள் முழு முயற்சி எடுத்தால் இந்த பிரச்சனைக்கு இன்ஷாஅல்லாஹ் விரைவில் தீர்வு கிடைக்கும் என்பதே என்னுடைய எணணமாகும். வல்ல அல்லாஹ் நமக்கு இது சம்பந்தமான நல்ல தீர்வை தந்து அருள்புரிவானாக. ஆமீன் 10
September 29, 2009 22:06
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் முஹம்மத் ஆஷிக் அவர்களே ஜஸாக்கல்லாஹு கைர். அல்ஹம்துலில்லாஹ். நான் எதிர்பார்த்த் விதத்தில் ஒரு சகோதரர் அருமையான கருத்தை சமர்ப்பித்து சிந்திக்க தூண்டச் செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். நான் இந்த ரமலானில் உம்ரா சென்ற போது மக்காவில் கஃபாவின் அருகில் உள்ள இரு பள்ளிகளில் இரவு தொழுகை நடந்ததையும் அதில் மக்கள் பெரும் அளவிம் கலந்து கொண்Dஅதை கடந்தே இறுதி பத்தில் நடந்த கியாமுல் லைல் எனும் 10+3 ரக் அத்துக்கள் இரவு தொழுகைக்கு கலந்து கொள்ள சென்றேன். இரு லட்சம் மடங்கு நனமையுடைய பள்ளியில் தொழுவதை விட இங்கு ஏன் தொழ மக்கள் குழுமுகிறார்கள் என்ற என் எண்னத்திற்கு அப்போது விடை கிடைக்கவில்லை தற்போது சகோதரர் முஹம்ம்த ஆஷிக் அவர்கள் பதிலில் அதற்கும் விடை கிடைத்துள்ளது. அல்ஹம்துலிலாஹ். மேலும் அங்கு உம்ரா வந்த சிலர் 20+3 தராவிஹ் தொழுகையில் கலந்து கொள்ளாமல் வெறும் பின்நேரதில் தொழ வைக்கப்படும் இரவு தொழுகையில் மட்டும் கலந்து 10 + 3 ரக அத்துக்கள் அல்லது எட்டு ரக் அத்துக்கள் தொழுது வித்ரு வீட்டில் தனியாக தொழுதல் போன்று கடைபிடிப்பதையும் காண முடிந்தது. இவற்றிற்கெல்லாம் முக்கிய காரணம் நபி வழியை பின் பற்ற வேண்டும் இதல்லாத ஆதாரமற்ற செயல் எவ்வளவு அதிகமானோர் செய்தாலும் எங்கு செய்யப்பட்டாலும் அல்லாஹ்வினால ஏற்கப்படாதது மட்டுமல்லாமல் அல்லாஹ்வின் கோபமும் தண்டனையயும் பெற்று தரும் என்ற அச்சமேயாகும். மேலும் சகோதரர் ஷாஹித் மற்றும் கனி அவர்களின் கேள்விகளுக்கு மிக நீண்ட பதில்கள் அளிக்க வேண்டும் ஆயினும் சுருக்கமாக கூற வேண்டுமென்றால் தெளிவாக ஆதாரங்கள் இல்லாத அமல்களை தவிர்த்துக் கொள்வதே நபி வழிக்கு ந்ருக்கமானதும் அல்லாஹ்வின் பொருத்தத்திற்கும் நற்கூலிக்கும் வழிவகுக்கக் கூடியதாகவும் இருக்கும், அதற்கு மாற்றமாக நபி வழியில் ஹதீஸ்களில் இல்லாத நபி ஸல் அவர்கள் கடைபிடித்த அமல்கள் இருக்கலாம் என்று நினைப்பதும் ஒரு வித்த்தில் பல விபரீதமான விஷய்ங்களில் நம்மை கொண்டு சேர்த்து விடும். நான் உங்களிடம் இரண்டை விட்டு செல்கிறேன் அவற்றைப் பற்றி பிடித்து இருக்கும் காலம் வரை நீங்கள் வழி தவறமாட்டீர்கள் ஒன்று அல்லாஹ்வின் வேதம் இரண்டாவது எனது நபி வழி என்ற நபி( ஸல்) அவர்கள் வழி முறைகள் பாதுகாக்கப் பட்டு நமக்கு கிடைக்காமல் போக வாய்ப்பில்லை என்ரு ந்ம்பிக்கை கொண்டு கிடைத்துள்ளதை செயல் படுத்தி கிடைக்காததும் உண்டு என்று கருதி ஆதாரமற்றதை செயல் படுத்துவதை தவிர்த்து ஈடேற்றம் பெருவோம். பித் அத் என்பது மார்க்கத்தில் நபி வழியில் இல்லாத புதுமையாக உருவாக்கப்பட்ட அமல்கள் எனபதும் அவை வழிகேடுகள் அவை நரகத்தில் கொண்டு சேர்க்கும் என்ற நபி வழி எச்சரிக்கையையும் நினைவில் நிறுத்த வேண்டும். அடுத்து நபி ஸல் அவர்கள் இரவு தொழுகையை கூட்டாகவும் தனியாகவும் தொழுதுள்ளதால் இரு விதமாகவும் தொழலாம் என்பதே சரி. மேலும் சூரா பாத்திஹாவுக்கு பிறகு ஆமீன் என்பது நபி வழி என்பதால் அப்போது மட்டும் ஆமீன் சொல்லலாம், இதை கூட்டு துவாவுக்கு ஆதாரமாக கொள்ளலாகாது. ஏனென்றால் இன்று என்ன சொல்லபடுகிரது என்று தெரியாமல் ஆமீன் ஆமீன் என்று முழங்கும் பலரை விட கூட்டாக துவா கேட்டால் விளங்கக்கூடிய அரபியை தாய் மொழியாக கொண்ட நபித்தோழர்களுடன் இவ்வாரு நடைமுறைப் படுத்தியதாக கூட்டாக துவா செய்து ஆமீன் என்று முழங்கிய ஆதாரங்கள் இல்லை. மேலும் துவாவை உரக்க வேட்காமல் உள்ளத்தாலும் பணிவாகவும் அந்தரங்கமாகவும் கேட்க வேண்டும் என்பதே அல்லாஹ்வின் கட்டளை பார்கவும் 7 : 55 , மற்றும் நபி ஸல் அவர்களும் உரக்க சப்தமிட்டு கேட்பதை தடுத்து நீங்கள் தொலைவில் உள்ளவரையோ அழைப்பை கேட்க இயலாதவரையோ அழைக்கவில்லை என்று தடுத்துள்ளனர், அவரவர் தனித் தனியாக பணிவாக அந்தரங்கமாக கேட்க வேண்டும் என்பதையே வலியுறுத்தியுள்ளார்கள் என்பதை காண முடிகிறது. 11
September 29, 2009 22:47
சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் அளித்த பதிலில், கூட்டுத்துவா பற்றி அளித்த விளக்கம் அருமை.
குர்ஆன் வசனத்தினைச் சுட்டிக் காட்டியதன் பின் அதில் மறுபேச்சுக்கு இடமில்லையெனினும், உள்ளத்தில் அது பற்றிய சிந்தனை ஓடத் தான் செய்கிறது. மூட முடியவில்லை. "ஜமாத்தாக தொழுவது சிறப்பு" எனும் ஹதீஸினைப் பற்றி என்னும் போது, "ஏன் ஜமாத்தாக தொழுவது சிறப்பு ?" என்ற கேள்வியை நான் என்னை நோக்கியே வினவிய போது, "அது இறைவனின் பார்வையில் நமது பணிவினை மேம்படுத்துகிறது" என விளங்கிக்கொள்கிறேன். அதுபோல இரைஞ்சுதலும் அப்படித்தானே என எண்ணத்தோன்றுகிறது. 12
October 02, 2009 07:55
சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் சுட்டிக்காட்டிய குர்ஆன் வசனத்தின் (7:55) தஃப்சீர் விளக்கம் என்ன என்பதினைப் பார்க்கவேண்டும். அந்த வசனத்தில், "அல்லாஹ்வை அடக்கத்துடனும் இரகசியமாகவும் அழையுங்கள்; அவன் வரம்பு மீறுபவர்களை விரும்புவதில்லை" எனக் கூறுகிறான்.
இதில் "வரம்புமீறுபவர்களை விரும்புவதில்லை" எனச் சேர்த்துக் கூறுவதால் நமது சிந்தனையில் ஓட்டம் ஏற்படுகிறது. ஒருவர் மற்றவர்களின் காதில் விழும்வாறு பிரார்த்தித்தால், வரம்பு மீறியவர்கள் ஆகிறார்களா ? என்று எழும் கேள்வியை நாம் தடுக்கமுடியவில்லை. மேலும் "அழையுங்கள்" எனும் வார்த்தைப் பிரயோகமும் நம்மைச் சிந்திக்க வைக்கிறது. இருவர்களுக்கு மத்தியில் உள்ள பிணக்கினைப் பற்றிய விவாதத்தின் போது, தனது கருத்தினை நிலை நாட்ட "அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான்" என அழைத்தோ, "யா அல்லாஹ்" என அழைத்தோ தனது பக்கமே சரியானது என்ற தோற்றத்தினை மற்றவர்களுக்கு மத்தியில் ஏற்படுத்த முயல்வதினை அவ்வசனம் தடைசெய்கிறதோ என எண்ணுகிறேன். வல்ல இறைவனே நமக்கு வழிகாட்ட வேண்டும். 13
October 02, 2009 07:58
ஆனால் சகோதரர் அப்துல்லாஹ் அவர்களித்த பதிலில், "ஹதீஸ்கள் முழுமையாக நபி அவர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறது" என கூறுவதினை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவர் இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.
மேலும் "சஹீஹான ஹதீஸ்கள்" என்பதினை "ஆதாரபூர்வமான ஹதீஸ்கள்" எனப்பொருள்படும்படி விளங்கிக்கொள்வது பித்'அத்தா என நான் கேட்ட கேள்விக்கு விடையை நான் எங்காவது தேடிக் கொண்டுதான் இருக்கிறேன். அவ்வாறு நினைக்க முடியாதவண்ணம் பல ஹதீஸ்கள் இருப்பதாலேயே. 14
October 02, 2009 07:59
சகோதரர் ஷாஹித், அஸ்ஸலாமு அலைக்கும்.
(அனைத்துலக முஸ்லிம்களுக்கும் பொருள் தெரிந்திருக்க வேண்டிய) சூரத்துல் பாத்திஹா குரானில் உள்ள துவா. அது அனைவருக்கும் பொதுவானது மற்றும் பொருந்தக்கூடியது. அதுபோல் பல துவாக்கள் உள்ளன. அவற்றை எங்கு வேண்டுமானாலும் நமது நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத வகையில் அல்லாமல்(இது முக்கியம்) கூட்டு துவா செய்து பிறருடன்(எம்மொழியினருடனும்)ஆமீன் கூறிக்கொள்ளுங்கள். பின்னர், தன் சொந்த தேவைகளை எப்படி ஜமாத்தாக(பல மொழியினருக்கும்) துவா கேட்பது என்று சிந்தியுங்கள். இப்படி உங்களைப்போல் கூட்டுதுவா தான் உயர்ந்தது என்று எண்ணி, தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் எண்ணற்ற தேவைகள் இருந்தும் அரபாவில் தனக்காக துவா கேட்காமல் சென்ற ஹாஜிகளை என்ன சொல்வீர்கள்? 15
October 02, 2009 14:48
அன்புள்ள ஷாஹித், (தொடர்ச்சி) --
ஸஹி என்றால் உண்மை. உண்மைதான் ஆதாரமாக கொள்ளப்படும். அறிவிப்பாளர் தொடர் உண்மையானது&சரியானது என்றால் ஸஹிஹான ஹதீஸ். இதற்கு நீண்டநாள் ஆராய்ச்சி எல்லாம் எதற்கு?அதுதான் ஆதாரபூர்வமான ஹதீஸ் என்று புரியவில்லையா? இப்படி ஒரு ஹதீஸ், குரானுக்கும் மற்ற குரானுக்கு முரணில்லா ஸஹி ஹதீஸுக்கும் முரணாய் இருக்கமானால், அப்போது குரானுக்கும் மற்ற ஸஹி ஹதீஸுக்கும் முக்கியத்துவம் அளித்து முந்தையதை விட்டு விடுதலே என்னுடைய ஈமான் ஆகும். புகாரி ஹதீஸ்-293 படித்துவிட்டு நான் யோசித்ததையே அதன் தொகுப்பாளர் இமாம் புகாரி(ரஹ்) தன் கருத்தாய் அதன் கீழேயே கூறியுள்ளார். அதே ஈமான் தான் என்னிடம் உள்ளது. 16
October 02, 2009 14:50
அஸ்ஸலாமு அலைக்கும்.அனைத்து முஸ்லிம்களுக்கும்.
// மேலும் "சஹீஹான ஹதீஸ்கள்" என்பதினை "ஆதாரபூர்வமான ஹதீஸ்கள்" எனப்பொருள்படும்படி விளங்கிக்கொள்வது பித்'அத்தா // ஹதீத்களின் தராதரம் பிரித்து ஏற்றுக் கொள்ளப்படுபவை என்றும்.திருக் குர் ஆனுக்கு. முரணில்லாமல் இருந்தாகனும். ஏற்க்கனவே அறிவித்த நம்பகமான அறிவிப்பாளருக்கு முரண்பாடு இல்லாமல் இருக்கவேண்டும். என்றெல்லாம் நிர்ணயித்து வைத்துல்லாதால் தான் அது நமக்கு முழு திருப்தி அளித்து பின் பற்றதக்கவை என்று நம்ப முடிகிறது. // அவ்வாறு நினைக்க முடியாதவண்ணம் பல ஹதீஸ்கள் இருப்பதாலேயே. // அப்படி நினைக்க முடியாத வண்ணம் உள்ள ஹதீகளை நீங்கள் விவரிக்கவில்லையே ! மா சலாம். அப்துல் அசீஸ். 17
October 02, 2009 22:09
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ....
//மேலும் சூரா பாத்திஹாவுக்கு பிறகு ஆமீன் என்பது நபி வழி என்பதால் அப்போது மட்டும் ஆமீன் சொல்லலாம், இதை கூட்டு துவாவுக்கு ஆதாரமாக கொள்ளலாகாது. ஏனென்றால் இன்று என்ன சொல்லபடுகிரது என்று தெரியாமல் ஆமீன் ஆமீன் என்று முழங்கும் பலரை விட கூட்டாக துவா கேட்டால் விளங்கக்கூடிய அரபியை தாய் மொழியாக கொண்ட நபித்தோழர்களுடன் இவ்வாரு நடைமுறைப் படுத்தியதாக கூட்டாக துவா செய்து ஆமீன் என்று முழங்கிய ஆதாரங்கள் இல்லை. // (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.(அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.(1:4 - 7) இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. 51:56 18
October 03, 2009 16:17
இந்த வசணத்திற்க்கு விளக்கம் கொடுக்கும் போது தொழுகை,நோன்பு, திக்ர்... இவைகள் மட்டுமே வணக்கங்கள் அல்லாது நாம் அன்றாடம் செய்யும் அனைத்து நற் செயல்கள் அனைத்துமே வணக்கங்களாகவே மாறிவிடுகின்றன. நாம் அல்லாஹ்வின் முன் இருந்து கொண்டிருக்கிறோம், அல்லாஹ் நம்மின் செயல்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற வகையில் ( தக்வாவின் அடிப்படையில் - சத்தியா மார்கத்தின் அருமையான விளக்கம் - லிங்க் தேடிப் பார்த்து கிடைக்கவில்லை) . - இந்த அடிப்படையில் பார்க்கும் போது தொழுகையில் ஓதும் துவாவும் கூட்டு துவாவும் ஒரே அந்தஸ்த்தை பெற்று விடுகின்றன.
நம் பணி என்னவாக இருக்கவேண்டும் எனில் நாம் அமர்ந்திருக்கும் சபையை ( துவா, திக்ர் மஜ்லிஸ் ....) மேற்சொன்ன தக்வாவின் அடிப்படையில் அவர்களை ஒரு முகப் படுத்துதலாகவே இருக்க வேண்டும்,அதை விடுத்து புரியாத மொழி என்றும், இமாம் மாற்றி ஒதி விடுவாரோ என்ற பயம் எல்லாம் தேவையில்லாதது. 19
October 03, 2009 16:18
மேற் சொன்ன தங்களின் கருத்துப்படி தொழுகையில் ஒதும் அரபி சூராக்களுக்கு அர்த்தம் தெரியாமல் ( மொழி தெரியாததால்) நம்மில் பலரும் தேமே என்றுதான் நின்று கொண்டிருக்கிறோம். ஆகையால் தொழக் கூடாது என்று சொல்லுவீர்களா?
நாம் தொழும் போது லுஹர்,அஸர் போன்ற தொழுகையில் இமாம் சப்தமின்றி அமைதியாகவே சூராக்களை ஒதுகிறார். அவர் சூராக்களைத்தான் ஓதுகிறார? அல்லது வேறு எதையாவது முனு முனுக்கிறாரா? என்று நாம் கேள்வி எழுப்பவதில்லை. எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் என்போம். அதே நம்மிக்கை அடிப்படைதான் இங்கும் தேவை. நம்பிக்கை கொண்டோரே என்று தொடங்கும் வசணங்களையும் பார்க்கவும் - நாம் எதன் மீதெல்லாம் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதையும்.! எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! 2:201 எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்;, எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக! 3:16 20
October 03, 2009 16:19
எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக. 3:147
யாஅல்லாஹ்! எங்கள் உள்ளங்களை இணைப்பாயாக! எங்களுக்கு மத்தியில் (நட்பை) சீர்படுத்துவாயாக! வெற்றிக்குரிய வழிகளை எங்களுக்கு காட்டு வாயாக! இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் எங்களுக்கு ஈடேற்றம் அளிப்பாயாக! வெளிப்படையான, அந்தரங்கமான அனைத்து மானக்கேடான விஷயங்களை விட்டும் எங்களை நீ பாதுகாப்பாயாக! எங்கள் செவிப்புலன்கள், பார்வைகள், உள்ளங்கள், மனைவியர்கள், வாரிசுகள் ஆகிய அனைத்திலும் அபிவிருத்தி செய்வாயாக! எங்களை மன்னித்தருள்வாயாக! நிச்சயமாக நீயே மன்னிப்பவனும் கிருபை செய்பவனுமாவாய். உன்னுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவர்களாக, அதற்காக உன்னை புகழ்பவர்களாக, உனது அருட்கொடைகளை ஏற்றுக் கொள்பவர்களாக எங்களை ஆக்குவாயாக! மேலும் எங்களுக்கு (உன்) அருட்கொடைகளை பரிபூரணப் படுத்துவாயாக! ( நபிகளாரின் துவா) 21
October 03, 2009 16:20
மேற் சொன்ன குரான் வசணங்களிலும், நபிகளாரின் துவாவிலும் எனக்கு என்ற சொல் பயன் படுத்தப் படவில்லை. எங்களுக்கு என்று அனைவருக்காகவும் பொதுவாக( கூட்டாகவே) கேட்கப் படுகிறது என்பதும் கவனிக்கத் தக்கது.
("எங்களுக்கு" என்பதை விடுத்து "எனக்கு" , "நான்" என்று மேற் சொன்னவைகளை (குறிப்பாக 3:16) ஒரு முறை ஓதிப் பார்த்து அர்த்தத்தை புரிந்து கொள்ளவும் .மேலும் ஹதீதுதான் வேண்டும் எனில் அடுத்த பதிவுகளில் இன்ஷா அல்லாஹ் பதிகிறேன். என்றும் அன்புடன், hba. 22
October 03, 2009 16:20
அன்பு சகோதரர் ஷாஹித் அவர்களே
// நபி ஸல் அவர்களுடைய முழு வாழ்க்கையும் ஹதீஸ்களில் சித்தரிக்கப்படுகிறதா?// அல்லாஹ் நம்மை நபி ஸல் அவர்களிடம் முன் மாதிரியுள்ளது 33: 21, அவரையே பின் பற்றுங்கள் என்று அல்லாஹும் என்னைப் பின்பற்றுங்கள் என்ற குர் ஆன் வசனமும் 3:31, நமக்கு அவருடைய வழிகாட்டலை பின் பற்றுவதை கடமையாக்குகிறது. நபி ஸல் அவர்களுடைய இபாதத் வணக்க வழிபாடுகள் முதல் அன்றாடதில் இல்லாதது இருக்கும் என்று நினைப்பது ( இருக்குமா எனபது வேறு விஷயம் ) நமக்கு அவசியமற்ற ஒன்று அல்லாஹ் நபி வழிகளில் ஏதேனும் ஹதீஸ்களில் இல்லையென்றால் ( அப்படி இருந்தாலும்?) அதைப் பற்றி நம்மை குற்றம் பிடிக்க மாட்டான். . மார்க்கம் எளிமையானது அதன் அடிப்ப்டை தெளிவானது பார்கவும் 3 : 7 ஆக முஹக்கம் எனும் தெளிவான அடிப்படைகளையே நாம் செயல் படுத்த கடமைப் பட்டுள்ளோம் அல்லாஹ் அருள் புரிவானாக. அன்புடன் அப்துல்லாஹ் M // 23
October 03, 2009 18:14
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் ஷாஹித் அவர்களே ஸஹீஹான ஹதீஸ்கள் என்பது வழமையில் அறிவிப்பாளர் மற்றும் அறிவிப்பாளர்கள் தரம் போன்றவற்றை ஆய்வு செய்த ஹதீஸ் கலை வல்லுனர்கள் பலவீனமற்றவை என்று கருத்தளித்துள்ள ஆதாரபூர்வமான ஹதீஸ்களை குறிக்கும்.இது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அறிஞர்களின் பல்லாண்டு பெரு முயற்ச்சிக்கு பின் சாத்தியமான ஒன்றாகும். பித் அத் (என்பது ஸுன்னத் என்பதன் எதிர்ப்பதம் எனலாம்,) என்றால் மார்க்கத்தில் நபி ஸல் அவர்கள் சொல் செயல் அங்கீகாரமற்ற மார்க்க அனுஷ்டானங்கள் என்று பொருள். ஸஹீஹான ஹதீஸ்கள் என்று சொல்வது பித் அத் ஆகாது ஏனெனெல் நபி ஸல் அவர்கள் கூறியதில் அல்லது அங்கீகாரம் அளித்ததில் ஏதும் கூட்டிடவோ குறைத்திடவோ அல்லது மாற்றிடவோ கூடாது எனும் அடிபப்டையில் எடுக்கப் பட்ட பெரும் முயற்சியின் நற் பலனே இந்த ஸஹீஹான ஹதீஸ்கள் எனும் ஆதார பூர்வமான நபி மொழிகளின் தொகுப்புகள். 24
October 03, 2009 19:35
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் ஷாஹித் அவர்களே 7: 55 வசனத்திற்கு தப்ஸீர் இப்னு கதீர் தமிழ்(ரஹ்மத் அறக்கட்டளை) விளக்கத்தை பக்கம் 630, 631, 632 & 633ல் காணவும். அதில் குறிப்பாக " பிற்காலத்தில் ஒரு சமுதாயத்தினர் தோன்றுவர் அவர்கள் பிராத்தனை புரிவதில் எல்லை மீறுவர்" எனும் நபி மொழியும்... குஃப்யதன் எனும் வாசகம் இரகசியமாக எனும் பொருள் என்ற் விளக்கமும்,, 7 : 205 வசனம் மற்றும் " நீங்கள் காது கேட்காதவனிடம் பிராத்தனை செய்யவில்லை( மெதுவாக பிராததனை செய்யுங்கள்) எனும் புகாரி 2992. 4205, 6384, 6610 ஹதீஸ்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நபி ஸக்கரியா (அலை) அவர்கள் இறைவனை மெல்லிய குரலில் அழைத்தார் என்ற குர் ஆன் வசனமும் 19 : 3 இதன் விளக்க தஃப்ஸீரில் தஃப்ஸீர் இப்னு கதீரில் உள்ளது. அன்புடன் அப்துல்லாஹ் M 25
October 03, 2009 22:03
அனைத்து முஸ்லிம்களுக்கும். அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு சகோ hba , அவர்களின் குர்ஆன் ஆதாரங்கள் ஏற்றுக் கொள்ளப் படவேண்டியவையே ! அது துஆவாக இருந்தாலும் வணக்கமாகவும் ஆகிவிடுகிறது. அந்த தொழுகை என்னும் வணக்கத்தில் பாதியில் முடித்துக் கொண்டு வந்துவிடமுடியாது.
கூட்டு துஆ என்பது தொழுகை போல் ஆரம்பம் தக்பீர் முதல் சலாம் கொடுக்கும் வரை இருந்தாகனும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.அவசர வேலை காரணமாக தொழுகையோடு முடித்துக் கொண்டு போகக் கூடிய சிலரும் இருப்பார்கள். இமாம் பொதுப் படையாக மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டு கேட்கும் துஆ அன்றி வேறு தனி தேவைகள் உள்ள துஆ கேட்பவர்களும் அவையில் இருப்பார்கள். இதற்காக இமாம் முடித்துக் கொள்ளட்டும் பிறகு தனியாக கேட்டுக் கொள்வோம்; அல்லது கேட்டுக் கொள் என்ற சுய விளக்கம் மார்க்கத்தில் தேவையில்லை. அவரவர்கள் விருப்பத்தில் பிரார்த்தனையை விடுவது மூலம் சிரமத்திற்கு உள்ளாக்கப் படுவதை தவிர்ககலாம். அல்லது இமாம் துஆ கேட்கும் பொழுதே உங்களின் தனித் தேவைகள் உள்ள துவாவையும் கேட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லி, நேரம் பாழாவதை தவிர்க்கலாம். மா சலாம். அப்துல் அசீஸ். 26
October 04, 2009 02:25
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் hba அவர்களே // எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக. 3:147 // நமது தொழுகையிலோ நமது தனிபட்ட துவாக்களிலோ பொதுவாக அனைத்து முஸ்லிம்களுக்கும் சேர்த்து அருள் புரிய , பாவமன்னிப்பு கோருவது அல்லது முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் ஹிதாயத் வேண்டி அந்தரங்கமாக பிராத்திப்பது வேறு மற்றும் ஒருவர் பிராத்திக்க மற்றவர்கள் ஆமீன் ஆமீன் என்று கோரஸாக உறக்க முழங்குவது என்பது வேறு என்பதை விளங்கவும், எனது முந்தய பதிவுகளையும் பார்க்கவும் நபி வழியில் இந்த நடைமுறைக்கு ஆதாரங்கள் இல்லை என்பதை அறிய முடியும், அவர்கள் செயல் படுத்தாததை நாம் செயல் ப்டுத்துவது அனுமதிக்கப்பட்ட ஒன்றல்ல. ஆக ஒருவர் அனைவருக்கும் துவா செய்வது வேறு தொழுகையில் அர்த்தம் புரியவில்லையெனிலும் தொழ வேண்டும் என்பது அல்லாஹ் விதித்துள்ள க்டமையென்பதால் அந்நிலை வேறு, மற்றும் வார்த்தைக்கு வார்த்தை பொருள் தெரிய வில்லையெனிலும் நபிவழி துவாக்களை ஒருவர் ஓதி தன்க்கும் அனைவருக்கும் ( அந்தரங்கமாக ) பிராத்திப்பது வேறு என்று புரிந்து கொள்ள வேண்டும். அன்புடன் அப்துல்லாஹ் 27
October 04, 2009 06:18
"There is no hadith states thats Nabi(SAW) prayed 8+3 rakat at night during RAMADAN."
This 8+3 is his usual day prayer. Ramadan is the gifted month to do more amal esp during night. There is no chance that Nabi(SAW) have prayed only limited(8+3 rakat) during the blessed month of RAMADAN. Ramadan month prayer must have more no. of rakat as Umar(RA) practised 20rakat. Umar(RA) is not a normal person who can do the amal which was not practised by Nabi(SAW). We can't just take the proof in the form of text alone but life of Sahabha's including Khalifas also must be taken as the proof. May Allah give us the right understanding. 28
August 24, 2011 13:25
//as Umar(RA) practised 20rakat. Umar(RA) is not a normal person//
Dear Br. Siraj, Can you please cite out here any evidence that prove Umar (RA) practiced 20 rakas in Ramadan. Umar (RA) is not a normal person and neither our prophet too. 29
August 24, 2011 17:22
وقد أخبرنا أبو عبد الله الحسين بن محمد بن الحسين بن فنجويه الدينوري بالدامغان ثنا أحمد بن محمد بن إسحاق السني أنبأ عبد الله بن محمد بن عبد العزيز البغوي ثنا علي بن الجعد أنبأ بن أبي ذئب عن يزيد بن خصيفة عن السائب بن يزيد قال كانوا يقومون على عهد عمر بن الخطاب رضي الله عنه في شهر رمضان بعشرين ركعة قال وكانوا يقرؤون بالمئين وكانوا يتوكؤن على عصيهم في عهد عثمان بن عفان رضي الله عنه من شده القيام
Byhaiki: Imam Malik mentioned that 20 rakat was practised during the life time of Umar(R.A). Currently there are so many divisons of peoples "in the name of strong hadith-weak hadith debate" they have almost eliminated most of the valuable practises of our nab(SAW). Life of sahaba's also must be taken into account in addition with the book of hadith. No where Nabi(SAW) have said, in future there will be a group of imam's like imam bukhari,imam muslim & so on will come and they will make a collection of hadith of mine in volumes so you have to take only those hadith as proof of my life. There is no such things. Our beloved imaams like IMAM(Buhkari,Termidzi,Muslim,Abudawud...) have collected the life time happenings of our Nabi(SAW) and presented to us in the form of books from their best of efforts. It doesnt mean that it will cover the whole 100% life of Nabi(SAW) and more and more are left out and not record in text form. As like if one wants to take quran alone as the source to follow by neglecting the hadith of Nabi(SAW) then they will be confused. Hadith's are the explanation of the quran. Life of Sahaba's are the explanation of the hadith. So we have to take Quran,Hadith and the way of Khalifa's and Shahaba's to practise the complete deen of Allah(SAW). 30
August 25, 2011 07:17
The 20 Rakats Taraweeh prayer is a Sunnah Muakkadah - It is related from Sayyidina Ibn Abbas : ‘The Prophet would pray 20 Rakats and then witr in the
month of Ramadhan.’ (Musnad ibn Abi Shaybah vol 2, p294/ Sunan Baihaqi vol 2, p496/ Tibraani Kabir vol 11, p393/ Musnad ibn Hameed p218) Ibn Hajar Al Asqalani رحمه الله related from Imam Rafi رحمه الله : The Prophet prayed 20 Rakats in Taraweeh on two consecutive nights with a congregation in Ramdhan. On the third night many more people gathered (for a congregation) but the Prophet did not appear before them. In the morning the Prophet stated: ‘It occurred to me that this prayer (20 Rakats in Ramadhan) could become compulsory (Fard) upon you, and you would not be able to bear it.’ This narration related by Hafiz Ibn Hajar Asqalani, after relating it, he used to state: ( (متفق على صحته ‘There is a consensus amongst all the Muhadditheen that this narration is sound (Sahih).’ (Talkeesul Habeer Fe Takhreej Ahadith Rafi ul Kabeer vol 1, p119) Sayyidina Abu Dhar Ghifari related: ‘We (the Companions) observed the fasts of Ramadhan with the Prophet . In the whole month the Prophet did not lead us in prayer, until there were 7 days left in the month. The Prophet then led us in prayer on the 23rd, 25th and 27th night. (Sunan Abu Dawood vol 1, p195) Sayyidah Aisha related: ‘After these nights (23, 25 &27th) the congregation grew to a very large number on the 29th night. The Masjid of the Prophet had become filled to capacity. On this night the Prophet only came out to lead the people for the Fajr prayer. After the Fajr prayer, the Prophet stated: ‘I knew that you had gathered for the night prayer (Taraweeh) but I feared that this prayer would become compulsory (Fard) upon you and you would find it difficult to fulfil. (Sahih Bukhari vol 1, p269/ Sahih Muslim vol 1, p259) Even in the days in which the Prophet did not pray in congregation, Sayyidina Ibn Abbas has related: Verily in the month of Ramadhan, The Prophet used to pray 20 Rakats and Witr independent from any congregation. (Sunan Baihaqi As-Sunanul Kubra vol 2, p496) Allamah Subqi Shafi’ رحمه الله stated: ‘Our belief is that the 20 Rakats Taraweeh is a Sunnah, which is proven from a sound chain.’ (Sharahul Minhaaj) 31
August 25, 2011 10:39
The ‘Ahle Sunnah Wal Jamat’ are those who are satisfied and content with the actions/teachings of the Sahabah
The soundness and correctness of the above narrations is supported by the very actions of the Sahabah . It was the nature of the Sahabah that without the order and permission of the Prophet they would not perform any religious action. They would not create innovative practices in the Deen. It is this very same 20 Rakats Taraweeh that has been performed from the time of the Sahabah to the present day in congregation in the month of Ramadhan. This form of worship has been passed down from generation to generation and safeguarded to this day. The strength of these Ahadith is established from the Khulafa Rashideen and Sahabah , Scholars of Hadith, Jurists and Mujtahideen of this Ummah, as well as the very practice of the Ummah itself. The Hadith related in respect of the 20 Rakats Taraweeh above has been related by Sayyidina Ibn Abbas . Sayyidina Umar then acted upon this narration and ordered the Ummah to read 20 Rakats Taraweeh behind an Imam. Both of these Companions are recognised as reliable and sound narrators of Hadith and on their narrating there is no doubt. It is the proven unanimous practice of the Sahabah to act upon this narration of Sayyidina Ibn Abbas which authenticates this narration as a correct and accepted practise. The Prophet stated: ‘After my time, people will see much differences occurring. In such a condition, it is compulsory upon you that you hold firmly to my Sunnah and the rightly guided path of the Khulafa Rashideen.’ (Mishkaat Masabih p30) The Prophet specifically gave the Ummah an advice; related from Sayyidina Huzaifa : The Prophet stated: ‘I do not know how long I will remain amongst you. After me, follow Abu Bakr and Umar . (Mishkaat Masabih p560/ Sunan Ibn Majah #97) Sayyidina Abu Rahman bin Abdul Qari related: I left one night in Ramadhan with Sayyidina Umar bin Khattab and we headed towards the Masjid of the Prophet . In the Masjid we saw various groups of people praying alone or behind an Imam and they were scattered over the Masjid. Umar bin Khattab made a decision to congregate all the people behind Sayyidina Ubay ibn Ka’ab . (Sahih Bukhari vol 1, p269) Yazid bin Ruman رحمه الله related: In the time of the Khalifah of Sayyidina Umar bin Khattab people would pray 23 Rakats behind an Imam (20 Taraweeh, 3 Witr). (Muwatta Imam Malik vol 1, p98/ Sunan Kabeer Baihaqi vol 2, p496) Abi Abdur Rahman Salmi رحمه الله related: In the nights of Ramadhan, Sayyidina Ali called upon the recitors of the Qur’an (Huffaz/Qura) and ordered one amongst them to lead the people in 20 Rakats of Taraweeh. Sayyidina Ali would lead the people himself in the Witr Salah. (Sunan Kabeer Baihaqi vol 2, p496/ Fathul Bari vol 4, p219) 32
August 25, 2011 10:45
Continue.....The ‘Ahle Sunnah Wal Jamat’ are those who are satisfied and content with the actions/teachings of the Sahabah
Hafiz Ibn Taymiyyah رحمه الله writes in his Fatawa: ‘Verily it has been proven that Umar made Ubay ibn Ka’ab lead the people in 20 Rakats of Taraweeh and 3 Witr in Ramadhan. This is the way of the scholars of this Ummah and this is the Sunnah. This is due to the fact that Sayyidina Ubay ibn Ka’ab read 20 Rakats Taraweeh in a large congregation of the Muhajireen and Ansar of the Sahabah and none amongst them objected to this practice.’ (Fatawa Ibn Taymiyyah vol 1, p191/ Al Mughni vol 1, p803) In the time of Hafiz Ibn Taymiyyah رحمه الله when the Rawafid (Shia) put the blame upon Sayyidina Umar for creating the innovated practice of 20 Rakats Taraweeh. Ibn Taymiyyah رحمه الله responded to this allegation by writing in defence of Sayyidina Umar to the Rawafid: ‘If Sayyidina Umar Farooq by establishing 20 Rakats of Taraweeh had been deemed to adopt a bad practise, then Sayyidina Ali would have put an end to this in his Khilafat. However, in the Khilafat of Sayyidina Ali , he too would read 20 Rakats Taraweeh prayer in Kufa. In the month of Ramadhan, Sayyidina Ali would state: ‘May Allah enlighten the grave of Sayyidina Umar , just as He (Umar ) has enlightened our Masajids for us.’ (Due to the fact of establishing the 20 Rakats Taraweeh for the Ummah). (Minhaaj ul Sunnah vol 2, p224) Those Ghair Muqalideen who accuse Umar for introducing the innovation of 20 Rakats Taraweeh in his Khilafat, ask yourselves this, are you not treading the same path with your words as the Rawafid (Shia) in the time of Ibn Taymiyyah ?رحمه الله This practise of 20 Rakats continued throughout the Khilafat of Sayyidina Uthman and Sayyidina Ali & remained unaltered in the entire world until today. Alham-du-lil-lah, this is practised still today in the holiest Masajid i.e. Masjid Haram Makkah, Masjid Nabwi and Masjid al-Aqsa. Sayyidina Abdullah Ibn Masood , who is one of the most senior Sahabah in terms of knowledge and Taqwa, gave this advice to the Ummah in respect of the status of the Sahabah , upon which we should reflect wholeheartedly: ‘Sayyidina Ibn Masood stated: if you wish to follow the way of anyone, then follow the path of the Sahabah . These Sahabah had pure hearts, depth of knowledge, were devoid of show and pomp, had simplicity and were the best people of this Ummah. Allah preferred this great group of the Sahabah for the company of his most beloved Prophet and used them to establish his Deen. For this reason, their greatness should be recognised and their path followed, as truly they were those who were upon the rightly guided straight path.’ (Mishkaat Masabih, p32) Asad bin Amr رحمه الله related from Qazi Imam Abu Yusuf رحمه الله ‘I asked Imam Abu Hanifa رحمه الله about the matter of Taraweeh and what Sayyidina Umar had done in this respect. Imam Ahle Sunnah Wal Jamat Abu Hanifa رحمه الله replied: ‘20 Rakats of Taraweeh is Sunnah Muakkadah. Sayyidina Umar did not establish this from his own accord, nor was he one to create innovations in the Deen. Rather, he was the greatest in his hatred of innovation. The order that he gave for the 20 Rakats of Taraweeh, verily; there would have been an order of the Prophet in this respect.’ (Marakeeyul Farah Ma’a Hashiya p334) 3 Imam Ahle Sunnah Wal Jamat Ahmed bin Hanbal رحمه الله stated: ‘It has reached me that Sayyidina Umar bin Khattab would read 20 Rakats of Taraweeh.’ (Al Mughni vol 2, p168/ Baihaqi vol 1, p296/ Muwatta Imam Malik p40) 33
August 25, 2011 10:45
The supporting proof from the Scholars of the Ummah that the Narration of Aisha is in respect of Tahajjud prayer
Allamah Abu Bakr ibn Arabi رحمه الله writes: ‘the 11 Rakats (8 Rakats Nafl, 3 Witr) narration related by Aisha refers to the Qiyam ul Layl (Tahajjud) of the Prophet .’ (Aridatul Ah’wadhi Shara Tirmidhi vol 4, p19) Ibn Hajar Al Asqalani رحمه الله also refers to this narration as referring to the Tahajjud (8 Rakats) with Witr (3 Rakats). (Fathul Bari Sharah Bukhari vol 3, p328) Qazi Ayadh Maliki رحمه الله has taken all of Aisha narrations as referring to the Tahajjud prayer of the Prophet , which He would perform in Her house. (Sharah Muslim Nawawi vol 1, p253) Qazi Mohammad Shawqani رحمه الله who himself was a Ghair Muqalid Aalim writes: ‘The narration of Aisha in Sahih Bukhari and Sahih Muslim referring to the 11 Rakats in and outside of Ramadhan is in respect of Tahajjud Qiyam ul Layl. (Naylul Awtar vol 3, p39) Shah Abdul Aziz Muhaddith Dehlawi رحمه الله states: ‘the narration of Aisha is in regards to Tahajjud which whether it was Ramadhan or not the Prophet would always perform. (Fatawa Azizia p125) Shah Waliullah Muhaddith Dehlawi رحمه الله writes: ‘The 20 Rakats of Taraweeh is an ‘established continuous Sunnah’ (Sunnat Qai’mah Mutawatira) which has been practiced in its current form since the time of the 1st generation of Muslims (Salaf-us-Saliheen رحمهم الله ) in a united manner. Specifically, for the view of the 4 Imams to agree upon a matter is one of the greatest proofs of it being an established Sunnah.’ (Hujatulahil Baligha vol 1, p412-3) Verily 20 Rakats Taraweeh is Sunnah Muakkadah (an emphasized Sunnah) on both men and women. (Ad-Durrul Mukhtar. vol 1 p.520) After all these narrations and sayings, an appeal is made to the Ghair Muqalideen to act upon the sayings and way shown by the Sahabah and do not destroy your Akhirah by following another way. The actions of the Sahabah are the actions of Rasulullah . There are others, who without having the mind-set of the Ghair Muqalideen, through laziness or are easily influenced read 8 Rakats of Taraweeh and leave. Why is this the case that due to laziness 20 Rakat Taraweeh is neglected? Performing less than 20 Rakaat Taraweeh is a sin. These people are deprived of a very great worship of Ramadhan (not only in relation to Salah but also in the context of listening to Qur’an as established Sunnah) and lose out on the immense bounties and rewards to be presented on the Day of Qiyamah. 34
August 25, 2011 10:47
"மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை..." (33:36).
35
August 25, 2011 11:33
அஸ்ஸலாமு அலைக்கும்
http://ahlussunnathwaljamath.blogspot.com/2011/01/8-20-1.html 36
August 25, 2011 12:01
Mr. Siraj,
I could not find from your second post عن السائب بن يزيد قال كانوا يقومون على عهد عمر بن الخطاب رضي الله عنه في شهر رمضان بعشرين ركعة قال وكانوا يقرؤون بالمئين وكانوا يتوكؤن على عصيهم في عهد عثمان بن عفان رضي الله عنه من شده القيام Byhaiki: Imam Malik mentioned that 20 rakat was practised during the life time of Umar(R.A). that Umar (RA) practiced 20 Rakats in Ramadan that you wrote in your first mail. Moreover it seems that you mixed your words with Imam Byhaki's word. Please cite out here If you have any other established proof that Umar (RA) prayed 20 rakats in Ramdan, I suggest you to input in Tamil. We will discuss the matter deeply. 37
August 25, 2011 13:15
சகோ. முஹம்மது அப்பாஸ்,
வ அலைக்குமுஸ்ஸலாம். நீங்கள் அளித்துள்ள சுட்டியான 'அஹ்லுஸ்ஸுன்னத்' பகுதியில் ரஸூலுல்லாஹ்வின் சுன்னத்தை விடுத்து, மற்ற பலருடைய சுன்னததுகளைப் பற்றியே மிகக் கூடுதலாக எழுதப்பட்டுள்ளது என்பதையும் அல்லாஹ்வின் தூதரைவிட மற்றோருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் இங்குத் தெரிவித்துக் கொள்கிறேன். 38
August 25, 2011 13:58
There is no such things like Nabi(saw) sunnat and other Khalifa's sunnat. Every khalifas and shahabas followed the sunnat of one and only Nabi(SAW). Here the point is not all the hadith of Nabi(SAW) are recorded in the form of hadith collection, instead some of the practises are of Nabi(SAW) are in the life of khalifas and shahaba's but may not be recorded as direct quote.
Thats why our ulama's took both the direct hadith of Nabi(SAW) and the practical life history of his followers. 39
August 26, 2011 11:55
அன்பான சிராஜ்,
//There is no such things like Nabi(saw) sunnat and other Khalifa's sunnat// 'சுன்னத்' என்றாலே சுன்னத்துர் ரஸூல்தான். நீங்கள் எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்கின்றீர்கள் என்று நினைக்கிறேன். முதலில் இதில் நீங்கள் தெளிவடைந்து கொண்டு பதில் தாருங்கள். அதற்கு முன்னர் //as Umar(RA) practised 20rakat// என உங்கள் முதலாவது பின்னூட்டத்தில் நீங்கள் குறிப்பிட்டதற்கு உருப்படியான ஒரு சான்றை இங்கு வையுங்கள். தொடர்பில்லாத, நெடிய, ஆங்கிலச் செய்திகளில் பெரிதாகப் பயனேதுமில்லை. 40
August 26, 2011 13:35
Proof # 1
أخبرنا أبو طاهر الفقية، قال: أخبرنا أبو عثمان البصري، قال: حدثنا أبو أحمد: محمد بن عبد الوهاب، قال: أخبرنا خالد بن مخلد، قال: حدثنا محمد بن جعفر، قال: حدثني يزيد بن خصيفة، عن السائب بن يزيد، قال: كنا نقوم في زمان عمر بن الخطاب بعشرين ركعة والوتر. Sa'eeb ibn Yazid: who said: 'In the time of Umar ibn al-Khattab (Allah be pleased with him) the people used to observe “20 rak'ahs” (Tarawih) and the witr.' [Marifat-us-Sunan wa'l athar - Imam Bayhaqi, Volume 004, Page No. 42, Hadith Number 5409] Imam al-Bayhaqi (rah) has also reported another version of the above narration through a different channel of transmission. وقد أخبرنا أبو عبد الله الحسين بن محمد بن الحسين بن فنجويه الدينوري بالدامغان ثنا أحمد بن محمد بن إسحاق السني أنبأ عبد الله بن محمد بن عبد العزيز البغوي ثنا علي بن الجعد أنبأ بن أبي ذئب عن يزيد بن خصيفة عن السائب بن يزيد قال كانوا يقومون على عهد عمر بن الخطاب رضي الله عنه في شهر رمضان بعشرين ركعة قال وكانوا يقرؤون بالمئين وكانوا يتوكؤن على عصيهم في عهد عثمان بن عفان رضي الله عنه من شده القيام Sa'eeb bin Yazeed (ra) who said: "In the time of Umar ibn al-Khattab (Allah be pleased with him), they would perform “20 rak'ahs” (Tarawih) in the month of Ramadan. He said (also): And they would recite the Mi'in, and they would lean on their sticks in the time of Uthman ibn Affan (Allah be pleased with him), from the discomfort of standing." [Bayhaqi Sunan al-Kubra Volume 002, Page No. 698-9, Hadith Number 4617] Imam al-Nawawi said: 'Its Isnad is Sahih'. (بإسناد صحيح) [Al-Khulasa al-Ahkam, Hadith Number 1961] Imam Badr ud din Ayni (rah) states: رواه البيهقي بإسناد صحيح عن السائب بن يزيد الصحابي، قال: كانوا يقومون على عهد عمر ، رضي الله تعالى عنه، بعشرين ركعة، وعلى عهد عثمان وعلي، رضي الله تعالى عنهما، مثله Translation: Imam al-Bayhaqi has narrated with “SAHIH CHAIN” from the companion Sai’b bin Yazid (RA) who said: During the tunure of Umar (RA) people used to stand for 20 Rakahs (of Tarawih), same was done in the time Uthman (ra) and Ali (ra) [Umdat ul Qari, Sharh Sahih ul Bukhari, Volume No. 5, Page No. 264, Published by Dar ul Fikr, Beirut, Lebanon] Al-Mubarakfuri the famous Salafi scholar also declared the Sanad of this hadith as “Sahih” and he cited Imam al-Nawawi (rah)’s authentication [Tuhfa Tul Ahwadhi, Volume No. 3, Page No. 453, Published by Dar ul Fikr, Beirut, Lebanon] Imam Nimawi al Hanafi (rah) said رجال هذا الاسناد كلهم ثقات Translation: All the men in this Isnaad are “THIQA” [Athaar al-Sunnan (2/54)] Proof # 2 و حدثني عن مالك عن يزيد بن رومان أنه قال كان الناس يقومون في زمان عمر بن الخطاب في رمضان بثلاث وعشرين ركعة Yahya related to me from Malik that Yazid ibn Ruman said, "The people used to watch the night in prayer during Ramadan for twenty-three rakahs in the time of Umar ibn al-Khattab." [Muwatta Imam Malik, Book 006, Hadith Number 005] Note: 3 Rakahs were of Witr Imam Tirmidhi (rah)'s opinion: وأَكْثَرُ أهْلِ العِلمِ على ما رُوِيَ عن عليٍّ وعُمر وغَيْرِهِمَا مِنْ أَصحابِ النبيِّ عِشْرِينَ رَكْعَةً. وَهُوَ قَوْلُ الثَّوْرِيِّ وابنِ المُبَارَكِ والشَّافِعيِّ رحمه الله. وقَالَ الشَّافِعيُّ: وهَكَذَا أدْرَكْتُ بِبَلَدِنَا بِمَكَّةَ، يُصَلُّونَ عِشْرِينَ رَكْعَةً The Majority amongst People of Knowledge, (agree) upon praying 20 Rakahs (of Tarawih) as is narrated from Umar (RA), Ali (RA) and other Sahaba of Prophet (Salallaho alaihi wasalam) Sufyan Thawri (rah), Abdullah Ibn Mubarak (rah) and Imam Shafi’i (rah) said the same, Imam Shafi'i (rah) said that he saw people of Makkah praying 20 Rakahs (Tarawih) [Sunnan Jami’i al Tirimdhi, Book of Fasting, Chapter on Qiyaam in Ramadan Volume 3 Page No. 169 Hadith No. 806] Proof # 3 حَدَّثَنَا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ حَسَنٍ ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ ، قَالَ كَانَ أُبَيّ بْنُ كَعْبٍ يُصَلِّي بِالنَّاسِ فِي رَمَضَانَ بِالْمَدِينَةِ عِشْرِينَ رَكْعَةً وَيُوتِرُ بِثَلاَثٍ. From Abdul Aziz bin Rafi who said: Ubay Ibn Ka'b (Allah be pleased with him) used to lead people during Ramadan in Madina Munawara for “20 Rakah” (Tarawih) and 3 Rakah Witr. [Musannaf Ibn Abi Shaybah Volume 005. Page No. 224, Hadith Number 7766] Proof # 4 أخبرنا أبو الحسن بن الفضل القطان ببغداد أنبأ محمد بن أحمد بن عيسى بن عبدك الرازي ثنا أبو عامر عمرو بن تميم ثنا أحمد بن عبد الله بن يونس ثنا حماد بن شعيب عن عطاء بن السائب عن أبي عبد الرحمن السلمي عن على رضي الله عنه قال دعا القراء في رمضان فأمر منهم رجلا يصلي بالناس عشرين ركعة قال وكان علي رضي الله عنه يوتر بهم وروى ذلك من وجه آخر عن علي Abdur Rahman Sulami narrates that Ali (Allah be pleased with him) called the reciters of the Quran in Ramadan and commanded one of them to perform “twenty rakat” (Tarawih) while Ali (Allah be pleased with him) himself used to lead the witr prayer. [Bayhaqi Sunan al-Kubra Volume 002, Page No. 699, Hadith Number 4620] 41
August 29, 2011 07:45
Proof # 5
عَنِ الْحَسَنِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ جَمَعَ النَّاسَ عَلَى أُبَيِّ بْنِ كَعْبٍ فِي قِيَامِ رَمَضَانَ، فَكَانَ يُصَلِّي بِهِمْ عِشْرِينَ رَكْعَةً Imam Hassan al-Basri (May Allah have mercy upon him) said: Umar Ibnul Khattab (Allah be pleased with him) gathered people behind Ubayy Ibn Kab (Allah be pleased with him) in the Qiyaam of Ramadan and he led them for “20 Rakat” [Siyar al A'lam wa al Nubalah Volume 001, Page No. 400-1, Biography of 'Ubayy Ibn Kab'] Imam al-Nawawi said: 'Its Isnad is Sahih'. (بإسناد صحيح) [Al-Khulasa al-Ahkam, Hadith Number 1961] Proof # 6 حَدَّثَنَا وَكِيعٌ ، عَنْ حَسَنِ بْنِ صَالِحٍ ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ ، عَنِ أَبِي الْحَسْنَاءِ أَنَّ عَلِيًّا أَمَرَ رَجُلاً يُصَلِّي بِهِمْ فِي رَمَضَانَ عِشْرِينَ رَكْعَةً Abu al Hasna says that Ali (Allah be pleased with him) order a person to lead “20 rakat (Tarawih)” during Ramadan. [Musannaf Ibn Abi Shaybah Volume 005, Page No. 223, Hadith Number 7763] Proof # 7 حَدَّثَنَا وَكِيعٌ ، عَنْ نَافِعِ بْنِ عُمَرَ ، قَالَ كَانَ ابْنُ أَبِي مُلَيْكَةَ يُصَلِّي بِنَا فِي رَمَضَانَ عِشْرِينَ رَكْعَةً، وَيَقْرَأُ بِحَمْدِ الْمَلاَئِكَةِ فِي رَكْعَةٍ Narrated by Waki’i from Nafe bin Umar (Allah be pleased with him) who said: Ibn Abi Mulaika (RA) used to lead us in Ramadan for “20 Rakahs”. [Musannaf Ibn Abi Shaybah Volume 005, Page No. 223, Hadith Number 7765] Proofs # 8, 9 & 10 Plus detailed refutation on their misuse of ahadith عن ابن عباس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يصلي في شهر رمضان في غير جماعة عشرين ركعة والوتر Ibn Abbas (RA) narrated that the Prophet (Peace Be Upon Him) used to pray “twenty raka’at” by himself followed by Witr (every night) in the month of Ramadan. [Sunan Al-Baihaqi, Hadith Number 12102] عن ابن عباس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي في رمضان عشرين ركعة والوتر Ibn Abbas (RA) narrated that the Prophet (Peace Be Upon Him) used to pray “twenty raka’at” followed by Witr in the month of Ramadan. [Musannaf Ibn Abi Shaibah, Volume 002, Hadith Number 7692] حديث أنه صلى الله عليه وسلم صلى بالناس عشرين ركعة ليلتين فلما كان في الليلة الثالثة اجتمع الناس فلم يخرج إليهم ثم قال من الغد خشيت أن تفرض عليكم On the authority of Aisha (R.A)] the Prophet (Peace Be Upon Him) performed “twenty raka’at on 2 nights with people but he did not come out on the 3rd night and said that I am afraid that it might become obligatory upon you (Sahaba) [Ibn Hajr, al-Talkhees al-Habeer, Volume 002, Hadith Number 540] Note: After this hadith Imam Ibn Hajr al Asqalani (rah) said: متفق على صحته من حديث عائشة دون عدد الركعات 42
August 29, 2011 07:46
Assalaamu alaikkum anbu mikka sagotharargale eppadi irukkireergal konjam arabu matrum aangilam matravargalukkum puriyum vidhathil thamizhil padhivu seiyyungal.
maa salaam abdul azeez. 43
August 29, 2011 13:05
சிராஜ்,
உங்களுக்கு காப்பி & பேஸ்ட் நன்றாகத் தெரிந்திருக்கிறது. மற்றபடி அவற்றிலுள்ளவற்றைப் படிக்கத் தெரியவில்லை என்று நினைக்கிறேன். நீங்கள் பேஸ்ட் செய்தவற்றில் the people used to observe “20 rak'ahs” (Tarawih) என்பதற்கு "மக்கள் 20 ரக் அத் தொழுதார்கள்" என்று பொருளே தவிர உமர் (ரலி) 20 ரக் அத் தொழுதார்கள் என்று பொருள் வராது. எனவே, நான் கேட்ட, உமர் (ரலி) ரமளானின் இரவுகளில் 20 ரக் அத் தொழுதார்களா? எனும் கேள்விக்கு நீங்கள் எந்தச் சான்றையும் வைக்கவில்லை. இறுதியாக நீங்கள் பேஸ்ட் செய்த செய்தியின் இறுதி வரியில், "ஆயிஷா (ரலி) அவர்களின் வழி வந்துள்ள செய்தி சரியானதுதான். ஆனால், ரக்அத்களின் எண்ணிக்கை என்பது மற்றவர்களின் கைச்சரக்கு" என்று இமாம் அஸ்கலானீ கூறியிருக்கிறார் [Ibn Hajr, al-Talkhees al-Habeer, Volume 002, Hadith Number 540] என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். சத்தியமார்க்கம்.காம் தளத்தினருக்கு, வெறும் காப்பி & பேஸ்ட்களை நீங்கள் தொடர்ந்து அனுமதிப்பதாக இருந்தால் நான் நிறைய காப்பி & பேஸ்ட் செய்வேன். அனுமதிப்பீர்களா? 44
August 29, 2011 23:51
By the name of asking too many proof you guys are loosing many of the Sunnat of Nabi(SAW). Only Allah has to give answer. Eid Mubarak.
45
August 30, 2011 19:46
சிராஜ்,
நீங்கள் முதன்முதலாக இட்ட பின்னூட்டம் நினைவிருக்கிறதா? அதில் Umar(RA) practised 20rakat என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். அதற்கு asking too many proof என்பது உங்கள் கற்பனை. நான் கேட்டது ஒரேயொரு சான்றைத்தான். அதை இதுவரை நீங்கள் தரவில்லை. இனியும் நீங்கள் தரப்போவதில்லை. ஆனால், Only Allah has to give answer என்று தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றீர்கள். "உமர் (ரலி) 20 ரக் அத் தராவீஹ் தொழுதார்கள்" என்று எழுதியவர் நீங்கள். அதற்கு அல்லாஹ் வந்து பதில் சொல்வான்; proof தருவான் என்கிறீர்களா? நல்லா ஜோக்கடிக்கிறீங்க! 46
September 01, 2011 00:35
அஸ்ஸலாமு அலைக்கும் சஃபி
நான் தொகுத்த தராவிஹ் கட்டுரையில் உங்களுக்கு போதுமானதாக இருக்கும் என்று நினைக்கின்றேன், கீழுள்ள லிங்கை காப்பி பண்ணி, வெப் பேஜில் பேஸ்ட் செய்து முழுவதையும் படியுங்கள், http://ahlussunnathwaljamath.blogspot.com/2011/01/8-20-1.html36 அஹ்லுஸ் சுன்னத்வல் ஜமாத் என்பதை பார்க்கமால் இருக்கும் விசயத்தை சரி அல்லது தவறா என்று பதிலளியுங்கள்,இப்பகுதியில் உள்ள கட்டுரைக்கு தொடர்பானவைப் பற்றி பதிலளிக்கவுன், இக்கட்டுரைக்கு தொடர்பு அல்லாதவற்றை தனியாக பதிக்கவும், 47
September 01, 2011 12:51
வ அலைக்குமுஸ்ஸலாம் முஹம்மது அப்பாஸ்.
உங்களுடைய சுட்டியில் 36 என்பது கூடுதலாக (தவறாக) உள்ளது. முதலில் அதைச் சரிசெய்து கொள்ளுங்கள். அடுத்து, நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம், 'ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தொழுகை எப்படியிருந்தது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ரமளானிலும் மற்ற மாதங்களிலும் அவர்கள் பதினொரு ரக்அத்துகளுக்கு அதிகமாகத் தொழுததில்லை. (முதலில்) நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே. பிறகு நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே. பிறகு மூன்று ரக்அத்துகள் தொழுவார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் வித்ரு (மூன்று ரக்அத்கள்) தொழுவதற்கு முன்னால் உறங்குவீர்களா?' என்று கேட்டேன். அவர்கள், 'என் கண்கள்தாம் உறங்குகின்றன; என் உள்ளம் உறங்குவதில்லை' என்று பதிலளித்தார்கள்" என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான் (ரஹ்) நூல்கள்: புகாரி, 3569. முஸ்லிம், 1343. http://www.satyamargam.com/1318 எனும் ஹதீஸ் பலகீனமானது என்று உங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ளீர்கள். எப்படி பலவீனமானது என்று முதலில் விளக்குங்கள். ஒவ்வொன்றாகப் பார்த்துவிடலாம். 48
September 01, 2011 16:14
சகோதரரே அந்த ஹதிஸின் கீழ் நான் பலகினமானது நான் பதித்து உள்ளேனா? ஏன் என் மீது அவதூரை சுமத்துகிறீர்கள், அல்லாவுக்கு பயந்து பதில் சொல்லுங்கள், நான் பதித்த அந்த ஹதிஸ் கீழ் என்ன விளக்கம் கொடுத்துள்ளேன் என்பதை முழுவதமாக படிக்கவும், அரை குறைவாக படித்துவிட்டு என் மீது பழியை சுமத்தாதீர்கள்.
49
September 03, 2011 13:16
//ரமலான் என்று 8 - 3 வரும் ஒரு சில ஹதிஸ்களும் பலகினமானது, அதையும் 8 - 3 பள்ளியில் ஜமாத்தாக தொழுகும் சகோதரர்கள் நன்கு படித்து பார்க்கவும்//
சகோ. முஹம்மது அப்பாஸ், மேற்காணும் வரிகள் உங்கள் தளத்தில் நீங்கள் எழுதியதுதானா? வேறு யாரும் எழுதினார்களா? 50
September 03, 2011 15:20
அஸ்ஸலாமு அலைக்கும்
இதற்கு கொடுத்த தலைப்பு, அதன் கீழ் எனது விளக்கம், மற்ற ஹதிஸ்களை பதிக்கும் போது அது பலகினமாக இருந்தால் அந்த ஹதிஸ் கீழ் குறிப்பிடுவேன், இந்த ஹதிஸ்யின் எனது விளக்கம் எவ்வாறு இருந்தது என முழுமையாக படிக்கவும் நான் பதித்தவை, 3) மறுப்பவர்கள் வைக்கும் மிகப் பெரிய ஆதாரம். //நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம், 'ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தொழுகை எப்படியிருந்தது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ரமளானிலும் மற்ற மாதங்களிலும் அவர்கள் பதினொரு ரக்அத்துகளுக்கு அதிகமாகத் தொழுததில்லை. (முதலில்) நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே. பிறகு நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே. பிறகு மூன்று ரக்அத்துகள் தொழுவார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் வித்ரு (மூன்று ரக்அத்கள்) தொழுவதற்கு முன்னால் உறங்குவீர்களா?' என்று கேட்டேன். அவர்கள், 'என் கண் தான் உறங்குகிறது; என் உள்ளம் உறங்குவதில்லை' என்று பதிலளித்தார்கள்" என்று கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) புகாரி 3569 முஸ்லிம் 1343 // மேல் உள்ள நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி தஹஜ்ஜதை தான் குறிக்கின்றது தவிர, தராவிஹ் அல்ல. அல்லா திருமறையில் தஹஜ்ஜத்ப் பற்றி குறிப்பிடுக்கின்றான். இன்னும் இரவில் ஒரு சிறு பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகை தொழுது வருவீராக, இதன் பாக்கியத்தினால் உம்முடைய இறைவன் மகாமம் மஹ்முதா என்றும் புகழ் பெற்ற தலத்தில் உம்மை எழுப்ப போதும்.(17:79), இன்னும் இரவில் அவனுக்கு ஸுஜுது செய்வீராக, அன்றியும் இரவில் நெடுநேரம் தஸ்பிஹ் செய்விராக(76:26) இங்கு தஹஜ்ஜத் தொழுகை தொழுது வருவீராக என்பது ரமலானிலும், ரமலான் அல்லாத மாதங்களையும் குறிக்கும் என்பது மார்க்க அறிஞர்களின் ஒரு மித்த கருத்து ஆகும். மேலும் தஹஜ்ஜத் பற்றி சிறப்புகள் பற்றி புகாரி,முஸ்லிம்,திர்மதி,அபுதாவுத்,இப்னுமஜா,நஸயி,அஹ்மத், மாலிக் மூஅததா, உலகத்தில் உள்ள அனைத்து இமாம்களின் கித்தாப்புகளிலும் நபி(ஸல்) அத்தொழுகையின் சிறப்பை பற்றி நன்மையின் அளவையும், சிறப்பை பற்றி கூறினதை பதிவு செய்யாத இமாம்கள் இல்லை என்று கூட சொல்லாம். நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் ண் காரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறுவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினாதாக என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி) அல்லா தஹஜ்ஜத் சிறப்பை பற்றி தெளிவாக கூறுகின்றான், ஆனால் அல்லாவும் தஹஜ்ஜத் தொழுங்கள் என்று சொல்கின்றான், அதே போல் நபி(ஸல்) அவர்களும் தஹஜ்ஜத் தொழுகை மக்களுக்கு ஊக்கப்படுத்தினார்கள் என்பது அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்ட விசயம். இப்போது நன்கு கவனிக்க வேண்டியவை, அல்லாவும், ரஸீல்(ஸல்) அவர்களும் தஹஜ்ஜத் தொழுகையை தொழுகும் மாறு கூறி இருக்கும் போது நபி(ஸல்) அவர்கள் ரமலானில் ஜமாத்தாக தொழுகை நடத்தின பிறகு ஸுப்ஹுத் தொழுகையை முடித்தும் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மொழிந்து, 'நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கூறுகிறேன்; நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை; எனினும், இது உங்களின் மீது கடமையாக்கப்பட்டு, அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடும் என்று நான் அஞ்சினேன்!' எனக் கூறினார்கள். (புகாரி) 3 நாட்கள் தொழுகையை பற்றி தான் இங்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் தவிர, தஹஜ்ஜதைப் பற்றி குறிப்பிடவில்லை, ஏனென்றால் தஹஜ்ஜத் தொழுது வாருங்கள், அல்லாவுடைய அருள் தஹஜ்ஜதில் தான் உள்ளது என நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜத் தொழுகைப் பற்றி தொழுகை ஏவுவனதை தெள்ளத் தெளிவாக கூறி இருக்கும் போது பிறகு ஏன் இந்த தொழுகை உங்கள் மீது கடமையாகிவிடும் என அஞ்சினார்கள்??.சிந்திப்பவர்களுக்கு விளக்கம் கிடைக்கும். 51
September 05, 2011 08:10
முஹம்மது அப்பாஸ்,
வ அலைக்குமுஸ்ஸலாம். கேள்வியைப் புரிந்து கொள்வது பதிலில் பாதி. ரமலான் என்று 8 - 3 வரும் ஒரு சில ஹதிஸ்களும் பலகினமானது என்று நீங்கள் எழுதியுள்ளீர்கள். அந்த பலகீனமான ஹதீஸ்கள் யாவை? எப்படி பலவீனமாயின? மத்தனிலா இஸ்னாதிலா? இந்த மூன்று கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லுங்கள். அதற்குப் பிறகு மற்றவற்றைப் பார்ப்போம். நான் கேட்காதவற்றுக்கு விளக்கம் என்ற பெயரில் எதுவும் வேண்டாம். 52
September 06, 2011 19:08
அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும் அன்பு மிக்க சகோதரர் முஹம்மது அப்பாஸ் அவர்களே.
//மேல் உள்ள நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி தஹஜ்ஜதை தான் குறிக்கின்றது தவிர, தராவிஹ் அல்ல. // September 05, 2011 07:10 தராவிஹ் என்று நபி (ஸல்) அவர்களால் பெயர் குறிப்பிட்டு இஷா தொழுகைக்கு பிறகு தொழுது காட்டிய தொழுகை யாவை ? என்பதை நபியின் ஹதீத் மூலம் விளக்குங்களேன்! 53
September 06, 2011 20:41
பதில் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது, கட்டுரை முழுவதமாகப் மேலும் ஒரு முறை படித்து கொள்ளவும், விவாதம் என்று பெயரில் விதாண்டவதம் பண்ணுபவர்களிடம் அஸ்ஸலாமு அலைக்கும்,
54
September 07, 2011 08:25
சகோ. முஹம்மது அப்பாஸ்,
இங்கு யாரும் விவாதம் செய்யவில்லையே! நீங்கள் எழுதியவற்றுக்கு விளக்கம் மட்டும்தான் கேட்கப்பட்டது. அதற்குள் சலாம் சொல்லிப் போய்விட்டீர்களே! சரி, வ அலைக்குமுஸ்ஸலாம். 55
September 08, 2011 12:09
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு சகோதரர் முஹம்மது அப்பாஸ் அவர்களே
//பதில் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது,// என்று போட்டுள்ளீர்கள் அதில் தேடி பார்த்தால் கிடைக்கவில்லை நீங்கள் அந்த தொழுகைக்கு உள்ள இரண்டு வரி மட்டும் காப்பி பன்னுங்கள். காரணம் ரசூல் ( ஸல் ) அவர்கள் மூலம் நமக்கு அறிமுகம் செய்யப்பட தொழுகையாவது பருழ், சுன்னத், கஸ்ர், மற்றும் தஹஜ்ஜத் போன்ற பெயர்கள் மூலம் நாம் தொழுது வருகிறோம் அனைவரும் அறிந்தது தான். ஒரு வணக்கம் செய்கிறோம் என்றால் அதற்க்கு பெயர் இல்லாமல் இருக்காது இஸ்லாத்தில். நான் விதன்டாவாதம் செய்ய வரலை நீங்கள் ஒன்றை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்கிறீர்கள் என்றால் அதற்க்கு தக்க ஆதாரம் சமர்பிக்க கடமைப் பட்டுள்ளீர்கள். மா சலாம். அப்துல் அஜீஸ். 56
September 08, 2011 16:20
கருத்து எழுதுக :
|