| மீண்டும் ஒரு ரமளான் |
|
|
| இஸ்லாம் - இஸ்லாமிய ஆய்வுக் கட்டுரைகள் | ||||
| வெள்ளி, 21 ஆகஸ்டு 2009 21:20 | ||||
|
ரமளான் பிறை 1 ஆண்டுதோறும் முஸ்லிம்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும், இறைவனின் அருட்கொடைகளும் நன்மைகளும் நிறைந்த புனிதமான ரமளான் மாதத்தை மீண்டும் ஒரு முறை பெறக்கூடிய நற்பாக்கியத்தை அல்லாஹ் வழங்கியுள்ளான். அதற்காக முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் இறைவனுக்குக் கட்டாயம் தங்கள் நன்றியினைச் சொல்லாலும் செயலாலும் அவனிடம் சமர்ப்பிக்க வேண்டும். இம்மாதத்தின் மகத்துவத்தினைக் குறித்து நபி(ஸல்) அவர்கள், 'ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன".... - (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி), நூல்: முஸ்லிம் 1957) என்றும், 'ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது.' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 761) என்றும் அறிவித்தார்கள். ரமளான் மாதம் நன்மைகளை அதிகமதிகமாகப் பெற்றுத் தரும் மாதம். ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் எழுநூறு மடங்குவரை நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் மாதம் என்பதை முஸ்லிம்களாகிய நாம் மிக நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறோம்.
- தொடரும் இன்ஷா அல்லாஹ்.
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (2)
![]()
சத்தியமார்க்கம்.காம் இணைய தளக் குழுவினருக்கும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த ரமழான் வாழ்த்துக்கள்!
அமைதி மார்க்கமான இஸ்லாத்தின் உன்னதம் உலகமெங்கும் பரவட்டும்! 1
August 21, 2009 23:25
அஸ்ஸலாமு அலைக்கும் ......வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காததஹூ.........
சத்தியமார்க்கம்.காம் இணைய தளக் குழுவினருக்கும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் வாசக அன்பர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த ரமழான் வாழ்த்துக்கள்! ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் அருளும் அமைதி மார்க்கமான இஸ்லாத்தின் உன்னதமும் சாந்தியும் சமாதானமும் உலகமெங்கும் பரவட்டும்! இந்த புனித மாதத்தில் நன்மைகளை அதிகரிக்கச் செய்து அவனது வெகுமதியான நிலையான சுவனத்தின் பால் நெருங்கக்கூடிய காரியங்களை சொல்லாலும் செயலாலும் எண்ணத்தாலும் அதிகப் படுத்திட அல்லாஹ் எளிதாக்குவானாக... அவனது கோபம் மற்றும் தண்டனையாகிய நரகத்தின் பால் சேர்க்கும் காரியங்களை சொல்லாலும் செயலாலும் எண்ணத்தாலும் செய்வதிலிருந்து பாதுகாப்பானாக என்று துவா செய்வோமாக.... அல்லாஹ் நமது பிராததனைகளையும் அமல்களையும் ஏற்றுக் கொண்டு அவனது அருளினாலும் கருணாஇயாலும் இம்மை மறுமை வெற்றியும் ஈடேற்றமும் அளித்திடுவானாக.... ஆமீன் 2
August 22, 2009 04:36
கருத்து எழுதுக :
|