சத்தியமார்க்கம்.காம்

முஸ்லிமல்லாதவர் முஸ்லிமிற்கு வாரிசாக முடியுமா? print Email
ஐயமும்-தெளிவும் - முஸ்லிம்களுக்காக
திங்கள், 27 ஜூலை 2009 20:25
ஐயம்: நான் இஸ்லாத்திற்குத் திரும்பி 12 ஆண்டுகள் ஆகிறது. தற்போது சவூதி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறேன். என்னுடைய விசா பழைய பெயரிலேயே இருப்பதால், பாஸ்போர்ட்டும் பழைய பெயரிலேயே இருக்கிறது. ஆனால் பெயர் மாற்றத்திற்கான வாக்குமூலம் இந்திய நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டு என்னிடம் உள்ளது.

என்னுடைய இரு மகன்களில் ஒருவர், தலாக் செய்துவிட்ட முன்னாள் கணவரிடமும் மற்றொருவர் என் தாயின் கன்காணிப்பிலும் இருக்கின்றனர். இவனும் முஸ்லிமாகத் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளான்.

1. என்னுடைய சொத்து முழுவதும் என்னுடைய பழைய பெயரிலேயே உள்ளது. என் மரணத்திற்குப் பின் இந்தச் சொத்தை எவரெல்லாம் பிரித்துக் கொள்ள முடியும்?

2. இதுவரை என் புதிய பெயரை என் வீட்டின் அருகிலுள்ள பள்ளியில் பதிந்து கொள்ளவில்லை. நான் இறந்தால் என்னை முஸ்லிம்களின் கப்ரஸ்தானில் அடக்க மறுப்பு தெரிவிப்பார்களா?

3. (என் மகன் இஸ்லாத்திற்குத் திரும்பி) பெயர் மாற்ற வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்யத பின்னர் வேறு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

- மின்னஞ்சல் மூலமாக ஒரு சகோதரி.


தெளிவு:

அன்புச் சகோதரிக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இஸ்லாத்தின் பால் மீண்ட தங்களுக்கு வல்ல நாயன் அனைத்துப் பிழைகளையும் பொறுத்தருள்வானாக.

படைத்த இறைவனை ஏற்றுக் கொண்ட தருணத்திலேயே, இறைவனின் சன்னிதியில் நீங்கள் முஸ்லிமாகி விட்டீர்கள். அந்நிமிடத்திலேயே அதுவரையிலான உங்களின் அனைத்துப் பாவங்களையும் இறைவன் மன்னித்து விட்டான்.

தற்போதைய காலகட்டத்தில் இஸ்லாத்தின் பால் மீளுவோர், இவ்வுலக வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைச் சமாளிக்கத் தொடர்ந்து சில செயல்களைச் செய்ய வேண்டும். அதில் முக்கியமானது மாற்றப்படும் பெயரைப் பதிவு செய்தல் மற்றும் அரசாங்க ஆவணங்களில் உரிய மாற்றங்களைச் செய்தல் போன்றவை.

இதில் நீங்கள் சரியாகவே செயல்பட்டுள்ளீர்கள். அல்ஹம்துலில்லாஹ். உங்களின் பெயர் மாற்ற ஆவணத்தை உபயோகித்து உடனடியாக இந்திய தூதரகத்தை அணுகி பாஸ்போர்டிலும் உங்கள் பெயரை மாற்றி விடுங்கள். தொடர்ந்து உங்கள் விசாவிலும் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பிற்காலத்தில் ஏதாவது தொந்தரவுகளில் சிக்காமல் இருக்க அது அத்தியாவசியமாகும்.

1. என்னுடைய சொத்து முழுவதும் என்னுடைய பழைய பெயரிலேயே உள்ளது. என் மரணத்திற்குப் பின் இந்தச் சொத்தை எவரெல்லாம் பிரித்துக் கொள்ள முடியும்?

சகோதரியே!

நீங்கள் இஸ்லாமைத் தழுவி முஸ்லிமாக ஆனதால், முஸ்லிம் அல்லாத ஒருவர் உங்களுக்கு வாரிசாக முடியாது.

"ஒரு முஸ்லிம் இறைமறுப்பாளருக்கு வாரிசாக மாட்டார். ஓர் இறைமறுப்பாளர் முஸ்லிமுக்கு வாரிசாகமாட்டார்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் உஸாமா பின் ஸைத் (ரலி) (நூல்: புகாரி, 4283, 6764)

எம்பெருமானாரின் இந்த அறிவிப்புபடி, உங்கள் பெயரில் உள்ள சொத்துக்களுக்கு இஸ்லாமில் இணையாமல் முஸ்லிம் ஆகாத உங்கள் பிள்ளைகள் மற்றும் தாய், தந்தை, கணவர் என எந்த ஒரு உறவினரும் உங்கள் வாரிசாக முடியாது. அதுபோல் உங்கள் தாய், தந்தை, கணவர் உறவினர் சொத்துக்களுக்கு நீங்களும் வாரிசாக முடியாது!

நீங்கள் ஏற்கெனவே முஸ்லிமாகி விட்டதால், உங்கள் சொத்துக்கள் எந்தப் பெயரில் இருந்தாலும் அவை ஷரிஆ சட்டப்படியே பிரிக்கப்பட வேண்டும். ஷரிஆ சட்டப்படி, உங்களுக்கு முஸ்லிமல்லாத ஒருவர் வாரிசாக முடியாததால், முஸ்லிமான ஒருவர் உங்களுக்கு வாரிசாக இல்லாத நிலையில் உங்கள் மரணத்திற்குப் பின் உங்களின் அனைத்துச் சொத்துக்களும் பைத்துல்மாலில் சேர வேண்டும்.

ஆனால், அது உங்கள் மரணத்திற்குப் பின் கடைபிடிக்கப்படுமா? என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. எனவே, உங்கள் மரணத்திற்குப் பின் உங்கள் சொத்துக்கள் விஷயத்தில் பிரச்சனை எழாமல் இருக்க, உடனடியாக உங்கள் பெயர் மாற்ற ஆவணத்தை அடிப்படையாக வைத்துச் சொத்துக்களிலும் பெயரை மாற்றி விடுவதோடு, உரிய உயிலையும் எழுதி வைத்து விடுங்கள்.

இனி, இதுவன்றி உங்கள் தாயாரிடம் வளரும் உங்கள் மகன் இஸ்லாத்தைத் தழுவி முஸ்லிம் ஆகிவிட்டால் உங்கள் சொத்துக்களுக்கு அவர் நேரடி வாரிசாக ஆவார். உங்கள் மகன் முஸ்லிம் ஆனதை முறைப்படிப் பதிவு செய்து ஆவணங்கள் பெற்றிருக்க வேண்டும். நீங்களும் உங்கள் மகனும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட விபரங்களை அருகிலுள்ள பள்ளிவாசல் ஜமாஅத்தில் தெரிவித்து அவர்கள் அறிந்திருக்க வேண்டும். அத்தோடு, வேறு சிக்கல்கள் எழாமல் தவிர்க்க, சொத்துக்களிலும் உங்கள் பெயர் மாற்றத்தை இணைத்து உறுதிபடுத்தி விட வேண்டும்.

2. இதுவரை என் புதிய பெயரை என் வீட்டின் அருகிலுள்ள பள்ளியில் பதிந்து கொள்ளவில்லை. நான் இறந்தால் என்னை முஸ்லிம்களின் கப்ரஸ்தானில் அடக்க மறுப்பு தெரிவிப்பார்களா?

நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது உங்கள் அருகிலுள்ள பள்ளிவாசல் ஜமாஅத்துக்குத் தெரியவில்லை எனில் அடக்கம் செய்யத் தயங்குவார்கள். எனவே உடனடியாக உங்களின் பெயர்மாற்ற நீதிமன்ற ஆவணத்துடன் அருகிலுள்ள ஏதாவது ஒரு பள்ளிவாசல் ஜமாஅத்தில் தெரியப்படுத்திப் பதிவு செய்து விடுங்கள்!

3. (என் மகன் இஸ்லாத்திற்குத் திரும்பி) பெயர் மாற்ற வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்யத பின்னர் வேறு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

நீதிமன்ற ஆவணத்தை அடிப்படையாக வைத்து மகனின் சான்றிதழ்கள், ரேசன் கார்டு, ஓட்டு அட்டை, பாஸ்போர்ட் போன்ற இன்னபிற அனைத்து அரசு ஆவணங்களிலும் மகனின் பெயரை மாற்றிப் பதிவு செய்து விடுங்கள். இது மிக மிக அத்தியாவசியமானதாகும். மகனின் பிற்கால வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க இது உதவும்.

அத்துடன், நீதிமன்றத்தில் பெற்ற ஆவணங்களை பள்ளிவாசல் ஜமாஅத்தின் பொறுப்பாளரிடம் காண்பித்து மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனைப் பெற்று அதன்படி நடந்துகொள்ளுங்கள்.

அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டுமாக.

(அல்லாஹ் மிக்க அறிந்தவன்!)

Trackback(0)
கருத்துக்கள் (3)add comment
0
முனாஸ் சுலைமான்:
இறைவன் எல்லா முஸ்லீம்களுக்கும் நல்லருள் புரிவானாக...
நல்ல கேள்விகளும் சிறப்பான பதில்களும் வாழ்த்துக்கள்.
1

July 28, 2009 15:05
0
palanivel:
வாழ்த்துக்கள். ஒருவர் இஸ்லமாக மதம் மாரும் போது அவரை இஸ்லாமும்,இஸ்லாமியரும் எளிதாக ஏற்றுக்கொள்கிறார்கள் அதனை நினைத்தே இஸ்லாம் மீது அதிகமாக பற்றுதல் ஏற்படுகிறது. என் விருப்பம் என்னவெனில் ஏன் இஸ்லாமியராக மதம் மாறும் ஏற்படும் அரசாங்க பதிவேடுகளில் பெயர் மாற்றம் செய்யும் முறையய் எளிதாக்க முயற்ச்சி செய்யக்கூடாது.

எனது நன்பர் ஒரு முஸ்லீம் அவர் எங்கள் மதத்தில் விவகாரத்து செய்யப்பட்ட ஒரு பெண்ணை திருமனம் செய்துள்ளார். என்னால் செய்ய முடியத அதுவும் ஒரு விதவை பெண்ணுக்கு ,மாற்று மத பெண்ணுக்கு வாழ்க்கையும் கொடுத்து வரதட்சணை இன்றி இதுவரை இருவரும் நல்ல பொருத்ததுடன் வாழ்ந்தும் வருகிறார்கள் அவர்கள் எத்தனையோ முயற்ச்சி எடுத்து வருகிறார்கள். இருப்பினும் என் நன்பரின் பெயரை அரசங்க பதிவெடுகளில் மாற்ற முடியவில்லை. என் நன்பரின் மனைவி கூறியது என்னை அதிற்ச்சிக்கூள்ளக்கியது
இறைவன் நாடினான் நான் இஸ்லாத்தை தழுவினேன், நல்ல் வாழ்க்கையும் கிடைத்தது , சில சைத்தன்களின் முயற்ச்சியால் என் பெயரை மாற்ற முடியவில்லை என்று
இருபினும் நான் ஒரு முஸ்லீம் என்பதை என் கனவ்ரும் என்னை சார்ந்தோரும் அறியும் வண்ணம் இறைவன் என்னை மாற்றியுள்ளான்.
2

August 05, 2009 08:55
0
abdul azeez:
அஸ்ஸலாமு அலைக்கும். நண்பர் பழனிவேல் மற்றும் அணைத்து முஸ்லிம்களுக்கும்.

// இருப்பினும் என் நன்பரின் பெயரை அரசங்க பதிவெடுகளில் மாற்ற முடியவில்லை. என் நன்பரின் மனைவி கூறியது என்னை அதிற்ச்சிக்கூள்ளக்கியது //

அரசு விஷயத்தில் மார்க்கம் பொறுப்பேற்காது. அது மதம் மாறுபவர்கள் முன்கூட்டியே ! அரசுக்கு இன்ன மதத்தில் சேரப்போகிறேன் பெயர் மாற்றம் வேண்டும் என்று சம்பத்தப்பட்டவர்கள் தான் நடவடிக்கை எடுக்கனும்.

மேலும் அரசு இஸ்லாமிய அரசாக இருந்தால் பெயரையும் எளிதாக மாற்றிவிடுவார்கள்.எப்படி எளிதாக அரவணைக்கிறார்களோ அது மாதிரி

மேலும் மதம் மாறுபவர்கள் இந்த மாதிரி சில சிக்கல்களெல்லாம் சரி செய்துகொள்வது. அத்தியாவசியமான ஒன்று அதன் பிறகு கொள்கையை பின் பற்றலாம். முதலில் டிமான்ட் செய்வது தான் முக்கியம்.

அடக்கம் செய்வது இங்கேயா ? அல்லது. அங்கேயா ? என்ற குளறுபடி வராமல் இருக்க போதுமானதாக இருக்கும்.

மா சலாம்.
அப்துல் அசீஸ்.
3

August 06, 2009 01:59

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 
Related Articles :

» தோழர்கள் - 35 - அம்ரிப்னுல் ஜமூஹ் - عمرو بن الجموح

அம்ரிப்னுல் ஜமூஹ்عمرو بن الجموح தமது அந்திம காலத்தின்போது கடல் தாண்டி நிகழவிருந்த போருக்கு, தம் புதல்வர்களின் ஆலோசனையை நிராகரித்துக் கிளம்பியதை அவரது வரலாற்றில் படித்தோம். அதற்கு...

» தோழர்கள் - 31 - ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீ - حنظلة بن أبي عامر الأوسي

ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீحنظلة بن أبي عامر الأوسي அப்துல்லாஹ் இப்னு உபை அஸ்ஸலூல் யத்ரிபில் வசித்து வந்த கஸ்ரஜ் கோத்திரத்தின் தலைவன். அவனுடைய  மக்களிடத்தில் அவனுக்கு ஏகப்பட்ட செல்வாக்கு,...

» உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு உரிய மாற்று - இஸ்லாமிய வங்கி!

மக்களின் சுபிட்சமான உலக வாழ்வுக்குப் முக்கியமான பங்கு வகிக்கின்றது. , தொழில் துவங்கி அடிப்படை தேவைகள் அனைத்துக்கும் பொருளாதாரம் அடிப்படை ஆதாரமாகும். அத்தகைய பொருளாதாரத்தின்...

» இந்திய அரசியல் இஸ்லாத்தை நோக்கி! - இறுதிப் பகுதி

சுதந்திரத்திற்குப் பின்னர் முஸ்லிம்களின் ஆதிக்கம் இந்தியாவில் இருந்தால் தாங்கள் நினைப்பது போன்ற ஹிந்துத்துவ அஜண்டாவை நடைமுறைப்படுத்த இயலாது என்பதை ஆர்.எஸ்.எஸ் நன்றாகப் புரிந்து...

» இஸ்லாத்தின்பால் விரைந்து வரும் இங்கிலாந்தின் மேல் தட்டு மக்கள்

மேற்கத்தியக் கலாச்சாரம் முன்வைக்கும் வாழ்க்கை முறையினால் நம்பிக்கை இழந்துபோய் 14,000த்திற்கும் அதிகமான பிரித்தானியர்கள் இஸ்லாத்தில் இணைந்துள்ளதாக ஆதாரப் பூர்வமான ஆய்வுகள் இப்போது...

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:188 அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள். மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.

புதிய கருத்துகள்

M.S.K : SISTER KHATIJA PLS SEE THE LINK BELOW AS REQUIRED http://www.satyamargam.com/1324


Peer Mohamed : Alaikkum wassalam, Jazakhallah Khair. InshaAllah each article posted will have a reference its so...


martin : சரியான் ஆட்டுக்கூட்டம்!


imran kareem : அல்லாஹ்வின் திருபெயரால்,, இக்கட்டுரை...


akbar : '' வந்தது வசந்தம்'''' ரபீவுல் அவ்வல் மாத...


Kathija : இதனுடைய அடுத்த பகுதி இன்னும் வரவில்லையா? வந்திருந்தால் அதற்கான லிங்க் கொடுக்கவும்


abdul : good to all


mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.



You are here  : முகப்பு இஸ்லாம் ஐயமும்-தெளிவும் முஸ்லிம்களுக்காக முஸ்லிமல்லாதவர் முஸ்லிமிற்கு வாரிசாக முடியுமா?
Twitter
RSS
YouTube
English