| பழகு மொழி (பகுதி 3 ) |
|
|
| தொடர்கள் - மொழியியல் |
| திங்கள், 20 ஜூலை 2009 00:00 |
(1):1:2 மெய்யெழுத்துகள்
'புள்ளி எழுத்து' என்று வழக்கிலும் 'ஒற்று' என்று இலக்கியத்திலும் குறிப்பிடப் படுபவை மெய்யெழுத்துகளாகும். மெய்யெழுத்தின் மாத்திரை அரையாகும். மெய்யெழுத்து இனங்கள் மூவகைப் படும்: (1):1:2:1 வல்லினம் க்,ச்,ட்,த்,ப்,ற் ஆகிய ஆறும் வன்மையுடன் ஒலிப்பதால் வல்லினம் என்றானது. (1):1:2:2 மெல்லினம் ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் ஆகிய ஆறும் மென்மையாக ஒலிப்பதால் மெல்லினம் என்றானது. (1):1:2:3 இடையினம் ய்,ர்,ல்,வ்,ழ்,ள் ஆகிய ஆறும் வன்மைக்கும் மென்மைக்கும் இடைப்பட்டு ஒலிப்பதால் இடையினம் என்றானது. குறிப்பு: ா என்று நாம் எழுதும் துணையெழுத்து/துணைக்கால், ஓர் ஒற்றை(புள்ளியை)த் தாங்காது. ர் என்று எழுதுவது பிழையாகும்; உயிர் மெய்யெழுத்துக்கு மட்டுமே ஒற்றை/புள்ளியைத் தாங்கும் வலுவுண்டு. எனவே, 'ர'வுக்கு மேல் புள்ளியிட்டு தற்போது நம் பயன்பாட்டில் உள்ள யுனிகோடு எழுத்துருவில் இவ்வசதி இல்லையென்பதால் நாம் அதன் வழியிலே தொடர்ந்து செல்வோம். யுனிகோடில் திருத்தம் வரக்கூடும். வாசகர்களுக்காகக் கடந்த வாரம் வினவப் பட்ட வினா: வாசகர்களுக்கான இவ்வாரக் கேள்வி: சென்னை ப்ராட்வேயில் மாநகராட்சி நிர்வகிக்கும் ஒரு பூங்கா "ஸ்ரீ ராமுலு பூங்கா" ஆகும். அதில் ஓர் அறிவிப்பு: மேற்காணும் அறிவிப்பில் உள்ள பிழை யாது? - தொடரும், இன்ஷா அல்லாஹ். - அதி. அழகு. < பழகு மொழி (முன்னுரை) | பகுதி - 1 | பகுதி - 2 | அடுத்த பகுதி இன்ஷா அல்லாஹ் விரைவில் > கருத்துக்கள் (3)
![]() எழுதியவர்: இராஜகிரியார் , August 04, 2009 06:25 நன்றி. //குறிப்பு: ா என்று நாம் எழுதும் துணையெழுத்து/துணைக்கால், ஓர் ஒற்றை(புள்ளியை)த் தாங்காது. ர் என்று எழுதுவது பிழையாகும்; உயிர் மெய்யெழுத்துக்கு மட்டுமே ஒற்றை/புள்ளியைத் தாங்கும் வலுவுண்டு. எனவே, 'ர'வுக்கு மேல் புள்ளியிட்டு என்று எழுத வேண்டும். தற்போது நம் பயன்பாட்டில் உள்ள யுனிகோடு எழுத்துருவில் இவ்வசதி இல்லையென்பதால் நாம் அதன் வழியிலே தொடர்ந்து செல்வோம். யுனிகோடில் திருத்தம் வரக்கூடும்.// சரியாக விளங்க வில்லை. இன்னும் சற்று தெளிவாக்கினால் நன்றாக இருக்கும். எழுதியவர்: அதி.அழகு , August 06, 2009 23:24 அன்புச் சகோதரர் இராஜகிரியாருக்கு, 'கிரி'யில் உள்ள ரி யுனிகோடில் 'ரி' என்றுதான் (பிழையாக) உள்ளது. அதன் சரியான வடிவம் 'ர' போட்டு அதற்கு மேல் கொம்பு இருக்க வேண்டும். போலவே, 'ர்' என்பது பிழையான வரிவடிவம். 'ர' எழுதி, அதற்கு மேல் புள்ளி இடுவதே சரியானதாகும். இதை யுனிகோடுக்கு எழுதித் தெரிவிக்க வேண்டும். தொடரும் தங்களது ஆர்வத்துக்கு நன்றி! எழுதியவர்: சத்தியமார்க்கம்.காம் , August 12, 2009 15:03 கருத்திட்ட இராஜகிரியார் அவர்களுக்கும் கட்டுரையாசிரியர் அதி. அழகு அவர்களுக்கும் நன்றிகள் பல. இது தொடர்பாக யூனிகோடு அமைப்பிற்கு (http://www.unicode.org/consortium/) ஒரு மடல் எழுதி அனுப்பப் பட்டுள்ளது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். யூனிகோடு அமைப்பு, சரியான எழுத்து வடிவத்தினைக் கொண்டு திருத்தியமைக்கும் என்று நம்புகிறோம். நன்றி! கருத்து எழுதுக :
|