| பழகு மொழி (பகுதி - 1) |
|
|
| தொடர்கள் - மொழியியல் | |||
| ஞாயிறு, 05 ஜூலை 2009 16:38 | |||
|
அவற்றை ஏ,ஓ என்று மாற்றியமைத்தப் பெருமை வீரமாமுனிவருக்குண்டு. தமிழ்மொழி வேற்றுநாட்டவரையும் எவ்வாறு ஈர்த்தது என்பதற்கு, "இங்குத் தமிழ் மாணவன் ஒருவன் அடக்கம் செய்யப் பட்டிருக்கிறான்" என்று தன் கல்லறையில் குறிக்குமாறு கேட்டுக் கொண்டு உயிர் விட்ட டாக்டர் ஜி.யூ.போப் பாதிரியாரின் முறிச் சான்று ஒன்றே போதும். உலகின் வாழும் செம்மொழிகளுள் ஒன்றான தமிழ் மொழியின் பேச்சுத் தொடக்கம் ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் என்றும் அது வரிவடிவம் பெற்றது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் என்றும் கூறுவர். சிறந்த ஒரு மொழியின் அடிப்படை அதன் சொல்வளமாகும். சொல்லுக்கு அடிப்படை எழுத்துகளும் எழுத்துக்கு அடிப்படை ஒலியுமாகும். எழுத்துகளை அவற்றின் ஒலிகளுக்கேற்ப மூன்று இனங்களாகப் பிரித்துத் தன்னகத்தே கொண்டிலங்குவதை ஆராய்ந்து பார்த்தால் தமிழ்மொழியின் அறிவியல் புரியும். (1):1 எழுத்து வகைகள் தமிழெழுத்து நான்கு வகைப்படும்: (1):1:1 உயிரெழுத்து (அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ) = 12 மொத்தம் 247 எழுத்துகள். "அட..... ஆனா ஆவன்னாக்குத்தான் இம்பூட்டு அலப்பறயா.....?" என்று தயை கூர்ந்து யாரும் கேட்டு விடாதீர்கள். தமிழ் வட்டெழுத்துகள் (வரிவடிவங்கள்) பற்றி நிறைய வேறுபட்ட கருத்துகள் உள்ளன. தமிழில் மொத்த உயிரெழுத்தே (அ,இ,உ,எ,ஒ) ஐந்துதான் என்ற வெடிக்கருத்தும் அதிலொன்று. எப்படி எனில், அ+அ=ஆ, இ+இ=ஈ, உ+உ=ஊ, எ+எ=ஏ, ஒ+ஒ=ஓ ஆக ஓரேயெழுத்து இரண்டு தடவை வந்தால் நெடிலாகி விடும் என்ற யுனிகோடு கணக்கோடு, அ+ய்=ஐ, அ+வ்=ஔ என்று வளைத்துக் கொண்டு வருவோரும் உண்டு. ஐ,ஔ ஆகிய இரண்டு எழுத்துகள் பண்டைய தமிழில் இல்லாமலிருந்து பின்னர் வந்து இணைந்தவை என்ற கருத்தும் உண்டு. ஏனெனில், கி.பி 3-6 நூற்றாண்டுகளைச் சேர்ந்த எந்தக் கல்வெட்டிலும் நடுகல்லிலும் ஐ,ஔ ஆகிய இரண்டு எழுத்துகளும் காணப் படவில்லை. மீக்கூறியவாறு ஏ,ஓ ஆகிய இரு எழுத்துகளும் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் உருவாக்கப் பட்டவை. அதுமட்டுமின்றி ஈ என்பது எழுத்தன்று; அஃது ஓர் ஓவியம் என்ற கருத்தும் உண்டு. காரணம், ஒரு நெடிலின் வரிவடிவம் அதன் குறிலை ஒத்திருக்க வேண்டும். காட்டாக, ஆ என்ற நெடிலின் வரிவடிவம் அ என்ற எழுத்தை ஒத்திருக்கிறது. ஈ என்ற நெடிலில் இ என்ற குறிலை ஒத்த வடிவமே இல்லாமல் முற்றிலும் வேறாக உள்ளது. இருப்பினும் தொல்காப்பியரின் கூற்றுப்படி, அ இ உ
எழுத்துகளோடு அவ்வப்போது கொஞ்சம் இலக்கணமும் பார்த்துக் கொள்ளலாம்:
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (8)
![]()
நல்ல முயற்சி!
தமிழில் இது போன்ற பயனுள்ள பயிற்சி தரும் தளத்தை தேடியிருந்தேன். தமிழ் என்ற பெயரில் தத்தித் தடுமாறும் என் போன்றவர்களுக்கு அரிச்சுவடியின் அடிப்படையை கூச்சமின்றி கற்றுக் கொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்பினை முதல் பகுதியே தந்து விட்டது.
அடுத்தடுத்த பகுதிகளை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன். நன்றி!
மு.கணேசன், விழுப்புரம்
1
July 05, 2009 19:41
ஆஹா.. இத இதத்தானல்லவா இவ்வளவு நாட்களா எதிர்பார்த்திருந்தேன்.
//"தஞ்சாவூர் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு அருண்மொழி எனும் இராஜராஜ சோழ மன்னன் ஆட்சி புரிந்தான்" என்ற சொற்றொடரில் உள்ள பிழைகளை, தெரிந்தவர்கள் இங்குச் சுட்டிக் காட்டுங்கள்.//
தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு...
அருண்மொழி என்ற இராஜராஜ...
தோன்றியதை எழுதியிருக்கேன். இலக்கணம் எல்லாம் தெரியாது சார். சொல்லித்தந்தா கத்துக்குவேன்.
2
July 06, 2009 17:09
"தஞ்சாவூர் எனும் ஊரைத் தலைநகராகக் கொண்டு அருண்மொழி என்ற இராஜராஜ சோழ மன்னன் ஆட்சி புரிந்தான்"
3
July 06, 2009 23:19
எம் தாய் மொழியாம் தமிழ் மீது தீராத காதல் கொண்ட இந்த இராஜகிரியாருக்கு இத்தொடர் ஒரு மகத்தான விருந்தாக அமையும் என்று நினைக்கிறேன். இன்ஷா அல்லாஹ்...
4
July 07, 2009 02:39
தஞ்சை என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு அருண்மொழி என்னும் இராஜராஜ சோழன் மன்னனாக ஆட்சி புரிந்தான்..
எப்புடி..??! 5
July 07, 2009 08:25
தஞ்சை என்னும் ஊரை தலைநகராகக் கொண்டு அருண்மொழி என்னும் சோழ மன்னன் ஆட்சி புரிந்தான்..
6
July 07, 2009 20:48
"தஞ்சாவூர் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு அருண்மொழி எனும் இராஜராஜ சோழ மன்னன் ஆட்சி புரிந்தான்" என்ற சொற்றொடரில் உள்ள பிழைகளை, தெரிந்தவர்கள் இங்குச் சுட்டிக் காட்டுங்கள் எனும் எனது வேண்டுகோளை ஏற்றுக் கருத்திட்ட அனைவருக்கும் நன்றி!
சகோதரர்கள் முஹம்மது ஸாதிக், ஸ்டாலின் இருவரும் ஓரளவுக்குச் சரியான விடையளித்துள்ளனர். அவ்விருவரும் நான் எழுதியவை எவ்வாறு பிழை என்பதைத் தெரிவிக்க வேண்டுகிறேன். மிக்க நன்றி! 7
July 08, 2009 10:16
'பழகுமொழி' தொடர் வலைத் தளத்தில் வலம் வருவது வரவேற்கத் தகுந்த ஒன்று. தம்பி 'அதியழகு' பாராட்டிற்குரியவர். யான் சில மாதங்களுக்கு முன் 'மனாருல் ஹுதா' எனும் மாதப் பத்திரிகையில் 'பிழையின்றி எழுதுவோம்; பேசுவோம்' எனும் தலைப்பில் இப்படியொரு தொடரை எழுதத் தொடங்கினேன். மூன்று இதழ்களில் அத்தொடர் இடம்பெற்றது. நான்காவது வெளிவருவதற்கு முன், எங்களூர்ப் பணக்காரர்களுள் சிலர் தலையிட்டு, அப்பத்திரிகையின் மேலிடத்தைத் தொடர்பு கொண்டு, என் தொடரை நிறுத்தச் செய்துவிட்டனர்! 'கழுதை அறியுமோ கர்ப்பூர வாசனை?'
8
July 09, 2009 14:14
கருத்து எழுதுக :
|