| எழுத்தாளர் சகோதரி கமலா சுரய்யா மரணம். |
|
|
| செய்திகள் - இந்தியச் செய்திகள் | |||
| ஞாயிறு, 31 மே 2009 10:02 | |||
கேரள எழுத்துலகில் தன் வாழ்க்கையை ஆரம்பித்து ஆங்கில எழுத்துலகிலும் பிரகாசித்த 75 வயது நிரம்பிய பிரபல மலையாள எழுத்தாளர் சகோதரி கமலா சுரய்யா அவர்கள் புனேயிலுள்ள ஜஹாங்கீர் மருத்துவமனையில் இன்று அதிகாலை 2 மணிக்கு மரணமடைந்தார் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!1934 மார்ச் 31 இல் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலுள்ள நாலப்பாட்டு என்ற பெயர் கொண்ட குடும்பத்தில் பிறந்த சகோதரி கமலா சுரய்யாவின் தாயார் பிரபல பெண்கவிஞர் பாலாமணியம்மா ஆவார். தந்தை வி.எம். நாயர். கணவர் மாதவதாஸ். இவருக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றனர். வாழ்வின் அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் தன் வாழ்நாளில் அனுபவித்து விட்ட சகோதரி சுரய்யா, மாதவிக்குட்டி என்ற பெயரில் மலையாளத்திலும் கமலாதாஸ் என்ற பெயரில் ஆங்கிலத்திலும் பிரபலமாக அறியப்பட்டிருந்தவர். அவரது பல்வேறு நாவல்களும் ஆங்கிலக் கவிதைகளும் கமலா சுரய்யாவுக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் எண்ணற்ற வாசகர்களைத் திரட்டித் தந்துள்ளது. பால்யகால ஸ்மரணகள் (குழந்தைக்கால நினைவுகள்), பூதகாலம் (இறந்தகாலம்), பக்ஷியுடைய மரணம் (பறவையின் மரணம், யா அல்லாஹ் போன்றவை சகோதரி சுரய்யாவின் பிரசித்திப்பெற்ற நாவல்களில் சில! கேரள சாகித்ய அகாதமி விருது, வயலார் விருது, எழுத்தச்சன் விருது போன்ற பல்வேறு எழுத்தாளர் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (4)
![]()
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ஓரிறையை ஏற்றுக்கொண்ட அந்த சகோதரிக்கு அல்லாஹ் சுவர்க்கத்தை வழங்கட்டுமாக. ஆமீன்
மா சலாம்.
அப்துல் அசீஸ்.
1
June 01, 2009 00:27
// இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்'
(அல் குர் ஆன் 2 : 156)
// கண்டுகொண்ட உண்மைகளை ஏற்றுக் கொள்வதற்கும் அதன்படி வாழ்வதற்கு எந்த மிரட்டல், உருட்டல்களுக்கும் அஞ்சாமல் அவர் காட்டிய உறுதியும் எவ்வித அச்சமும் இன்றி அசத்தியங்களுக்கு எதிராக அவர் தைரியமாக வெளியிட்ட எண்ணங்களும் என்றும் நம்மிடையில் அவரை நினைவுகூற வைக்கும். //
சகோதரியின் பிழைகளைப் பொறுத்து, அவர் தேடி அலைந்துப் பெற்ற நிரந்தர அன்பை நிரந்த வாழ்விலும் வழங்க இறைவன் கருணை புரியட்டுமாக! ஆமீன்.
2
June 01, 2009 10:42
'எல்லோரும் உண்மை தங்கள் பக்கம் தான் இருப்பதாகச் சொல்கிறார்களே தவிர, உண்மையின் பக்கம் தாங்கள் இருக்க வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை.'
எழுத்தாளர் சகோதரி கமலா சுரய்யா கூறியது சிந்தனைக்குறியது. என்றும் மறக்க முடியாதது.
3
June 01, 2009 15:24
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
'கெட்டவை செய்வதற்கு எனக்குச் சுதந்திரம் வேண்டாம்; அதில் நான் மிகவும் உறுதியுடன் இருக்கிறேன். ஒருவேளை இந்தக் காரணம் தான் என்னை இஸ்லாத்தில் இணையத் தூண்டியதாக இருக்கும்'
'பர்தா எனக்குப் பாதுகாப்பைத் தருகிறது; இதனை அணிந்த வேளையில் நான் உண்மையான பாதுகாப்பு கிடைத்ததாக உணர்கிறேன்'
இவையும் சகோதரி கூறியவைகளே.
சகோதரியின் பாவங்களைப் பொறுத்து அவரை இறைவன் சுவனத்தில் நுழைய வைப்பானாக.
4
June 01, 2009 21:02
கருத்து எழுதுக :
|