சத்தியமார்க்கம்.காம்

சிமி-டெஹல்கா அறிக்கை - பாகம் 8 (இறுதி) print Email
தொடர்கள் - ஆய்வுக் கட்டுரைகள்
செவ்வாய், 20 ஜனவரி 2009 05:04

இருப்பினும் விசாரணை தொடர்கிறது!
சிமிசிமியைக் குறித்து இரு கருத்துகள் நிலவுகின்றன. ஒன்று, சிமியின் இலட்சியங்களான அதன் தன்னிலைக் கருத்து. மற்றொன்று, மாய உலகம் அதற்கு உருவாக்கிக் கொடுத்த கருத்து.

 

2001 செப்டம்பர் 27 அன்று முதன் முதலாக சிமி தடை செய்யப் பட்டது முதல், இம்மாய உலகத்தை இந்திய அரசு வழிநடத்திக் கொண்டிருந்தது. அரசிடம் சிமியைக் குறித்து இருப்பதாகக் கூறும் விவரங்கள் அனைத்தும் காவல்துறையும் உளவுதுறை அமைப்புகளும் நாட்டின் பலப் பாகங்களிலிருந்து சேகரித்துக் கொடுத்தவையாகும். இவ்வியக்கத்தைக் குறித்துக் கதை கதையாக விவரிக்கும் விசாரணை இணையதளங்கள் பல உண்டு. இத்தளங்களினூடாக ஒருமுறை கடந்துச் சென்றால், அவை அனைத்துமே இந்திய உளவுத்துறை அமைப்புகள் உருவாக்கிய படைப்புகள் என்பதை முதல் பார்வையிலேயே புரிந்துக் கொள்ள இயலும்.

 

பரிதாபத்திற்குரிய செய்தி ஒன்று கூறட்டுமா?, சிமியின் அடையாளமும் அதன் செயல்பாடுகளும் தடை செய்யப்படுவதற்கு முன்பு எவ்வாறு இருந்தது என்பதை இனிமேல் துல்லியமாக அறிந்துக் கொள்ள முடியும் எனத் தோன்றவில்லை. சிமி கூறுவதும் அரசு பரப்புவதுமான முகங்கள் நேர் எதிரானவையாகும். பொய்ப் பிரச்சாரங்களும் ஆய்வுக்கு உட்படுத்த முடியாத புனைவுகளுமே அரசின் வாதங்களாகும். சிமிக்கு எதிராக ஆதாரங்களைச் சேகரிக்க அரசுக்கு ஏழு ஆண்டுகள் கால அவகாசம் கிடைத்தது. ஆனால், ஆதாரச் சேகரிப்பு இன்னும் நடந்து கொண்டிருக்கின்றது. சந்தேகத்திற்கிடமான, நாடகரீதியிலான புதுக் கண்டுபிடிப்புகளுடன் எந்த நேரத்திலும் அரசு வரக் கூடும்.

 

சிமியின் பக்கமுள்ள சொந்தக் கருத்துகளைத் தெளிவிக்கும் ஆதாரங்கள் வெளிவரப் போவதில்லை. னெனில், சிமி தடை செய்யப்பட்ட வேளையில் அவர்களது அலுவலகங்களை அடைத்து சீல் வைப்பதற்கு முன்னர், விசாரணை அதிகாரிகள் அங்கிருந்த அனைத்துப் பொருட்களையும் ஆதாரங்களையும் கைப்பற்றி விட்டதால் இனி அவை கிடைப்பதற்கான வழியேதுமில்லை. அதனால், சிமியைக் குறித்துக் கூறப்படும் சிமியின் கருத்தும் அரசின் கதைகளையும் இணைத்து வைத்து ஆய்வு செய்வது மட்டுமே ஒரே வழியாகும். சிமியைத் தடை செய்து பெப்ருவரியில் அரசு வெளியிட்ட அறிக்கையின் முன்னுரையின் முதல் பக்கத்தில் கீழ்கண்டவாறு கூறப்படுகிறது:

 

"இவ்வியக்கத்தின்(சிமி) கொள்கைகள்:

a. குர் ஆனின் அடிப்படையில் மனித வாழ்க்கையைச் சீர்செய்தல்.

b. இஸ்லாமியப் பிரச்சாரம்.

c. இஸ்லாமிய இலட்சியத்திற்காக ஜிஹாத் செய்தல்.

d. தேசியம் தகர்த்து, இஸ்லாமிய ஆட்சியை அதாவது, கிலாஃபத் ஏற்படுத்துதல்."

 

முன்னுரை தொடர்கிறது: "அனைத்து வயதுடைய முஸ்லிம்ளையும் உள்ளடக்கிய, இந்தியா முழுவதும் பரவிக் கிடக்கும், சந்தேகத்திற்கிடமான வகைகளில் செயல்பட்ட இயக்கம் தான் சிமி. சர்வதேசத் தீவிரவாத இயக்கங்களுடன் அதற்குத் தொடர்புண்டு; ஆயுதப் பயிற்சி நடத்துகின்றது; உள்நாட்டிலும் வளைகுடா நாடுகளிலிருந்தும் பணம் சேகரித்து, சதியாலோசனைகள் நடத்தி குண்டுவெடிப்புகளை அரங்கேற்றுகின்றது. மதசார்பற்ற தன்மை, தேசியச் சிந்தனை, இந்திய சட்ட-திட்டம் போன்றவற்ரை அது ஏற்றுக் கொள்ளவில்லை. சிலை வணக்கத்தைப் பாவமாகவும் அதனை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சியை தெய்வீக இலட்சியமாகவும் கருதுகிறது. இந்திய தேசியத்திற்குப் பதிலாக சர்வதேச இஸ்லாமிய அமைப்பிற்காக சிமி முயல்கிறது. சிமியின் அபிப்பிராயத்தில், மனித வாழ்க்கையைச் சீர்செய்ய வேண்டியது குர்ஆனாகும். இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதே அதன் குறிக்கோள்".

 

அதேநேரம், சிமியின் முன்னாள் தலைவர்கள் தங்களைத் தீவிரவாதிகள் என்று கூறும் அரசின் வாதத்தை உறுதியுடன் நிராகரிக்கின்றனர். முக்கியமாக, நாட்டின் ஒற்றுமையைத் தகர்க்க முயல்வதாகக் கூறும் குற்றச்சாட்டைக் கடுமையாக நிராகரிக்கின்றனர். முஸ்லிம் மாணவர்களுக்கிடையில் இஸ்லாமிய அடிப்படை விஷயங்களை ஆரம்பத்திலிருந்தே கற்பித்து வளர்த்தும் ஒரு முன்னுதாரணமான இயக்கம்தான் தங்களுடையது என்பதே அவர்களின் வாதம். பொறியியல், மருத்துவம், ணிதம் போன்ற உலகக் கல்வியையும் பரிசுத்த இஸ்லாமிய அடிப்படைகளையும் ஒன்றிணைத்துள்ள சிந்தனையைக் கொடுக்கும் ஒரு அமைப்பே சிமியாகும்.


சுதந்திர இந்திய வரலாற்றில் முஸ்லிம்களுக்கு அவர்கள் கடந்து வந்தப் பாதையையும் அதில் முஸ்லிம்களின் பங்களிப்பான நிகழ்வுகள் குறித்த அறிவினை அவர்களுக்கு ஊட்டிக் கொடுத்தது என்பதே சிமி செய்த மிகவும் கவனிக்கத் தக்க விஷயம். சுதந்திர இந்திய முஸ்லிம் வரலாற்றில் சமகால முக்கியச் சம்பவங்கள் யாவை என ஒரு முஸ்லிமிடம் கேட்டால், 'ஷாபானு வழக்கு', 'பாபரி மஸ்ஜித் தகர்ப்பு', 'குஜராத் இனப்படுகொலை' போன்றவற்றையே கூறுவார். வர்ந்து வரும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் பலனை அனுபவிக்கும் நடுத்தர வர்க்கம், இச்சம்பவங்களை மறந்து விட்டு, அடுத்தடுத்த சொந்தப் பிரச்சினைகளில் மூழ்கி விடுவர். ஆனால் சிமிக்கு, நாடு முழுவதும் உள்ள அதனுடைய ஆயிரக்கனக்கான உறுப்பினர்களுக்கு அது சாத்தியமில்லை. ஒன்பதுக்கு மேற்பட்ட நகரங்களினூடாக நடத்திய பிரயானத்தில் மக்களிடையே கலந்துரையாடியதிலிருந்து அரசியல்/வர்க்க இலாபங்களுக்கு இரையானவர்களுக்காகவும் பொருளாதார ரீதியிலும் அரசியல்ரீதியிலும் புறக்கணிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக ஒன்றிணைந்துப் போராடியதே சிமிக்கு மக்கள் மத்தியில் இவ்வவு மதிப்பையும் அங்கீகாரத்தையும் தேடிக்கொடுத்தது என்பதைப் புரிந்துக் கொள்ள முடிந்தது.

 

முஸ்லிம்கள், "நிராசைப்படுவதிலிருந்தும் இரைகளாவதிலிருந்தும் மீள்வதற்கு, குர் ஆனை அடிப்படையாகக் கொண்டு, உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டுதான் இருக்கவேண்டும்" என சிமி முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்தது.

 

திறமையுள்ள, தேவையுடைய மாணவர்களுக்கு சிமி உதவித்தொகைகள் வழங்கியது. மதசார்பற்ற பாடசாலைகளில் படிக்கும் நடுத்தரவர்க்க முஸ்லிம் மானவர்களுக்காக சிமி கோடைகால வகுப்புகள் நடத்தியது. எல்லா நாட்களிலும் திருக்குர் ஆனிலிருந்து ஒரு புதிய விஷயத்தை ஆய்வுக்காக எடுத்து விவாதம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது. 12 நாட்கள் நீண்டு நிற்கும் இந்த வொர்க்ஷாப்பில் தெய்வ வசனங்கள் குறித்த க்விஸ் போட்டிகள் போன்றவையும் உட்பட்டிருந்தது. நிவாரண உதவிகளுக்கான கேம்ப்களையும் சிமி நடத்தியிருந்தது. 2001 ஜனவரி 26 அன்று குஜராத் மாநிலம் கச்சில் ஏற்பட்ட பூகம்பத்தில் நிவாரண உதவி செயல்பாடுகளில் அன்று சிமி முன்னணியில் நின்றிருந்தது. அதிகமான கல்லூரி மாணவர்கள் சிமியின் உறுப்பினர்களாக இருந்தனர். பல பத்திரிக்கை வெளியீடுகளும் சிமிக்கு இருந்தன. தடை செய்யப்படுவதற்கு முன்பு, ஹிந்தி, உர்து, ஆங்கிலம், மலையாளம், தமிழ் முதலான மொழிகளில் சிமியின் சேவைகள் இந்தியா முழுக்க பிரசுரிக்கப் பட்டிருந்த. பெரிய மாநாடுகள் நடத்துவது என்பது சிமியின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்றாக இருந்தது. குறைந்தபட்சம் 1992 வரை அனைத்தும் மற்ற மதங்களில் உள்ளவர்களும் இணைந்து பங்கெடுக்கும் நிகழ்ச்சிகளாக அவை இருந்தன.


முஸ்லிம்களின் தினசரி வாழ்க்கையில் நடைபெறும் விஷயங்களைக் குறித்து அறிவதற்கும் அதனைக் குறித்து ஆய்வு செய்து அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கான திட்டங்களைக் குறித்து கலந்தாலோசிக்கவும் சிமியின் தலைவர்கள் தொடர்ச்சியாக கிராமங்களிலும் நகரங்களிலும் பிரயாங்கள் மேற்கொன்டிருந்தனர். முஸ்லிம்களைப் பாதிக்கும் தேசிய, சர்வதேச விஷயங்களையும் அவர்கள் இது போன்ற சந்தர்ப்பங்களில் சர்ச்சை செய்திருந்தனர். தடை செய்யப்பட்ட நேரத்தில் உத்தரபிரதேசம், மஹாராஷ்டிரா, கேரளம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் போன் இடங்களில் 16 மாநில சமிதிகள் செயல்பட்டுக் கொண்டிருந்தன. இருப்பினும், ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த காகா என்பவர் எழுதிய முடிவே இல்லாத 'விசாரணை' கதை போல் அநியாயமான, துக்ககரமான சிமி விசாரணை இன்னும நீ.......ண்டு கொண்டே செல்கிறது.

 

(முடிந்தது)

 

குறிப்பு : இந்தத் ஆய்வுத் தொடரை டெஹல்கா இதழில் எழுதிய அஜித் ஸாஹியின் செவ்வி அடுத்து இடம் பெறவிருக்கிறது, இன்ஷா அல்லாஹ்.

 

 

முந்தைய பகுதிகள்:


பாகம்-1 வாழ்க்கைகளைக் கசக்கி எறியும் வழக்குகள்!
பாகம்-2 "பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறு!" என்ற நாஸி தந்திரம்!

பாகம்-3 உஸாமா பின் லாடன், அல்காயிதா, ஹமாஸ்!

பாகம்-4 குற்றத்தை ஏற்றுக் கொள்ளும் (செல்லாத) ஒப்புதல் வாக்குமூலங்கள்!

பாகம்-5 ஆதாரங்கள் உள்ளன; ஆனால் தரமாட்டோம்!

பாகம்-6 காவல்துறையும் அரசாங்கமும் ஷாஹித் பத்ர் ஃபலாஹிக்கு எதிராக...

பாகம்-7 ஓர் உச்சநீதிமன்ற நீதிபதி பொய்த்திரை கிழித்த வேளையில்...

பாகம்-8 (இறுதி) இருப்பினும் விசாரணை தொடர்கிறது!

Trackback(0)
கருத்துக்கள் (0)add comment

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:156 (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்" என்று கூறுவார்கள்.

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு தொகுப்பு தொடர்கள் ஆய்வு சிமி-டெஹல்கா அறிக்கை - பாகம் 8 (இறுதி)
Twitter
RSS
YouTube
English