| சுவையான பகோடா! |
|
|
| அறுசுவை - அறுசுவை | |||||||||||||||||||||||||||||||||||||||
| சனி, 15 நவம்பர் 2008 10:25 | |||||||||||||||||||||||||||||||||||||||
|
முன்னேற்பாடுகள்:
1. முட்டை கோஸ், வெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் அளவாக அரிந்துக்கொள்ளவும். 2. பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். 3 கருவேப்பிலை, கொத்த மல்லி இலை இரண்டையும் கழுவி ஆய்ந்து நறுக்கிக் கொள்ளவும்.
செய்முறை:
கோஸ், வெங்காயம், மைதா மாவு, அரிசி மாவு, சோள மாவு, சோயா சாஸ், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, உப்பு அனைத்தையும் நீர் விடாமல் பிசைந்து கலவையை ஐந்திலிருந்து பத்து நிமிடம் வரை ஊற வைக்கவும்.
பின்னர் வாணலில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கலவையை கிள்ளி போட்டு பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான மொறு மொறு பகோடா ரெடி.
கோஸ் சாப்பிட பிடிக்காத பெரியவர்களும் சிறுவர்களும் இந்தப் பகோடாவை விரும்பி சாப்பிடுவார்கள். நாம் சொல்லாதவரை இது கோஸ் பகோடா என யாருக்கும் தெரியாது.
பகோடா கொடுத்தவர்: உம்மு ஷமீம்
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (2)
![]() கருத்து எழுதுக :
|
|||||||||||||||||||||||||||||||||||||||