| வெடிகுண்டுகளின் பிறப்பிடம் ஆர்.எஸ்.எஸ்! |
|
|
| செய்திகள் - இந்தியச் செய்திகள் | |||
| செவ்வாய், 11 நவம்பர் 2008 13:03 | |||
வெடிகுண்டு தயாரிக்கும் வேளையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட அசம்பாவிதத்தில் குண்டு வெடித்து இரு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பலியாகினர். ஆர்.எஸ்.எஸ்ஸின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள கூத்துபறம்பு, செறுவாஞ்சேரியில் உள்ள அத்தியரக்கா என்ற இடத்தில் ஆர்.எஸ்.எஸ் தினசரி பயிற்சி செய்யும்் ஒரு கோவிலின் பின்பக்கம் நேற்று காலை 7 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. ஆர்.எஸ்.எஸ் மணடல செயற்குழு உறுப்பினர்களான ப்ரதீபன்(38), திலி என்ற திலீப்(35) ஆகிய இருவரும் இச்சம்பவத்தில் பலியாகினர். இதில் ப்ரதீபன், அஸ்னா என்ற பெண் குழந்தையைக் குண்டுவீசி கொலை செய்ய முயன்ற வழக்கில் முக்கியக் குற்றவாளியாவார். Dim lights Embed Embed this video on your site இதற்கிடையில் திருவிழாவிற்காகக் கொண்டு வந்த வெடிமருந்தைப் பாதுகாப்பாக வைப்பதற்கிடையில் ஏற்பட்ட கவனக்குறைவில் வெடிமருந்து வெடித்துச் சிதறியதனாலேயே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக ஆர்.எஸ்.எஸ் - பாஜக விளக்கம் கூறியுள்ளது. ஆனால், திருவிழாவிற்குப் பயன்படுத்தும் வெடிமருந்துகள் இவ்வளவு வீரியம் வாய்ந்தவை அல்ல என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும். கடந்த இரவில் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள அந்தக் கோவிலில் உற்சவம் நடந்திருந்தது. நள்ளிரவோடு உற்சவம் முடிந்திருந்தது. அதற்குப் பின்னர், குண்டு தயாரிப்பில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ஈடுபட்ட வேளையிலேயே இச்சம்பவம் நடந்ததாகக் கருதப்படுகிறது. அப்டேட்ஸ்: சம்பவ இடத்தில் காவல்துறை நடத்திய ரெய்டில் ஒரு பெட்டி நிறைய சக்தி வாய்ந்த குண்டுகள் கைப்பற்றப்பட்டன. மேலும் பரிசோதனை தொடர்ந்து வருகிறது.
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (7)
![]()
//இதற்கிடையில் திருவிழாவிற்காகக் கொண்டு வந்த வெடிமருந்தைப் பாதுகாப்பாக வைப்பதற்கிடையில் ஏற்பட்ட கவனக்குறைவில் வெடிமருந்து வெடித்துச் சிதறியதனாலேயே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக ஆர்.எஸ்.எஸ் - பாஜக விளக்கம் கூறியுள்ளது.//
இன்று சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறை நடத்திய ரெய்டில், பெட்டி பெட்டியாக வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெய்டு தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறது.
நாட்டில் நடக்கும் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பது சிறிது சிறிதாக வெளிவர ஆரம்பித்து விட்டது.
1
November 11, 2008 18:17
// அஸ்னாவிற்கு 6 வயது. அன்று தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட அஸ்னா, தனது வலது காலை இழந்திருந்தார் //
எட்டு வருடங்கள் முடியப்போகும் நிலையில் நீதி மன்றம் தீர்ப்பு கொடுத்தாலும் கண்துடைப்பு தீர்ப்பாக தான் இருக்கும்.
இது போன்ற தீவிரவாதிகளை இந்திய காவல் துறை பாரபட்சம் இல்லாமல் அடையாளம் கண்டு பிடித்து சிறையில் அடைக்கவும்.
தொடர்ந்து ஒரு பிரிவினர் வஞ்சிக்கப்படும் பொழுது. நாட்டுக்கு ஆகுமானதான சூழல் ஒரு போதும் ஏற்பட்டதுமில்லை. கடந்த கால சம்பவம் மூலம் படிப்பினை பெறுங்கள்
மா சலாம்.
அப்துல் அசீஸ்.
2
November 11, 2008 21:17
கோயில்களையும்,பள்ளிக்கூடங்களையும் ஆயுத கூடங்களாக மாற்றி விட்ட RSS தீவிரவாதிகளை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இதுவரை நாட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்பிற்கு பின்னால் இருக்கும் இவர்களின் சதிகளை தீர விசாரித்து உண்மைகளை வெளி கொணரும் நல்ல காவல்துறை அதிகாரிகள் பாராட்டபட வேண்டியவர்கள்.
சுதந்திர தினம் மற்றும் முக்கிய தினங்களில் அங்கு குண்டு வெடிக்கும், இங்கு குண்டு வெடிக்கும் என பூச்சாண்டி காட்டும் உளவுத்துறை களை எடுக்கபட வேண்டும்.
3
November 12, 2008 18:45
(நபியே! உமது எதிரிகளான) அவர்கள் சூழ்ச்சித் திட்டத்தை வகுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நான் (ஏற்கனவே) எதிர்த் திட்டம் தீட்டி விட்டேன்.
(அல்-குர் ஆன் 86:15-16).
4
November 12, 2008 19:44
Dai Pratheeba.... Parthaya Un Nilaimaiyai!!!!!!!!!!!!!!!!!
andru Nee Oru Chirum Pinchin Uyrai Edukka Ninaithai,
Aaanal Indroo Aegan 'Allah' un uyirai Eduthu Vittan
Parthayaa Manidaa,,,,,
ALLAHU AKBAR ALLAHU AKBAR ALLAHU AKBAR.............
5
November 12, 2008 21:10
did u hear the raj news? they say them as 'rss thondargal' !?! see, if a hindu making a bomb to destroy the muslims, then he will be called as 'thondargal'. if the same 'thondu' being done by others, then they will be termed as 'bayangaravaadhigal' by these same media. 'welldone rss'. go ahead!. destroy the peace, humanity, religious tolerance, happyness, development, freedom, education, human resource, etc., etc., of our nation. u r already backedup by centrtal and state govts., police, also now by military. ya Allah! please, save my india and us from all of these terrorists. ya Allah! please, give us good political leaders who can run the govt., and rule our india bravely, brilliantly and without partiality.
6
November 13, 2008 05:09
கருத்து எழுதுக :
|