சத்தியமார்க்கம்.காம்

சிமி-டெஹல்கா அறிக்கை-பாகம்-4 print Email
தொடர்கள் - ஆய்வுக் கட்டுரைகள்
ஞாயிறு, 19 அக்டோபர் 2008 06:07

குற்றத்தை ஏற்றுக் கொள்ளும் (செல்லாத) ஒப்புதல் வாக்குமூலங்கள்!

 

காவல்துறை இழுத்துப் பூட்டி முத்திரை வைத்த சிமியின் அலுவலகங்கள், "தீவிரவாதக் குழுக்களுடனான தொடர்புகளை நிரூபிக்கக் கூடிய எண்ணிலடங்கா ஆதாரங்களின் கூடாரமாக" அல்லவா கருதப்பட வேண்டும்? வங்கிக் கணக்குகள், கையெழுத்துள்ள கடிதங்கள், தலைமையில் உள்ளவர்களின் விளக்கங்கள் உட்பட உள்ள துல்லியமான திட்டங்களுடன் கூடிய அடையாளங்கள், போலி கடவுச்சீட்டுகள் போன்ற சாதாரண நிலையில் குற்றம் சுமத்துவதற்குத் தேவையான ஏதாவது ஆதாரங்களையாவது அங்கிருந்து காவல்துறை கண்டுபிடித்ததா? ஆனால், காவல்துறை இழுத்துப் பூட்டி முத்திரை வைத்த சிமி அலுவலகங்களில் ஒன்றிலிருந்துகூட சிமிக்கு எதிராகக் கூறப் பட்டக் குற்றச்சாட்டுகளுக்கான ஒரேயோர் ஆதாரம்கூடக் கிடைக்கவில்லை.

 

முன்னாள் சிமி உறுப்பினர்கள், தங்களிடமிருந்து கைப்பற்றியப் பொருட்களின் பட்டியலைத் தரும்படி, காவல்துறையினரிடமும் அரசிடமும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இதுவரை அவை கிடைக்கவில்லை. நூற்றுக்கணக்கான வழக்குகளில் காவல்துறைக்குச் சாட்சிகளாக அக்கம்-பக்கத்தில் உள்ளவர்கள்கூட 'அகப்பட'வில்லை; வங்கிக் கணக்குகள் இல்லை; ஆதாரங்களாக எதுவுமே இல்லை. சிமிக்கு எதிரான ஒவ்வொரு வழக்கிலும் இதுதான் நிலைமை. காவல்துறைக்கு, யாரென்று அறியப்படாத ஒரு நபரிடமிருந்து, சிமி உறுப்பினர்கள் கூடிப் பேசுவது குறித்தோ சந்தேகம் கொள்ளத்தக்க நபரை ஒரு குறிப்பிட்ட இடத்தில் கண்டதைக் குறித்தோ விவரம் கிடைப்பது 'வழக்கம்'. உடனே காவல்துறை சம்பவ இடத்துக்குப் போகும்; அங்குப் பரிசோதனை நடத்தப்படும்; அங்குள்ள நபரிடமிருந்து அல்லது நபர்களிடமிருந்து "சட்டவிரோதமான" துண்டுப்பிரசுரங்களும் குறுந்தகடுகளும் கைப்பற்றப்படும்.

 

இதில் இரகசிய விவரம் கிடைத்த விவரத்தைத் தங்களின் நிலைய டயரியில் ஆதாரமாக எழுதி வைப்பது கிடையாது. ரெய்டு நடத்துவதற்கு முன்பு காவல்துறை கட்டாயம் கைவசம் வைத்திருக்க வேண்டிய சர்ச் வாரன்டை நீதிபதியிடமிருந்து பெற்று வைப்பதற்கு அவர்களுக்கு ஒரு வழக்கில் கூட நேரம் கிடைத்திருக்காது. சம்பவ இடத்திற்கு ரெய்டுக்காகச் செல்லும் பொழுது, உரிய அதிகாரிகளைக் காவல்துறைச் சாட்சிகளாக உடன் அழைத்துச் செல்லும் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு முயற்சிகூட செய்வதில்லை. ரெய்டு நடக்கும்போது அப்பகுதியில் உள்ள, நேரில் கண்ட சாட்சிகளைத் 'தயார் செய்ய'க் காவல்துறை முயன்றதையும்  முயற்சி பயனளிக்காததையும் அடையாளப்படுத்துவது கிடையாது. ஆம், கைது செய்ததற்கும் பொருட்கள் கைப்பற்றியதற்கும் அவர்கள் 'அவர்களுடைய' சாட்சிகளைக் கொண்டு வந்திருப்பர். (பல வேளைகளிலும் பல ரெய்டிலும் அவர்களே சாட்சிகளாக இருப்பர்).

 

"ரெய்டுகளில் கைப்பற்றப்படப் பொருட்களைப் பாதுகாப்பதற்காக முத்திரை செய்து அதனை மூன்றாம் நபரிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்ற சட்டத்தை சிமி விஷயத்தில் காவல்துறை அனுசரிப்பதே கிடையாது. விசாரணை அதிகாரியே 'கைப்பற்றப் பட்டப் பொருட்களை'க் காவல் நிலையத்தில் நேரடியாகக் கொண்டு செல்வதே நடைமுறை. அவர்களுக்கு, கைப்பற்றப்பட்டப் பொருட்கள் என்று கூறப்படுபவற்றைக் குளறுபடிகள் செய்ய முடியும். 2006 ஜூலையில் நடந்த புகைவண்டி குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.டி.எக்ஸ், ஜெலாட்டின் குச்சிகள், அம்மோனியம் நைரேட் போன்ற இரசாயன பொருட்கள் கைப்பற்றப்பட்டதாம். சட்டத்திற்கு உட்பட்ட விதத்தில் பரிசோதனை நடந்திருந்தால் ஒரு சாட்சியாவது ஆதாராங்களுக்குத் துணை நின்றிருக்கும்.  ஆனல், காவல்துறை செய்தவை அனைத்தும் சட்ட விரோதமாக இருந்தன. பரிசோதனை நடத்தப்பட்டதற்கான ஒரே ஆதாரம் காவல்துறை அதிகாரியின் வாக்குமூலம் மட்டுமே.

 

கைது செய்யப்பட்ட நபர் காவல்துறை கஸ்டடியில் இருப்பார். ஆனால், சில தினங்களில் அந்நபர் அதிசயிக்கத்தக்க வகையில், குற்றம் செய்து விட்டோமே என்று தனக்குள்ளே குமைந்து கொண்டிருப்பர்;  அல்லது தவறு செய்து விட்டதை உணர்ந்து அனைத்துக் குற்றங்களையும் ஏற்றுக் கொண்டு எழுதிக் கொடுத்து விடுவார். 136 ஆண்டுகளுக்கு முன்னர் பரங்கியர் தயாராக்கிய இந்தியக் குற்றவியல் சட்டம், ஒப்புதல் வாக்குமூல விஷயம் பற்றி மிகத் தெளிவாகக் கூறுகின்றது: "காவல்துறையினரிடம் கொடுக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை, குற்றம் சுமத்தப் பட்ட ஒருவருக்கு எதிரான ஆதாரமாக உயபோகப்படுத்த கூடாது".

 

2001இல் நடந்த பாராளுமன்ற தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் 2005ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அனுமதித்த அப்பீலில், காவல்துறை அதிகாரிகள் குற்றம் சுமத்தப் பட்டவர்களிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெறுவது தொடர்பான அதிகாரத்தில், குறிப்பிடத்தக்க சந்தேகம் தெரிவித்தது. ஒருபோதும் குற்றம் சுமத்தப் பட்டவர்ளைக் கட்டயப் படுத்தி ஒப்புதல் வாக்குமூலம் பெறக் கூடாது; மாறாக, அது வெளிப்படையாக, தன் விருப்பத்திற்குத் தருவதாக இருக்க வேண்டும். அநேக வழக்குகளில் காவல்துறை சமர்ப்பித்த சிமி உறுப்பினர்களின் ஒப்புதல் வாக்குமூலங்கள் அனைத்தும் கள்ளத்தனமாக உருவாக்கப்பட்டவை. அதற்கு ஆதாரம், காவல்துறையால் குற்றம் சுமத்தப் பட்ட பல சிமி உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் குற்றத்தை ஏற்றுக் கொண்டு, ஒரே நாளில், ஒரேமாதிரி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர் என்பதாகும்! இதில் மிகவும் ஆச்சரியகரமானது, எல்லா ஒப்புதல் வாக்குமூலங்களும் ஒரே வாசகங்களை உள்ளடக்கியது என்பதாகும்! நீதிபதியின் முன்னிலையில் ஆஜராகும் நேரம், குற்றம் சுமத்தப் பட்டவர்கள் ஒப்புதல் வாக்குமூலத்தை நிராகரித்து விடுவார்கள்; அல்லது குறிப்பிட்ட இடத்தில் கையொப்பமிடக் காவல்துறை தங்களைக் கட்டாயப் படுத்தியது என உண்மையைப் போட்டு உடைத்து விடுவார்கள்.

 

இதுவே, "அதிபயங்கரமான தீவிரவாதச் செயல்பாடுகளில் பங்குள்ள சிமி"யின் விவகாரத்தில் அரசின் பக்கமுள்ள தகர்க்க முடியாத(!) ஆதாரங்களின் நிலையாகும். தடை நீக்கப்பட்ட உடனேயே மத்திய அரசு வழக்கம்போல் அப்பீல் செய்த போதும் தில்லி உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கோதா மித்தல் தலைமை வகிக்கும் ட்ரிப்யூனல், 2008 ஆகஸ்ட் 5 அன்று சிமியின் மீதான மத்திய அரசின் தடையினை நீக்கியது, சிமி உறுப்பினர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

தொடரும் இன்ஷா அல்லாஹ்!

 

பிற பகுதிகள்:

வாழ்க்கைகளைக் கசக்கி எறியும் வழக்குகள்! (சிமி-டெஹல்கா அறிக்கை-பாகம்-1)

"பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறு!" என்ற நாஸி தந்திரம்! (சிமி-டெஹல்கா அறிக்கை-பாகம்-2)

உஸாமா பின் லாடன், அல்காயிதா, ஹமாஸ்! (சிமி-டெஹல்கா அறிக்கை-பாகம்-3)

Trackback(0)
கருத்துக்கள் (0)add comment

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:156 (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்" என்று கூறுவார்கள்.

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு தொகுப்பு தொடர்கள் ஆய்வு சிமி-டெஹல்கா அறிக்கை-பாகம்-4
Twitter
RSS
YouTube
English