| இந்தியா டுடே'யின் பயங்கரவாதம்! |
|
|
| பொதுவானவை - பொதுவானவை |
| சனி, 04 அக்டோபர் 2008 09:23 |
|
இவ்வளவு அழும்பாய் கிடக்கும் இந்தத் துறையில் பார்ப்பனர்களும் பனியாக்களும் கைகோத்தால் என்ன நடக்கும்? 5 வயது குழந்தை குண்டு வைத்திருந்தது என்று செய்தி வெளியிட்டு அக்குழந்தையை தீவிரவாதியாக்கி, தூக்கில் போட பக்கம் பக்கமாய் எழுதுவார்கள். அதிலும் இந்து பயங்கரவாத 'இந்தியா டுடே' பற்றி சொல்லவே வேண்டாம்.
தொடர்ந்து முஸ்லிம்களை தீவிரவாதிகளாகக் கட்டமைப்பதில் அதன் பங்கு, இந்திய உளவுத்துறையைக் காட்டிலும் 'மகத்தானது'. அந்த 'மகத்தான சேவை'யின் இன்னொரு சாதனைதான் 'சுரணையற்ற இந்தியா' என்று தலைப்பிடப்பட்டுள்ள (ஆகஸ்டு 13) தமிழ் 'இந்தியா டுடே'. இதே கட்டுரைக்கு ஆங்கில 'இந்தியா டுடே' வைத்துள்ள தலைப்பு 'ஆண்மையற்ற இந்தியா'.
இவ்வாறு தொடர்ந்து 'முஸ்லிம் எதிர்ப்பு பத்திரிகை இயக்கத்தை' நடத்தி வரும் 'இந்தியா டுடே'யின் 'சுரணையற்ற இந்தியா'வைக் கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க சென்னை 'இந்தியா டுடே' அலுவலகம் எதிரில் 13.8.2008 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தினர். நன்றி: தலித்முரசு, ஆகஸ்ட் 2008 கருத்துக்கள் (6)
![]() எழுதியவர்: abdul azeez , October 04, 2008 20:07 இவர்கள் பத்திரிக்கை வைத்துள்ளதே ! பிற கொள்கை சமூக மக்களை இழிவு படுத்துவதற்காகவும். முஸ்லிம்களின் உணர்வுகளை புன்படுத்துவதர்க்காகவும். மட்டும் தான் அல்லாமல் வேற எதற்கும் கிடையாது. வழக்கொழிந்த இவர்களின் மதகோட்பாடுகளை எந்த அடிப்படையிலும். மேல்தூகிவைக்கமுடியாது.சமூக சீர்கேடுகளையும், விபசாரத்தையும் ஊக்குவிக்க இவர்களுக்கு நிறைய பக்கங்கள் இருக்கும். சினிமாவின் போதனைப்படி. தன் நம்பிக்கைக்கு உட்பட்டதையும் எடுத்தெழுத முடியாது அதுவும் இதே தான் ஊக்குவிக்கிறது. இவர்களின் கண்களுக்கு சங்கபரிவாரங்கள் கிறிஸ்துவ ஆலயங்கள் உடைப்பு, இன்னும் ஏராள நஷ்டத்தை சிறுபான்மையினர்க்கு பொருளாதார ரீதியிலும், உயிர்சேதத்திலும் இழப்பை கொடுக்கும் இவர்கள் சார்ந்தவர்கள் அனைவரையும் இந்தியா டுடே போன்ற பத்திரிக்கை பேனாவிற்கு தேச தியாகிகளாக படுவார்கள் காரணம் தன் மதத்தை சார்ந்தவர்கள் என்ற நிமித்தம். மா சலாம். அப்துல் அசீஸ். எழுதியவர்: எஸ்.அன்பு , October 05, 2008 06:21 இந்தியா டுடே போன்ற ஊடகங்களில் தொடர்ந்து வெளிவரும் உண்மைக்கு மாறான செய்திகள் பொது மக்களிடத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. உலக ரீதியாக பரவி இருக்கும் தீவிரவாதம், அமெரிக்க வல்லரசின் சட்டாம்பிள்ளைத்தனம், ஆயுத உற்பத்தி, இம்மாதிரியான சூழலில் இந்தியாவும் தப்பவில்லை எரிகின்ற தீயில் எண்ணெய் வார்த்தது போல முஸ்லீம் இளைஞர்களை அந்நியப்படுத்தும் செயலும் வெகு சுலபமாக அவர்களைச் சில தீவிரவாத அமைப்புகளின் பசிக்கு இரையாக்கிக் கொண்டிருக்கிறது. சமீப காலங்களில் இந்தியாவில் நடக்கும் தீவிரவாத தாக்குதல் பற்றிய செய்திகளுக்கு ஊடகங்கள் தரும் செய்தியே அதற்குச் சான்று. வெடி மருந்துகளுடன் லாரி - தமிழகத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதி, என்பது செய்தி, ஆனால் உண்மை நிலை அறிந்த பின் எந்த ஊடகங்களும் மறுப்புச் செய்தி வெளியிட்டதாக தெரியவில்லை. ஒரு பொய்யை ஊர் கூடிச் சொல்லும் போது அது உண்மைதானோ என்ற என்ற எண்ணம் ஏற்படுவதால் ' ஊடகங்களின் செய்தியை அப்படியே சந்தேகமின்றி நம்பிவிடுகிறோம். பொதுமக்கள் என்ன பாவம் செய்தார்கள்? ஏன் இவர்கள் எங்களைத் தாக்குகிறார்கள்? என்று எழுப்பப்படும் கேள்வியை சிலர் தங்களுக்கு மிக சாதகமாக்கிக் கொள்கிறார்கள். அதனால் தான் இந்துக்களிடம் 'முஸ்லீம்களுக்கு இந்த தண்டனை தேவைதான்' என்று நினைக்கும் போக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது. யாரும் தீவிரவாதிகளாகப் பிறப்பதில்லை, நாம்தான் அவர்களைத் தீவிரவாதிகளாக்குகிறோம். மதம், இனம், மொழி, மண் சார்ந்து எவரையும் தீவிரவாதிகளாக அடையாளம் காட்டுவது தீவிரவாதத்தை வளர்க்குமே தவிர கட்டுப்படுத்தாது. உண்மைகளைக் கண்டறியவும் மனித உறவுகளைப் பேணவும் ஊடகங்கள் தரும் செய்திகளுக்கு மதிப்பளிக்காமல் அதற்கு அப்பால் நாம் பயணிக்க வேண்டும் என்பது தான் இப்போது உள்ள நிலை. எழுதியவர்: அப்துல்லாஹ் M , October 05, 2008 09:36 அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர்களே // யாரும் தீவிரவாதிகளாகப் பிறப்பதில்லை, நாம்தான் அவர்களைத் தீவிரவாதிகளாக்குகிறோம். மதம், இனம், மொழி, மண் சார்ந்து எவரையும் தீவிரவாதிகளாக அடையாளம் காட்டுவது தீவிரவாதத்தை வளர்க்குமே தவிர கட்டுப்படுத்தாது. உண்மைகளைக் கண்டறியவும் மனித உறவுகளைப் பேணவும் ஊடகங்கள் தரும் செய்திகளுக்கு மதிப்பளிக்காமல் அதற்கு அப்பால் நாம் பயணிக்க வேண்டும் என்பது தான் இப்போது உள்ள நிலை.// மிகவும் சரியான கருத்து...... ஊடகங்கள் உண்மையைப் பற்றி அக்கரையின்றி தமது உள் நோக்கமும் வயிரும் நிறைய வேண்டும் எனில் போக்கில் செயல்படுகின்றன என்பதை நியாயவான்கள் உணர்ந்து, பொய்களையும் விறுவிறுப்பான செய்திகளையும் காசாக்கிடும் பத்திரிக்கை (அ)தர்மம் தலை விரித்தாடுகின்றது. இதற்கு ஆர்வக்கோளாரினால் அப்பாவிகளாகவும் ஆதரவளித்து விடாமல், புறக்கணித்திடவும் தமது எதிர்ப்பை வெளிபடுத்திடாத வரையும் இது போன்ற மீடியாக்களின் வெட்கமற்ற தன்மைக்கு முற்றி புள்ளி வைக்க இயலாது. இதற்கு நடுநிலையாளர்கள் முன் வர வேண்டும் என்பதும் காலத்தின் கட்டாயமான ஒரு கடமை. இந்த கடமையுணர்வை இந்தியர்கள் இன்றும் என்றும், உணர்ந்து உண்மையான இன்றைய இந்தியாவினை ( இந்தியா டுடே) மாசு படுத்திடும் இது போன்ற தீய சக்திகளின் முகமுடியை கிழித்து களைந்து உலகத்திற்கும் பாடம் புகட்டிட அனைத்து கருத்து வேறுபாடுகளையும் புறந்தள்ளி மனிதம் ஓங்கி சுமூகம் வளர்ந்திட வேண்டி முன் வர வேண்டும்.... இல்லையேல் இவற்றிற்கு நிச்சயம் இறைவனிடம் கணக்கு சொல்ல வேண்டி வரும் என்பதை மட்டும் நினைவூட்டுகின்றேன். எழுதியவர்: பிறைந்திபுரத்தான் , October 06, 2008 08:50 இந்தியா டுடே - ‘ஹிந்துத்வா டுடே’வாக மாறிவிட்டது போலிருக்கிறது. வாழ்க பத்திரிக்கை தர்மம்.. எழுதியவர்: Irai Adiyan , October 06, 2008 12:19 India Today ediraga valakku thodara vendum. Podumakkalukku vilakkum siriya vasagam aanal valuvana vasagam poster namadu kandanangalaiyum therivikka vendum ade nerathil podu makkalukku unmai nilai puriyavum vendum. Adu pondru seidaal podu makkalukku puriyum endru nambuhiren கருத்து எழுதுக :
|