| மாலேகோன் பள்ளிவாசலுக்கருகில் குண்டு வெடிப்பு! |
|
|
| செய்திகள் - இந்தியச் செய்திகள் |
| வெள்ளி, 03 அக்டோபர் 2008 17:01 |
கடந்த 29.09.2008 இரவில் மாலேகோன் பிக்குச் சவ்க் நூரானி மஸ்ஜிதில் அமைதியாகத் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களின் நிம்மதியை மட்டுமின்றி வரப்போகும் பெருநாள் மகிழ்வையும் குலைத்துப் போட்டது அந்தப் பேரோசை.பிக்குச் சவ்க் மார்கெட் பகுதியில் கடை வைத்திருக்கும் அப்துல்லாஹ் ஜமாலுத்தீன் அன்ஸாரீ என்பவரின் கடைக்கு எதிரில் யாருமில்லாது ஒரு மோட்டார் சைக்கிள் வெகுநேரம் நிறுத்தப் பட்டிருந்தது. அந்த அனாமோதய பைக் பற்றி மார்கெட் பகுதி காவல்நிலையத்தில் தம் கடைக்கு எதிரிலுள்ள ஓட்டல் சிப்பந்தி மூலம் அன்ஸாரீ எச்சரிக்கை தகவல் தந்தார். காவல்துறை கண்டு கொள்ளவில்லை. விளைவு?
டில்லி, அகமதாபாத் குண்டுவெடிப்புகளுக்கு ஊடகங்கள் வழங்கிய முக்கியத்துவத்தில் ஒரு 5 சதவீதம் கூட மாலேகோன் சம்பவத்துக்கு வழங்கவில்லை. தமிழக ஊடகங்கள் உட்பட தேசிய ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்ட இந்த மாலேகோன் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடம் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் பகுதி என்பதும் இறந்தவர்களும் காயமடைந்தவர்களும் முஸ்லிம்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.
எந்த ஒரு குண்டுவெடிப்பு நிகழ்வின் பொழுதும் சம்பவம் நடந்த 5 நிமிடங்களுக்குள்ளாகவே குண்டு வைத்தவர்களைக் குறித்து ஏதாவது ஒரு இல்லாத இயக்கத்தின் பெயரைக் கூறி முஸ்லிம்களின் மீது கட்டிவைத்து, குண்டுவெடிப்புகளின் மூலகர்த்தாக்கள் அனைவரையுமே கண்டறிந்து விட்டது போல் கதைகளைப் பரப்பும் காவல்துறையும் அவை கூறுவதை அப்படியே வரி பிசகாமல் வாந்தி எடுக்கும், சுயசிந்தனையற்ற ஊடகங்களும் இந்தக் குண்டுவெடிப்பைக் குறித்து மூச்சு விடாதது ஏன்?. வெடித்த இடமும் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்பதாலா?.
முன்னர் ஒருமுறை இதே மாலேகோன் பகுதியில் ஒரு வெள்ளிக்கிழமையன்று தொழுகை நேரத்தில் பள்ளிவாசலில் குண்டு வைக்கப்பட்டது. அன்றைய குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் ஒட்டுதாடி வைக்கப்பட்டிருந்த மர்ம நபர் ஒருவர் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டிருந்தது. இருப்பினும் இன்று வரை அந்தக் குண்டுவெடிப்பின் பின்னணியில் செயல்பட்டவர்கள் யார் என்பதைக் காவல்துறை கண்டறியவில்லை.
ஒட்டுதாடிகளையும் முஸ்லிம்கள் அணியும் தொப்பிகளையும் பஜ்ரங்தளின் வெடிகுண்டு நிர்மாணசாலையில் இருந்து முன்னர் காவல்துறை கைப்பற்றியுள்ளது. மேலும், நாட்டில் பல்வேறு பாகங்களிலிருந்தும் சங்பரிவார் வீடுகள், தொழிற்சாலைகளில் வெடிகுண்டு தயாரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. தென்காசி, மும்பை போன்ற இடங்களில் குண்டு வைத்து அதனை முஸ்லிம்கள் மீது திசைதிருப்பி விட்ட சங்கபரிவாரத்தினரின் செயல்பாடுகளும் ஆதாரங்களுடன் கண்டறியப்பட்டுள்ளது.
மும்பை, கேரளா உட்பட சமீபத்தில் கர்நாடகா பாஜக தலைவரின் ஷாப்பிங் காம்ப்ளக்ஸிலிருந்து வரை வண்டி, வண்டியாக வெடிகுண்டுகளைக் காவல்துறை கைப்பற்றியிருப்பினும் நாட்டில் பல்வேறு அசம்பாவிதங்களையும் கலவரங்களையும் திட்டமிட்டு நடத்துபவர்கள் சங்பரிவாரங்களே என்பது தெள்ளத்தெளிவாக தெரியும் நிலையிலும் காவல்துறையினரின் விசாரணைகளில் அவற்றின் செயல்பாடுகள் கண்காணிப்பு வரம்பிற்குள் கொண்டு வராமல் இருப்பதும் பிரபல தேசிய ஊடகங்கள் உட்பட எந்த ஒரு பத்திரிக்கையும் அவற்றின் மீது சந்தேக கண்ணோட்டத்தைச் செலுத்தாமல் இருப்பதும் மிகுந்த ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் எழுப்புகின்றது. கருத்துக்கள் (0)
![]() கருத்து எழுதுக :
|