சத்தியமார்க்கம்.காம்

தினமலருக்கு நான்காவது (நீதியின்) அடி! print Email
செய்திகள் - தமிழகச் செய்திகள்
சனி, 20 செப்டம்பர் 2008 20:44

தினமலருக்கு நான்காவது நீதியின் அடிமுஸ்லிம்களுடைய உயிரினும் மேலான தலைவரும் இறைத்தூதருமான நபிகள் நாயகத்தை இழிவு செய்யும் வகையில் தினமலர் கார்ட்டூன் வெளியிட்டதும் அதற்காக முஸ்லிம்கள் தங்களது எதிர்ப்புகளைப் பல வழிகளில் தெரிவித்துக் கொண்டிருப்பதும் தெரிந்ததே.


அவற்றுள் 'மனித நீதிப் பாசறை' அமைப்பினர் சட்ட ரீதியான எதிர்ப்புகளைக் காட்டி, அல்லாஹ்வின் அருளால் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர். தினமலர் பத்திரிகைக்கு எதிராகப் பல்வேறுபட்ட வழக்குகளை மனித நீதிப் பாசறை அமைப்பினர் தொடுத்து, வழக்கில் தாங்கள் குறுக்கீடு செய்து வாதாடும் உரிமை கோரி இருந்தனர்.



கடந்த 05.09.2008இல் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் மனித நீதிப் பாசறை அமைப்பினர் குறுக்கீடு செய்து வாதாடலாம் என்ற உத்தரவுடன் அடுத்தடுத்து 10,12,15 ஆகிய தேதிகளுக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.



கடந்த 15.09.2008இல் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் "தினமலர் பத்திரிகை இந்தப் புனித ரமழான் மாதத்தில் இது போன்ற பிரச்சினைக்குரிய கேலிச்சித்திரங்களை வெளியிட்டதானது இஸ்லாமியர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தி மதக் கலவரத்தைத் தூண்டக் கூடிய நடவடிக்கை என்றும் ஆகவே இவ்வழக்கில் தொடர்புடைய தினமலர் நிர்வாகிகளைக் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அவர்களுக்கு முன்ஜாமின் வழங்க கூடாதென்றும் மனித நீதிப் பாசறையின் வழக்கறிஞர் திரு. சங்கர சுப்பு வாதாடினார்.



மனித நீதிப் பாசறையினர் தொடுத்துள்ள வழக்குகளில் தங்களைக் கைது செய்யாமலிருக்க தினமலர் பத்திரிகையின் நிர்வாகிகளான ஆர்.வேங்கடபதி, ஆர். ராகவன், ஆர்.த்தியமூர்த்தி ஆகியோர் சென்னை உயர் நீதி மன்றத்தில் முன்னதாக மனுச் செய்திருந்தனர்.



வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.ரகுபதி, "ஊடகத்துறைக்கு வழங்கப் பட்டுள்ள எழுத்துச் சுதந்திரம் என்பது பொதுமக்களுள் ஒரு சாராரின் உணர்வுகளைச் சீண்டிப் பார்ப்பதற்கும் ஒற்றுமையாக வாழ்பவர்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்துவதற்கும் வழங்கப் பட்டிருக்கும் லைஸென்ஸ் அல்ல.  மனித வரலாற்றில் பெரும் ஆளுமையுடைய ஒருவரைக் குறித்து செய்தி வெளியிடப் படும்போது உச்சமான எச்சரிக்கையோடு பரிசீலித்து வெளியிட வேண்டும். இல்லையேல் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கக் கூடிய பின்விளைவுகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது" என்று தனது தீர்ப்பைத் தொடங்கி, allowing such practice would affect national integrity and imperil the constitutional aspirations... என முடித்தார்.



தினமலர் நிர்வாகிகளுக்கு முன் ஜாமீன் கொடுக்கக் கூடாது என்ற நியாயமான தீர்ப்புக்கு மட்டுமின்றி "The freedom given to the press should not be treated as a licence to denigrate the feelings of a section of the people and to divide communities for sleazy gains" என்ற ஆணித்தரமான கருத்துகளுக்காவும் நீதிபதி ரகுபதி பாராட்டுக்குரியவராவார்.


அக்கருத்து, இனிவரும் காலத்தில் சிறுபான்மையினரது மத உணர்வுகளோடு விளையாட நினைக்கும் எழுத்து வன்முறை முயற்சிகளுக்கு அணைபோட்டுத் தடுக்கும்.


*****

ஓமன் நாட்டில் தினமலர் இணையத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


*****

தமிழகத்தில் தினமலர் ஆசிரியரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Trackback(0)
கருத்துக்கள் (31)add comment
0
மஸ்தூக்கா:
அல்ஹம்துலில்லாஹ். எல்லாப்புகழும் இறைவனுக்கே. இனி தொடர்ந்து ஒவ்வொரு அடிகளாக தினமலருக்கு விழுந்துக் கொண்டே இருக்கும். சமூகத்தில் தினமலர் அடியோடு புறக்கணிக்கப்பட்டு இறுதியாக 'நிறுத்தப்பட்டது' என்னும் கடைசி செய்தி வரும் நாள் எந்நாளோ அந்நாள் தான் தமிழ் ஊடகத்திற்கு ஒரு நந்நாள்.
1

September 21, 2008 01:53
0
உம்மு ஹிபா:
அல்லாஹு அக்பர் ரப்பனா! ......அன்த மௌலானா, ஃபன்சுர்னா அலல் கௌமில் காஃபிரீன்.
2

September 21, 2008 06:30
0
m.abdul azeez:
alhamdulillah.a good deed of judge ment.
3

September 21, 2008 07:46
0
Rafique uthuman:
With the help Allah Almighty, we are awaiting for the continuation.but we should not stop our steps to take against this paper.Please, I request all our friends don't excuse.continue your work.
4

September 21, 2008 08:09
0
basheer ahamed:
Allahu Akbar, We have to continue our strong beats on Dinamalam... There is a one more web site they have... http://epaper.dinamalar.com...
5

September 21, 2008 12:14
0
Abu Hasan:
brother basheer, As we all know, dinamalar website is being banned officially at all over countries by tamil people. This occurrence itself is a great 'SHAME on a tamil newspaper', as no newspaper had been banned so far in such manner at several countries. the above said URL can not be available on-line at those countries where dinamalar is blocked. Dinamalar might take this humiliation in to easy obsession, but Insha Allah, The resistence from tamilians, regardless of religion all over the world will continue to hoist until this biased media bow down to earth.
6

September 21, 2008 17:01
0
அல் அமீன்:
இந்திய இறையாண்மைக்கு சர்வதேச அளவில் சங்கபரிவாரம் எவ்வாறு இழுக்கைத் தேடித் தருகின்றதோ அதற்குச் சற்றும் குறைவில்லாமல், தமிழனின் தன்மானத்திற்குச் சர்வதேச அளவில் தினமலம் தனது கேவலச் செயலால் இழுக்கு ஏற்படுத்தி விட்டது. தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்தவேண்டிய மலமே தான் இது.
7

September 21, 2008 21:55
0
SIRAJ MOHAMED:
Allahu Akbar & Alhamdhulillah Well. We have almost banned the dinamalar website in gulf countires. But what is the case of dinamalr paper edition which is sold at these countries? What step we are making to ban this. If so far not done any thing, plesae take step immediately. Kindly clarify to our society.
8

September 22, 2008 05:08
0
ahamed:
mashaallah epaper.dinamalar.com also banned
9

September 22, 2008 09:12
0
hasan basari (koothanallur):
ondru pattaal undu waazhwu idhu pazha mozhi .. muslimgal ondru pattaal dina malathukku end wazhwu- idhu pudhu mozhi
10

September 23, 2008 05:46
0
இந்துதமிழன்:
தினமலர் மன்னிப்புத் தெரிவித்த பின்னும் தினமலரை ஒழிக்க நினைக்கிறீர்கள். உங்களால் தினமலரை ஒழிக்க முடியாது. ஒரு பதிப்பில் ஒரு இணைப்பில் யாரோ செய்த தவற்றுக்கு யார் யாரையோ பழிவாங்க, தண்டிக்க நினைக்கிறீர்கள். இது தவறு.
11

September 24, 2008 11:58
0
siddiq:
dinamalar all the time do like this then they ask apologize, How they can publise in the first day of Ramadan, they have real intention to harm, this is not the first time they have done lot in the past
12

September 24, 2008 16:48
0
Abu Hasan:
இந்துதமிழன் என்ற பெயரில் கருத்திட்டிருக்கும் அன்பருக்கு, //தினமலர் மன்னிப்புத் தெரிவித்த பின்னும்// தவறு. அது மன்னிப்பல்ல வருத்தம். இரண்டுக்கும் பெருத்த வித்தியாசம் உண்டு. //ஒரு பதிப்பில் ஒரு இணைப்பில்...// மீண்டும் தவறு. அது ஒரு பதிப்பிலோ ஒரு இணைப்பிலோ அல்ல. இங்குள்ள செய்திகளை சில நிமிடங்கள் செலவழித்து வாசியுங்கள். 'தவறு(?)'கள் நடந்தது எத்தனை பதிப்புகளில் என்று விளங்கும். //யார் யாரையோ பழிவாங்க, தண்டிக்க நினைக்கிறீர்கள்// மீண்டும் தவறு. ஒரு சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மதவெறியினை பல வருடங்களாகப் பரப்பிவரும் தினமலர் ஒன்றினை மட்டும் எதிர்க்கிறார்கள் முஸ்லிம்கள். நீங்கள் கருத்திட்டுள்ள ஒரு சில வரிகளில் உள்ள தவறுகளை புரிந்து கொண்டிருப்பீர்கள். மத வெறியினைத் தூண்டும் தினமலரை நீங்களும் புறக்கணிக்க அழைக்கிறேன்.
13

September 24, 2008 17:05
0
மஸ்தூக்கா:
அன்புச் சகோதாரர் இந்துத் தமிழன் அவர்களே! தினமலரில் இது அறியாமல் நடந்த தவறு அல்ல. இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்துவதே தொன்று தொட்டு அவர்களின் வழக்கமாக இருந்துள்ளது. தினமலரைத் தாங்கள் தொடர்ந்து படித்திருந்தால் தங்களுக்கு புரியும். கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத, ஏற்கனவே ஒரு பத்திரிக்கையில் வெளிவந்து உலக அளவில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்திய ஒரு படத்தைப் போடவேண்டிய அவசியம் என்ன வந்தது?. 'யாரோ செய்த தவறுக்கு' என்று தாங்கள் அதற்கு சப்பைக்ட்டு கட்டியுள்ளீர்கள். ஒரு பத்திரிகையில் ஒரு படமோ அல்லது செய்தியோ வெளியிடுவதென்றால் ஆசிரியரின் அனுமதி இல்லாமல் எப்படி வெளியிட முடியும்? அப்படியே வெளியிட்டாலும் அதற்கு பத்திரிகை நிர்வாகம் தானே பொறுப்பேற்க வேண்டும். உலகின் பல்கோடி மக்கள் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் ஒரு தலைவரை இழிவு படுத்துவது என்பது சாதாரண தவறா? தாங்கள் வெறும் இந்து தமிழனாக இருப்பதை விட ஒரு நல்ல, நடுநிலை தவறாத இந்து தமிழனாக இருங்கள். தமிழ்கூறு நல்லுலகம் உங்களை வாழ்த்தும்.
14

September 24, 2008 17:33
0
அபூ ஃபாஹிம்:
இந்து தமிழரே, முஸ்லிம்கள் தரப்பில் நியாயம் இருப்பதால்தானே நீதிமன்றம் தின-மலர் வெளியீட்டாளர்களுக்கு ஜாமீன் மறுத்திருக்கிறது.உங்கள் கூற்றுப்படி நீதிமன்றம் கூட தப்பு செய்து விட்டதோ!
15

September 24, 2008 18:24
0
முஸ்லிம் இந்தியன்:
ஓழிப்பது, அழிப்பது, எரிப்பது எங்கள் பழக்கம் அல்ல நோக்கமும் அல்ல. அமைதியான முறையில் எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கின்றோம். எதிர்ப்பு பலமாக இருக்க காரணம், பாதிப்பின் ஆழமே. பாதிப்பின் ஆழம் : புனித மாதமாம் ரமளானின் முதல் நாளில், எங்களின் உயிரின் மேலான இறைத்தூதரின் கார்ட்டூனை (ஏற்கனவே உலக அளவில் முஸ்லீம்களை மிகவும் பாதித்த, மிகவும் வன்மையாக உலக அளவில் கண்டிக்க பட்ட) பிரசுரித்தது. வேலுரில் அமைதியக போரட்டம் நடத்திய இசுலாமிய சகோதரர்கள் மீது தடியடி நடத்தி இரத்தம் சொட்ட வைதது. அதுவும் ரமளான் முதல் நாளில். இது இரன்டும் எஙகளின் இதயத்தில் ஆழமான வலியை ஏற்படுத்தியதின் விளைவே இந்த அமைதி போராட்டம். தாயின் அருமை சொந்த பிள்ளைகளுக்குத்தான் தெரியும், எங்கள் இறைத்தூதரின் மதிப்பும் மரியாதையும் எஙகளுக்குத்தன் தெரியும். உடலில் ஓர் இடத்தில் அடிபட்டால் அதன் வழி அந்த உடலுக்குத்தான் தெரியும், எங்கள் சகோதரர்கள் வாங்கிய அடியின் வலி எங்களுக்குத்தான் தெரியும். இது யாரோ செய்த தவறல்ல, தினமலர் வேண்டும் என்றே செய்த சதி. ஒரு பத்திரிக்கை வெளியவதற்கு முன் Proof Reading, Editor Review, PRO verification ஆகியவை முடிந்த பிறகு பொறுப்பாசிரியர் அனுமதி இல்லமல் எந்த செய்தியும் வெளியாகது. தவறு என்றால் பொறுப்பாசிரியர் முன் ஜாமீன் வாங்கியது ஏன்? யாரையும் தண்டிக்க எங்ளுக்கு உரிமை கிடையது, தண்டிப்பவன் இறைவன் ஒருவனே......... நாங்கள் கலவரம் செய்யவில்லை, தீ வைக்கவில்லை, பிறர் சொத்தை நாசப்படுத்தவில்லை. அமைதியான முறையில் எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கின்றோம். அதன் வழிகளில் இதுவும் ஒன்று. தினமலரின் முஸ்லிம் விரோத போக்கை, சிறுபான்மையினரை பிரிக்கும் நச்சுத்தன்மையை, வார்த்தை ஜாலங்களால் சிறுபான்மயினரின் மனதை புண்படுத்துவதை பட்டியலிட வேண்டுமென்றால் பக்கங்கள் போதாது. இது ஒரு நாளில் தொடங்கிய போராட்டம் அல்ல. இத்துணை நாட்கள் எங்கள் மனதில் அடக்கி வைக்கப்பட்டு இருந்த ஒடுக்கப்பட்டோரின் மனக்குமுறலின் வெளிப்பாடு. பத்திரிக்கை சுதந்திரம் பற்றி பேசுவோர், தினமலருக்காக வக்காலத்து வாங்குவோர், தங்கள் தாய், தமக்கையரின் முறையற்ற படங்கள் இது போல் பத்திரிக்கைகளில் வெளியானால் மிகவும் அமைதியான முறையில் அறிவுரை சொல்வார்களா???? 'If dinamalar have the rights to express their view, so do we have the rights to boycott and protest?'
16

September 24, 2008 20:44
0
மும்பைத் (முஸ்லிம் & இந்து) தமிழன்:
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர் இந்து தமிழன் அவர்களே ஒரு விஷயத்தை (தமது கருத்து படி) மத அடிப்படியில் அணுகுவதின் மூலம் சரி காண்பதை விட அதன் பாதிப்பின் அடிப்படையில் அதை சரியோ தவறோ என்று கருதப்படவும் கண்டிக்கப்பட வேண்டும். மேலும் தின மலரின் இச்செயல் ஒரு மதத்தை சார்ந்த உயிரினும் மேலாக முஸ்லிம்கள் மதிக்கும் ஒரு இறைத்தூதரை இழிவாக சித்திரித்து மிகப் பெரும் பிரச்சினையை உலக அளவில் சந்தித்த படத்தை மறு பதிப்பு செய்வது என்பதை கவனத்தில் கொள்ளவும். அன்புடன் மும்பைகர் (பிறந்த இடத்தின் அடிப்படையில்) முஸ்லிம் ( ஏக இறை கொள்கை அடிப்படையில்) இந்து ( பூகோள அடிப்படையில்) தமிழன் ( தாய் மொழியின் அடிப்படையில்)
17

September 24, 2008 21:02
0
மஸ்தூக்கா:
அன்புச் சகோதரர் மும்பைத் தமிழன் அவர்களே! பிறப்பின் அடிப்படையிலும், கொள்கை அடிப்டையிலும், தாய்மொழி அடிப்படையிலும் தாங்கள் சூட்டிக் கொண்டுள்ள பெயர்களை வரவேற்கிறோம். ஆனால் பூகோள் அடிப்படையில் தாங்கள் சூட்டிக் கொண்டுள்ள பெயர் இந்து என்பதை விட இந்தியன் என்று இருக்க வேண்டும். இந்து என்னும் வார்ததை ஒரு குறிப்பிட்ட கொள்கையுடையவர்கள் தாங்கள் பின்பற்றும் மதத்தின் அடையாளமாக அப்பெயரைக் கொண்டுள்ளனர். மனித நேய அடிப்படையில் அப்பெயர் கொண்டுள்ள அச்சகோதரர்களை நாம் மதிக்க வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை அச்சகோதரர்களை மதிக்கும் விதத்திலாவது நாம் அப்பெயரைத் தவிர்த்து பூகோள அடிப்டையில் (தேச அடிப்டையில்) இந்தியன் என்ற தாங்கள் பெயர் சூட்டிக் கொள்ளலாமே.
18

September 25, 2008 00:10
0
abdul azeez:
இந்து தமிழன் போன்று. பல பேர் மேல்மட்டமாக இப்படி ஒரு கேள்வி கேட்ப்பார்கள் காரணம் தலைப்பு செய்தி, பேங்க் ரேட், அரசியல், சினிமா போன்றவை பார்த்தால் ஒரு பேப்பர் படித்து முடித்துவிட்டதாக நினைத்து போட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். ஆனால் பிறர் சமூக கோட்பாடுகள் குறித்தும், அவர்கள் பற்றுதல் குறித்தும், அவர்கள் சார்ந்த தூதர் குறித்தும் பத்திரிக்கை ஆசிரியர் அவ்வப்போது குத்தி காட்டுவது இவர்கள் பார்க்கமாட்டார்கள். கானல் தத்துவங்களை அடிப்படையாக கொண்டு ஆயிரக்கணக்கான சிலைகளை வழிப்படுபவற்றில் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று விக்ரகங்கள் என்று பழித்தோ, கிண்டல் செய்தோ பெரும்பான்மை மக்களுக்காக ஒரு கிளுகிளுப்பு ஊட்டி மகிழுந்து பார்க்கட்டுமே !அப்பொழுது உங்கள் உணர்வு அடக்கி பொறுமையை காத்து பழகிக்கொண்டு. பிறகு மன்னிப்பு பற்றி பேசவாருங்கள் அதுவரை அடக்கிக்கொண்டு இருங்கள்.பத்திரிக்கை ஆசிரியரா இருப்பவன் கொள்கை கோட்ப்பாடு கண்ணாடி வீட்டை விட படு மோசமான சிலந்தி வீடாக இருக்கும் பட்சத்தில் ஊதினால் காணாமல் போய்விடும் நிலைமையில் பிறர் கொள்கை குறித்து பேசலாமா ??? முதலில் தற்(சமயம்) யோசி & விமர்சி. அப்துல் அசீஸ்.
19

September 25, 2008 03:51
0
Ashik:
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அனைத்தையும் அறிந்தவன் 'அவன்'... இஸ்லாமிய மக்களை பாதுகாப்பவனும் 'அவனே'...
20

September 25, 2008 08:48
0
எஸ்.அன்பு:
நண்பர்களே, தமிழகத்தில் எத்தனையோ தினசரிகள் இருப்பினும் தினமலருக்கென்று தனி இடம் இருந்தது எல்லாம் முன்னொரு காலத்தில், தற்போது தினமலர் எல்லாம் 'அவாள்கள்' பத்திரிக்கை ஆகி விட்டது. அவாள்கள் தன்மை பற்றி நான் சொல்வதை விட, தந்தை பெரியார் 23.04.1957 ல் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஸ்டேட்மெண்ட்.. வாயில்-நாக்கில் குற்றம் இருந்தால் ஒழிய வேம்பு இனிக்காது, தேன் கசக்காது, பிறவியில் மாறுதல் இருந்தால் ஒழிய புலி புல்லைத் தின்னாது, ஆடு மனிதனைத் தின்னாது. அது போலத் தான் நமது 'பார்பனர் தன்மை'.
21

September 25, 2008 09:08
0
அபூ ஃபாஹிம்:
//தமிழகத்தில் தினமலர் ஆசிரியரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. / அன்பு சகோதரர்களே கைது செய்யப்பட்டார்களா இல்லையா போன்ற மேலதிக தகவல்கல்களை அறியத்தாருங்கள்.
22

October 07, 2008 08:09
0
farveen raj:
Appreciatable judgement for tamil muslims.
23

October 08, 2008 20:04
0
nizhamuddin:
This dinamalar should be banned as like oman in all gulf countries.
24

October 12, 2008 22:23
0
mohamed:
in uae, now the ban on dinamalr website is cleared. 1 week only it was banned, after we can access it asusual
25

November 23, 2008 16:12
0
HABEEB RAHMAN:
இஸ்லாமிய விரோத செய்திகளுக்கு முக்கியத்துவம் தரும் இந்த பேப்பர்காரன் ஓடஓட ஒரு நாள் உதைப்பட போகிறான். இன்ஷாஅல்லாஹ் இது நடந்தே தீரும்.
26

June 18, 2010 16:46
0
ராஜா:
தினமலர் அல்ல தினமலம்

பாசிஸ வெறி பிடித்த மத வெறியை தூண்டும் தினமலத்தை புறக்கணிப்போம்,
27

July 13, 2010 15:21
0
mujibur rahman:
vanakkam indu tamilan "avarkalukku...muhammad nabi avargal saritiratai padikkumaaru thaalmaiyudan kehduk kolkiren
28

December 21, 2010 18:26
0
Siddiqi:
உணர்ச்சி வசப்படாமல், தினமலர் தோலை உரித்து காயப் போட்டிருக்கிறீர்கள்.

அன்னை ஃபாத்திமா (ரலி) செய்தியை தினமலர் திரித்து வெளியிட்டதற்கு உங்கள் கண்டனச் செய்தி எங்குள்ளது? லிங்க் கொடுங்கள்.

http://4.bp.blogspot.com/-8Xe4qRRwLfU/Tt_M0EjZSsI/AAAAAAAAAzY/l3kD8inYfK0/s1600/290727_178458618916087_100002558493042_308631_899364326_o.jpg
29

December 12, 2011 13:41
0
thahira w/o sadham:
hai assalsamu alaikkum allah is knowing of all .this .com is very useful to homely muslims masha allah.....
30

December 17, 2011 11:11
0
thahira w/o sadham:
allah is a true of god
31

December 17, 2011 11:12

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:106 ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?

புதிய கருத்துகள்

M.S.K : SISTER KHATIJA PLS SEE THE LINK BELOW AS REQUIRED http://www.satyamargam.com/1324


Peer Mohamed : Alaikkum wassalam, Jazakhallah Khair. InshaAllah each article posted will have a reference its so...


martin : சரியான் ஆட்டுக்கூட்டம்!


imran kareem : அல்லாஹ்வின் திருபெயரால்,, இக்கட்டுரை...


akbar : '' வந்தது வசந்தம்'''' ரபீவுல் அவ்வல் மாத...


Kathija : இதனுடைய அடுத்த பகுதி இன்னும் வரவில்லையா? வந்திருந்தால் அதற்கான லிங்க் கொடுக்கவும்


abdul : good to all


mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.



You are here  : முகப்பு செய்திகள் தமிழக செய்திகள் தினமலருக்கு நான்காவது (நீதியின்) அடி!
Twitter
RSS
YouTube
English